சோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்

சோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சிட்டி முதல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பாடகர் அந்தோனி தாசன். அவரின் சினிமாப் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களும் எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப் பட்டு வருகின்றன. சொடக்குப் போடும் நேரத்தில் தன் கிராமியக் குரலால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தக் கூடிய அந்தோனி தாசன் சோனி மியூசிக் நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்டாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தோனி தாசனின் நாட்டுப்புறப் பாடல்களை சோனி நிறுவனம் தரமான முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்து வருகிறது. மேலும் தற்போது ஒரு புது முயற்சியை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சோனி மியூசிக் நிறுவனமும் அந்தோனி தாசனும் எடுத்திருக்கிறார்கள். திருமணவிழா, மற்றும் குடும்ப விழாக்களில் யாரும் எதிர்பாராத விதமாக அந்தோனிதாசன் மற்றும் அவரது டீம் உள்ளே சென்று ஒரு மினி கச்சேரியையே நடத்தும் சுவாரஸ்யமான முயற்சி அது. திருமணவிழா மற்றும் குடும்ப விழாக்களில் யாருக்கும் தெரியாமல் யாரிடமும் தகவல் சொல்லாமல் எதார்த்தமாகச் சென்று அந்தோனி தாசன் பாட்டுப் பாடுவார் கூடவே அவரது வாத்தியக்குழுவும் நாதஸ்வரம் மேளம் போன்றவற்றை இசைக்கும்.

இதை முதல்முறையாக சென்னையில் திருமணவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் அரேங்கேற்றினார்கள். அந்தோனி தாசன் மற்றும் அவரது வாத்தியக் குழு எதார்த்தமாக செல்வது போல சென்று வாத்தியம் இசைத்து பாட்டுப்பாடியதும், ஒரு திருமணவிழாவின் மணமக்கள் உள்பட அங்கிருந்த அனைத்து மக்களும் நெகிழ்ந்து போனார்கள். பேட்ட படத்தில் இடம்பெற்ற ஆஹா கல்யாணம், பாடலையும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல பாடலையும் அந்தோனி தாசன் பாட திருமணவிழா மிகப்பெரும் திருவிழா போல கொண்டாட்டமானது. முக்கியமாக திரைப்படப் பாடல்களோடு நாட்டுப்புறப்பாடல்களையும் அந்தோனி தாசன் பாடினார். நாட்டுப்புறப்பாடல்களை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அந்தத் திருமணவிழாவில் வந்திருந்த விருந்தினர்களின் மகிழ்ச்சியில் காண முடிந்தது. திருமணவிழாவில் ஒரு பெரிய பாடகர் யாரும் எதிர்பாராத விதமாக வந்து பாடுவது திருமண வீட்டார் உள்பட அங்கிருக்கும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும். சென்னையில் நடைபெற்ற திருமணவிழாக்கள் மற்றும் குடும்ப விழாவில் மக்களின் அந்தப் பேரின்ப அதிர்ச்சியை கண்கூடாக காண முடிந்தது. அந்த மணமக்களுக்கு காலமெல்லாம் இது ஒரு மறக்க முடியாத சந்தோஷ அனுபவமாக இருக்கும். மேலும் இந்தத் திடீர் மினி கச்சேரி மூலமாக எல்லாத்தரப்பு மக்களிடமும் நாட்டுப்புறப் பாடல்கள் சென்றடையும். திருமண விழாவிலும் குடும்ப விழாவிலும் பாடி முடித்ததும் அந்தோனிதாசனை மக்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

இப்படியொரு புது முயற்சியை எடுத்திருப்பது குறித்து சோனி மியூசிக் நிறுவனத்தின் தமிழக நிர்வாகி அசோக் பர்வானி கூறியதாவது,

“அந்தோணி தாசன் மாதிரியான திறமையான பாடகர் எங்கள் சோனி நிறுவனத்தோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எங்கள் குழுவின் நோக்கம். அந்தோனி தாசன் மூலமாக ஒரு கலையை அதன் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ளபடியே சோனி மியூசிக் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது” என்றார்.

இதுகுறித்து அந்தோனி தாசன் கூறியதாவது,

“நம் மண்ணோட பாடல்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான முயற்சியாக சோனி நிறுவனத்தோடு இணைந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்றார்.

‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)‘ராதாகிருஷ்ணன் பார்த்திபன்’ என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்’ மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால் பல சமயங்களில் கொண்டு சென்றிருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து மற்றும் உச்சநிலை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பலரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்துக் கொண்டிருந்த போதிலும், அவர் தனியொரு மனிதராகவே தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். பல்துறை வித்தகரான அவர் “ஒத்த செருப்பு சைஸ் 7″ என்ற அவரது முத்திரை பதிக்கப்பட்ட படத்தின் மூலம் நம்மை கவர்ந்திழுக்கிறார். தவறாமல் பார்த்து விட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்க மிகவும் தகுதியான படமாக மாறியிருக்கிறது.

