தியேட்டர் ரிலீசுக்காக அக்‌ஷய்குமார் படத்தை தயாரிக்கும் பிரபல ஓடிடி தளம்

தியேட்டர் ரிலீசுக்காக அக்‌ஷய்குமார் படத்தை தயாரிக்கும் பிரபல ஓடிடி தளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AMAZON PRIME VIDEO இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது: அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது.

இப்பங்கேற்பின் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகெங்கும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான மற்றொரு படியில் Prime Video முன்னெடுத்துப் பயணிக்கிறது
கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் Prime Video தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த அதிரடி-சாகசப் படத்தை அபிஷேக் சர்மா இயக்கி டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், இந்திய சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நசரத் பருச்சா ஆகியயோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Original தொடர், Amazon Prime மியூசிக் மூலம் விளம்பரமில்லாத மியூசிக், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகளின் இலவச விரைவு விநியோகம், முன்கூட்டிய அணுகல், கவர்சிகரமான டீல்கள், Prime Reading உடன் வரம்பற்ற வாசிப்பு மற்றும் Prime Gaming உடன் மொபைல் கேமிங் உள்ளடக்கம், இவை அனைத்தையும் மாதத்திற்கு ₹129 மட்டுமே என்ற கட்டணத்தில், நம்பமுடியாத பிற மதிப்புகளோடு Amazon Prime தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

மும்பை, இந்தியா, 17-மார்ச், 2021: இந்தியாவில் தனது செயல்பாடுகளுக்கு மேலும் வலு சேர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, விரைவில் வெளிவரவுள்ள ராம் சேது இந்தி திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக, கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் Amazon Prime Video கைகோர்த்துள்ளது. அபிஷேக் சர்மா (பர்மாணு, தேரே பின் லேடன்) இயக்கத்தில் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதியை (பிருத்விராஜ் சவுகான்) க்ரியேடிவ் புரொடியூசராகக் கொண்டு வெளிவரும் இத் திரைப்படம், இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு கதையை முன்வைக்கும் ஒரு அதிரடி-சாகச நாடகமாகும்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நஸ்ரத் பருச்சா ஆகியோருடன் மேலும் பல திறமை வாய்ந்த நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியீட்டைத் தொடர்ந்து, ராம் சேது விரைவில் இந்தியாவிலும் 240-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள Prime மெம்பர்களுக்கும் காணக் கிடைக்கும்.

விஜய் சுப்பிரமணியம், டைரக்டர் & ஹெட் (கன்டென்ட்), Amazon Prime Video இந்தியா கூறுகையில்,…

“Amazon Prime Video-இல் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வாடிக்கையார்களுக்கு முன்னுரிமை என்ற கண்ணோட்டத்தில் எடுக்கப்படுகின்றன. இந்திய மண்ணில் வேரூன்றிய பல கதைகள் பெரும்பாலும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அடைந்துள்ளன.

மேலும் நமது இந்திய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்ற ஒரு திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக அறிமுகம் ஆவதன் மூலம் முன்னேற்றப் பாதையில் மேலும் ஒரு படி எடுத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் அக்ஷய் குமார் உடனான எங்கள் ஒத்துழைப்பு இன்றுவரை தனித்துவமானது மற்றும் மிகவும் வெற்றிகரமாக இருந்தது;

இந்த புதிய முயற்சி, எங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். சீரிய திறன் கொண்ட நடிகர்கள் மற்றும் வரலாற்றில் தனித்துவம் கொண்ட ஒரு கதையுடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து மகிழ்விப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்றார்.

நடிகர் அக்‌ஷய் குமார் கூறுகையில்,…

“வலிமை, துணிச்சல், அன்பு மற்றும் நமது அற்புதமான நாட்டின் தார்மீக மற்றும் சமூகப் பின்னலை உள்ளடக்கிய தனித்துவமான இந்திய சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கும் ராம் சேது திரைப்படதின் கதை எனக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.

ராம் சேது என்பது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு இடையிலான ஒரு பாலமாகும். இந்தியப் பாரம்பரியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் கதையை விளக்குவதை, குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதை நான் எதிர்நோக்குகிறேன், Amazon Prime Video-வுடன் இக்கதை எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களை அடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

Amazon Prime Video to turn Hindi film producer with Super Star Akshay Kumar’s ‘Ram Setu’

ஆண்டு வருமானம் 1000ம்னு பொய் சொல்லி அசிங்கப்பட்ட சீமான்.; மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டம்.?

