தனுஷின் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலை அனிருத் பாட காரணமான ‘பெண்’

தனுஷின் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலை அனிருத் பாட காரணமான ‘பெண்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Anirudhஇன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார்? என்று கேட்டால் அனிருத்தின் பெயரை நிச்சயம் சொல்லலாம்.

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து பாடுவதிலும் இவர் வல்லவர்.

எத்தனையோ பாடல்களை இவர் பாடியிருந்தாலும், இவரின் இசையில் இவருக்கு பிடித்த பாடல் ‘எனக்கென்ன யாரும் இல்லையே..’ என்ற பாடல்தான்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் சென்னையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்களை சந்தித்தார்.

அப்போது அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது…

“என்னுடைய முன்னாள் கேர்ள் பிரண்டை ஒரு நாள் வேறொரு பையனுடன் சந்தித்தேன்.

உடனே வீடு சென்று, ‘ஊதுங்கடா சங்கு’ என்ற பாடலை கம்போஸ் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

இப்பாடல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம் பெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Anirudh reveals why he sung the song ‘Oodhungada Sungu’ for Dhanush

கௌதம் மேனன் சொல்லப்போகும் அந்த 12வது மனிதர் யார்.?

கௌதம் மேனன் சொல்லப்போகும் அந்த 12வது மனிதர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautam menonதமிழ் சினிமாவில் கௌதம் மேனனுக்கு படங்களுக்கு எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

இவர் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் Breaking News and #My12thMan என்று குறிப்பிட்டுள்ளார்.

அது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளரா? அல்லது துருவ நட்சத்திரம் படம் பற்றிய தகவலா? என தெரியாமல் அனைவரும் குழம்பியுள்ளனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அதற்கான விடை அது தெரிந்துவிடும். காத்திருப்போம்.

Gautam menon going reveal his 12th Man

 

my 12

12th man

விஜய் ரசிகர்களுக்கு ‘பைரவா’ தரும் எக்ஸ்ட்ரா போனஸ்

விஜய் ரசிகர்களுக்கு ‘பைரவா’ தரும் எக்ஸ்ட்ரா போனஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayவிஜய் நடித்துள்ள பைரவா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதன் ஆடியோ லிஸ்ட்டில் இல்லாத மற்றொரு பாடலை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதுகுறித்து பாடல் ஆசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பாடல் மெலோடியாக இருக்கும் எனவும். பாடல் விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Cudnt Tnk U all individually owing 2 Innumerable msgs.It shows all ur luv 4 sir. Tnk u all  Wil post SongTitle n Details today

பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Om Puriபழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.

இத்தகவலை பிரபல தயாரிப்பாளரும், அவரது நண்பருமான அசோக் பண்டிட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்…

ஓம் புரி மறைவுக்கு நடிகர் சமூகத்துக்கும் திரை மற்றும் நாடக துறைக்கும் மாபெரும் இழப்பாகும்.

அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று நடிகர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம்புரி பற்றிய சில குறிப்புகள்…

1950-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்தார்.

புனே பிலிம் இன்ஸ்டிடி யூட்டில் படித்தார்.

இவருடன் இணைந்து படித்தவர்தான் நடிகர் நஸ்ருதீன்ஷா.

1982-ம் ஆண்டு சர்ரிச் சர்டு அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் ‘நகாரி’ என்ற கதாபாத்திரத்தில் ஓம்புரி நடித்தார்.

1982, 84-ம் ஆண்டுகளில் இருமுறை மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது, 1990ல் பத்மஸ்ரீ விருது ஏராளமான பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்.

பல ஆங்கிலப் படங்களிலும், பஞ்சாபி, உருது, மராத்தி, மலையாளம், கன்னட மொழிப்படங்களிலும் ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

1982இல் ஓம்புரி நடித்த “அர்த் சத்யா” இந்திப் படத்தைத்தான் இயக்குனர் பாலுமகேந்திரா 1993-ல் “மறுபடியும்“ என்ற பெயரில் தமிழில் படம் எடுத்தார்.

ஓம்புரி 1993-ம் ஆண்டு நந்திதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் என்ற ஒரு மகன் உள்ளார்.

2013ல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு ஓம்புரி தனியாக வசித்து வந்தார்.

Veteran actor Om Puri passes away

விஜய்யுடன் இணைவதை தவிர்க்கிறாரா ஜி.வி. பிரகாஷ்.?

விஜய்யுடன் இணைவதை தவிர்க்கிறாரா ஜி.வி. பிரகாஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay GV Prakash2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய் பைரவா ரிலீஸ் உறுதியாகிவிட்டது.

விஜய்யின் தீவிர ரசிகரான ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அண்ணன் விஜய்யுடன் இணைந்து வருகிறோம் எனவும் இப்பட விளம்பரங்களில் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக தெரிகிறது.

தற்போது அண்ணனுக்கு வழி விட்டு நாங்க அடுத்த மாசம் வரோம் என்ற வாக்கியம் புரூஸ் லீ போஸ்டருடன் இணையத்தில் வலம் வருகிறது.

ஆனால் படக்குழுவினர் இதுகுறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படத்தலைப்பு

உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanithi Manjima mohanமுன்பெல்லாம் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்கிய உதயநிதி சமீபகாலமாக ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கூட நடித்துவருகிறார்.

மேலும் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இத்துடன் கவுரவ் இயக்கும் மற்றொரு படத்தில் மஞ்சிமா மோகன் உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு இப்படை வெல்லும் அல்லது எப்படை வெல்லும்? என்று பெயர் வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி இமான் இசையமைக்க, லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

Udhayanithi and Manjima mohan starring movie title updates

More Articles
Follows