எழுத்தாளர் – இயக்குனர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறும்போது, “நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கை சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். சமரசம் செய்வதன் மூலம், ஸ்கிரிப்ட் அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். ஒத்த செருப்பு சைஸ் 7 கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்கு தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் செயல்முறைகள் உள்ளன, ஒன்று தணிக்கை குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை அவர்களிடம் முன்வைக்க ஒரு மாணவரை போல ஆர்வமாக காத்திருக்கிறேன், விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்” என்றார்.

இந்த படம் அதன் ‘ஒற்றை கதாபாத்திரம்’ காரணிக்காக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும், ஆனால் பார்த்திபனின் கூற்றுப்படி, அதில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் இங்கே ஒரு கதாபாத்திரம் தான். சந்தோஷ் நாராயணனின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலி, அமரனின் கலை அமைப்பு, மற்றும் சுதர்சனின் படத்தொகுப்பு ஆகியவை ஒவ்வொன்றும் கதாபாத்திரங்களாகவே வெளிப்படுத்தப்படும். இந்த ஒரு ‘ஒற்றை கதாபாத்திரம்’ கான்செப்டை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவில் சில படங்கள் வந்துள்ளன. அதன் வெற்றிகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அதற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் ஒரு அற்புதமான தொழில்நுட்பக் குழுவையே சாரும். படத்தின் இறுதி வடிவத்தை நான் காணும்போது, நிச்சயமாக அது எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு பதிப்பாக அமைந்திருக்கிறது” என்றார்.

ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த திருநங்கை ஜீவா

ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த திருநங்கை ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான படம் ‘தர்மதுரை’.

இப்படத்தில் விஜய்சேதுபதியின் க்ளினிக்கில் நடித்தவர் திருநங்கை ஜீவா.

அவர் ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளதை இயக்குனர் சீனு ராமசாமி தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில்.. “தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று, இன்று சூப்பர் ஸ்டார் தியானி ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கை ஜீவாவிற்கு வாழ்த்துக்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு திருநங்கை ஜீவா, “நன்றி சார், எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை சார்” என பதிலளித்துள்ளார்.

கமலின் பிக்பாஸ் வீட்டில் ரஜினி ஓவியத்தை அகற்றியதால் சர்ச்சை

கமலின் பிக்பாஸ் வீட்டில் ரஜினி ஓவியத்தை அகற்றியதால் சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta New Posterகமல் நடத்தி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை இந்த வீட்டில் அனுமதித்தனர். அப்போது ‘பிக் பாஸ் 3’ வீட்டில் ‘பேட்ட’ ரஜினிகாந்த் ஓவியம் இருந்தது.

ஆனால் நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரஜினி ஓவியம் இடம் பெறவில்லை.

இதற்கு ரஜினி ரசிகர்கள் அதற்கு அவர்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘பேட்ட’ படத்தில் ரஜினி புகைபிடித்தபடி இருந்த ஓவியம் ஒன்றுதான் பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டதாகவும் அந்த புகைப்பிடிக்கும் ஓவியத்தை வைக்க எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘பேட்ட’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெறவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் ஒருவேளை கமல் நீக்க சொல்லியிருப்பாரோ? எனவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லாரிகளில் தண்ணீர்; சிட்லபாக்கம் ஏரி சுத்தம்..; அசத்தும் ரஜினி ரசிகர்கள்

லாரிகளில் தண்ணீர்; சிட்லபாக்கம் ஏரி சுத்தம்..; அசத்தும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார். எனவே தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஏராளமான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போது சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு இலவசமாக லாரிகளில் குடி தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்த செய்திகளை நாம் பார்த்தோம்.

இந்த நிலையில், தர்மபுரி உள்ளிட்டசில மாவட்டங்களில் வீடுகள் தோறும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து கொடுத்துள்ளனர்.

மேலும் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சிட்லப்பாக்கம் ஏரியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சுத்தம் செய்து தூர்வாறும் வேலைளை தொடங்கியுள்ளனர்.

இந்த பகுதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சென்றுபார்வையிட்டு ரஜினி ரசிகர்களை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த நற்செயலை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

திரும்ப தொட்டா சரியா வராது… கரகாட்டக்காரன் 2 பற்றி ராமராஜன்

திரும்ப தொட்டா சரியா வராது… கரகாட்டக்காரன் 2 பற்றி ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற படம் ‘கரகாட்டக்காரன்’.

இதன் படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக இயக்குனர் கங்கை அமரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் ராமராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது…

பொதுவா, இந்த ‘பார்ட் டூ’ல எனக்கு உடன்பாடு கிடையாது.

கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார்.

ஆனால், அதில் உடன்பாடு இல்லை. சில வி‌ஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டா சரியா வராது.

முருகனோட அறுபடை வீடு இருக்குன்னா, பழநி, திருச்செந்தூர்னு வேற வேற பெயர்லதான் இருக்கு. ஏன், ‘பழநி 1’, ‘பழநி 2’னு அது இல்லைன்னு யோசிக்கணும். அதுமாதிரிதான் இதுவும்.’. இவ்வாறு ராமராஜன் கூறியுள்ளார்.

More Articles
Follows