தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை என்கிற அளவுக்கு மனிதனை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது கொரோனா வைரஸ்.
இந்த வைரஸ் பரவலை தடுக்க உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
சாலைகளில் வாகனங்களில் சப்தம் இல்லாமல் இருப்பதால் பறவைகளின் அழகான கீச்சு குரல்களை கேட்க முடிகிறது.
மற்றொரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு டிவி சேனல்களும் மக்களை வீட்டிலேயே வைத்திருக்க பழைய ஹிட்டான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, குறும்படம் ஒன்றை சோனி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதில் இந்தியாவில் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர்.
அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, ரன்பீர் கபூர், சிவ ராஜ்குமார், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ள இந்த குறும்படத்திற்கு ஃபேமிலி என்று டைட்டில் வைத்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பது, உடல்நலனை பேணுவது, வீட்டிலிருந்தபடி பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி இந்தக் குறும்படம் பேசும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
இந்தக் குறும்படம் இன்று (06.04.2020) இரவு 9 மணிக்கு சோனி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
Amitabh Rajini Chiranjeevi Mammootty and Lals Family movie releasing today