‘ரஜினி-கமலும்… தமிழக அரசியலும்…’ அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

‘ரஜினி-கமலும்… தமிழக அரசியலும்…’ அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anbumani ramadossஇன்று ரசிகர்களிடையே ரஜினி பேசிய பேச்சு அரசியல் உலகிலும் சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் பேச்சு குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மதுரையில் உள்ள பா.ம.க. மாநில துணைத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது…

தமிழ்நாட்டை சினிமாகாரர்கள் ஆட்சி செய்தது போதும்.

கமல் ஒரு தைரியமான நபர். அவர் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

ஆனால் அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி வரும் ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்கிறார்” என ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் தன் கருத்தை தெரிவித்தார்.

Anbumani Ramadoss opinion about Rajini Kamals political stands

அரசியல் உலகில் மீண்டும் ரஜினி வாய்ஸ்; தமிழிசை என்ன சொல்கிறார்.?

அரசியல் உலகில் மீண்டும் ரஜினி வாய்ஸ்; தமிழிசை என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilisai-soundararajanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினாலும் பேசாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சு எப்போதும் மீடியா உலகில் இருந்துக் கொண்டே இருக்கும்.

அதுவும் இன்று ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய பேச்சு அரசியல் உலகில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இன்று நடிகனாக இருக்கும் நான். நாளை கடவுளால் வேறு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதில் உண்மையாக இருப்பேன். நேர்மையாக செயல்படுவேன் என்றார்.

மேலும், தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், தற்போது அதுபற்றி பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

இறுதியாக நான் அரசியலுக்கு வந்தால், ரசிகர்கள் என்றாலும் அவர்களுக்கு பணத்தாசை பிடித்திருந்தால் அவர்களை நெருங்க விட மாட்டேன் என மறைமுகமாக தன் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது…

ஊழலை எதிர்ப்பதாக ரஜினி குறிப்பிட்டு இருந்தார். அவரின் நிலைப்பாடும் பாஜகவின் கருத்தும் ஒன்றுதான்.

அவரது பேச்சின்மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார்.

நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து எனவும் தமிழிசை தெரிவித்தார்.

ரஜினியின் இந்த வாய்ஸ் அரசியல் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

Tamilisai Soundararajan opinion about Rajinikanth entry into Politics

விஜய் பிறந்தநாளை தவிர்த்து மற்ற வியாழனில் ‘விவேகம்’ இசை

விஜய் பிறந்தநாளை தவிர்த்து மற்ற வியாழனில் ‘விவேகம்’ இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay 61 first look and Vivegam audio launch release date updatesஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22, வியாழக்கிழமை) வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள விவேகம் படத்தின் பாடல்களை ஜீன் மாதத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமெண்டை பார்க்கும் பட்சத்தில் ஜீன் மாதம் ஐந்து வியாழக்கிழமைகள் (1, 8, 15, 22, 29 தேதிகள்) வருகிறது.

அதில் விஜய் பிறந்தநாளை தவிர்த்து மற்ற வியாழக்கிழமைகளில் ஏதேனும் ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து அன்று வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay 61 first look and Vivegam audio launch release date updates

தனுஷ் தயாரிப்பது ரஜினியின் 161வது படமல்ல… எஸ்பி. முத்துராமன் தகவல்

தனுஷ் தயாரிப்பது ரஜினியின் 161வது படமல்ல… எஸ்பி. முத்துராமன் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanush Ranjith combo is not Thalaivar 161 movie says SP Muthuramanகடந்த நாட்களில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினி கலந்து கொண்டார்.

இதனையடுத்து விரைவில் பா. ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடர்பாக தகவல்களை பகிரும்போது இது ரஜினியின் 161வது படம் என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று ரஜினி ரசிகர்கள் போட்டோ எடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துக் கொண்ட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பேசும்போது…

அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படம் தலைவர் 164. அதில் 161வது படமல்ல.

