தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார்? என்று கேட்டால் அனிருத்தின் பெயரை நிச்சயம் சொல்லலாம்.
இளைஞர்களின் பல்ஸ் அறிந்து பாடுவதிலும் இவர் வல்லவர்.
எத்தனையோ பாடல்களை இவர் பாடியிருந்தாலும், இவரின் இசையில் இவருக்கு பிடித்த பாடல் ‘எனக்கென்ன யாரும் இல்லையே..’ என்ற பாடல்தான்.
இந்நிலையில் இன்று சற்றுமுன் சென்னையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்களை சந்தித்தார்.
அப்போது அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது…
“என்னுடைய முன்னாள் கேர்ள் பிரண்டை ஒரு நாள் வேறொரு பையனுடன் சந்தித்தேன்.
உடனே வீடு சென்று, ‘ஊதுங்கடா சங்கு’ என்ற பாடலை கம்போஸ் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
இப்பாடல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம் பெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Anirudh reveals why he sung the song ‘Oodhungada Sungu’ for Dhanush