அவர் மென்மேலும் படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

ரஜினி நடித்த 25 படங்களை இயக்கியவர் எஸ்பி முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Dhanush Ranjith combo is not Thalaivar 161 movie says SP Muthuraman

‘அந்த சூழ்நிலையில் மட்டும் முன்வைத்த காலை பின் வைப்பேன்..’ ரஜினி

‘அந்த சூழ்நிலையில் மட்டும் முன்வைத்த காலை பின் வைப்பேன்..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த சில வருடங்களாகவே ரஜினியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி 12 வருடங்களுக்கு பிறகு இன்றுமுதல் (மே 15, 2017) 5 நாட்களை வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார்.

இதற்கான நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தற்போது பேசி வருகிறார்.

அவர் பேசியதாவது…

முன்பெல்லாம் படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களாகிய உங்களை சந்திப்பேன்.

அண்மைகாலமாக அது முடியாமல் போய்விட்டது. கோச்சடையான் படம் சரியாக போகவில்லை.

கபாலி படம் நன்றாக ஓடியது. ஆனால் சில காரணங்களால், வெற்றி விழா நடத்த கூடிய சூழ்நிலை அப்போது இல்லை.

2.0 டப்பிங் பணிகள் தற்போது நடக்கிறது. வருகிற மே 28ஆம் தேதி அடுத்த படத்தின் சூட்டிங் தொடங்குகிறது.

சில நாட்களுக்கு முன்பு உங்களை சந்திக்கவிருந்தேன். அதன்பின் அது ரத்தானது.

அதன்பின்னர் இலங்கை பயணம் ரத்தானது.

உடனே ரஜினிகாந்த் எப்போதும் இப்படிதான். எந்தவொரு முடிவையும் சரியாக எடுக்க மாட்டார். மனசை மாத்திக்கிட்டே இருப்பார். பின் வாங்குவார். பயப்படுவார் என்றார்கள்.
நான் ஒரு விஷயத்தை முடிவு செய்ய நிறைய யோசிப்பேன். முடிவு எடுத்த பிறகு சில பிரச்சினைகள் வரலாம்.

ஒரு குளத்தில் காலை வைத்துவிட்டேன். அதன்பின்னர்தான் அங்கு முதலைகள் உள்ளது என்று தெரிய வந்தது.

அதற்காக முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று முரட்டு தைரியம் அங்கே கூடாது.

வைத்த காலை அந்த குளத்தில் இருந்து எடுக்கத்தான் வேண்டும்.

நம்மள பத்தி பேசுறவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க” என்றார்.

I will keep my steps backward only on critical situations says Rajinikanth in Fans meeting

‘படம் ரிலீஸின் போது பரபரப்பு ஏற்படுத்த அவசியம் எனக்கில்லை..’ ரஜினி

‘படம் ரிலீஸின் போது பரபரப்பு ஏற்படுத்த அவசியம் எனக்கில்லை..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Superstar Rajini speech at fans meeting Photo shootமே 15 ஆம் தேதி இன்றுமுதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினிகாந்த்.

இச்சந்திப்பு தற்போது ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டோ எடுப்பதற்கு முன் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது…

என் உடன் பிறவா சகோதரர். என் மற்றொரு அண்ணன் எஸ்பி முத்துராமன் அவர்களிடம் இருந்துதான் நான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன்.

அவர் இயக்கிய ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில்தான் முதன்முறையாக ஹீரோவாக நடித்தேன்.

அப்போது நான் சூட்டிங்கு லேட்டாக செல்வேன். ஒரு நாள் என்னை கூப்பிட்டு, நீ இப்போ ஹீரோ.

நீ லேட்டா வந்தால், எல்லாரும் லேட்டாக வருவார்கள். நீ முதலில் வரவேண்டும் என்றார்.

அன்றுமுதல் இன்றுவரை சூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக நான் செல்கிறேன்.

என்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் நான் பரபரப்புக்காக ஒன்றை செய்கியேன் என்கிறார்கள்.

அப்படி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
என்னுடைய ரசிகர்கள், என்னை வாழவைக்கும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

என் படத்தை நம்பி நீங்கள் வருவீர்கள். முடிந்தவரை உங்களை ஏமாற்றாமல் நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்.” என்று கூறினார் ரஜினி.

Superstar Rajini speech at fans meeting Photo shoot

More Articles
Follows