ஆண்டு வருமானம் 1000ம்னு பொய் சொல்லி அசிங்கப்பட்ட சீமான்.; மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கட்சி & சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது.

முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று முதல் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டுகிறார் சீமான்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில்…

“தனக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி கூலி வேலைக்கு செல்வோர் கூட தினம் 500-1000/- வரை சம்பாதிக்கும் இந்த காலக்கட்டத்தில் ஆண்டு வருமானம் வெறும் 1000 ரூபாய் என (பெரிய பொய்யை) சீமான் குறிப்பிட்டுள்ளதால் அவரை சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேற்கண்ட செய்தியை நாம் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறும்போது…

“சீமானின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம். ஆனால், ஆயிரம் ரூபாய் என தவறுதலாக டைப் செய்யப்பட்டுள்ளது.

அதை சரி செய்து மீண்டும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.”

இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

NTK leader Seeman’s clarification on his yearly income

JUST IN ‘ரஜினி’ பெயரில் படம்.; ஹீரோ எவரு.? தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா தலைவர்.?

JUST IN ‘ரஜினி’ பெயரில் படம்.; ஹீரோ எவரு.? தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா தலைவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா வரலாற்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது.

தமிழ் சினிமாவின் மார்கெட்டை உலகளவில் கொண்டு சென்ற ஒரே நடிகர் ரஜினி என்று சொன்னால் அது மிகையல்ல.

ப்ளாக் & ஒயிட் பட காலம் தொடங்கி அனிமேசன் மோசன் கேப்சரிங் படம் வரை நடித்து இன்றும் நம்பர் 1ஆக திகழ்கிறார்.

தற்போது இவர் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்காக இவரின் சம்பளம் மட்டும் ரூ 100 கோடியை தாண்டிவிட்டது.

இந்த நிலையில் இவரின் பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது.

‘ரஜினி’ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை வெங்கடேஷ் இயக்குகிறார்.

பழனிவேல் என்பவர் தயாரிக்க அம்ரீஷ் இசையமைக்கிறார்.

விஜய் சத்யா என்பவர் நாயகனாக நடிக்கிறார். இவரை பற்றிய வேறு தகவல்கள் இல்லை. புதுமுகமாக இருக்கலாம்.

ரஜினி என்ற படத்தலைப்புடன் A Common Man என்கிற வார்த்தையும் பர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றுள்ளது.

ரஜினியை அவரது ரசிகர்கள் தலைவர் என்றே அழைக்கின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இன்று பூஜையுடன் சூட்டிங் தொடங்கியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ரஜினி என்ற பெயரில் ஒரு ஹிந்தி படம் உருவான போது ரஜினி குடும்பத்தார் அந்த தலைப்புக்கு தடை கேட்டு வழக்கு தொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A new movie title gets Super Star name ?

Rajini film

சமக 37 வேட்பாளர்கள் பட்டியல்..: நானும் ராதிகாவும் போட்டியிடவில்லை.. – சரத்குமார்

சமக 37 வேட்பாளர்கள் பட்டியல்..: நானும் ராதிகாவும் போட்டியிடவில்லை.. – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தார் சமக சரத்குமார்.

தாங்கள் கேட்ட சீட் கிடைக்காத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார்.

பின்னர், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

இந்த கூட்டணியில் சமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

பின்னர் கூட்டணியில் இணைந்த மற்றொரு கட்சியான தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்பப்பெறப்பட்டது.

இதனை அடுத்து சமக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வேட்பாளர்கள் பட்டியலில் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.

இதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது “தேர்தல் களத்தில் உள்ள சமக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க வேண்டும்.

எனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மை துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை” என்றார்.

மேலும், “அதிமுக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒருசில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றக்கூடியதாக உள்ளன.

மக்கள் உழைத்து பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். எனவே, இலவசப் பொருட்களை வழங்கவேண்டிய அவசியமில்லை” எனவும் சரத்குமார் கூறினார்.

SMK candidates list announced by Sarath Kumar

‘அண்ணாத்த’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்த வில்லன் நடிகர்

‘அண்ணாத்த’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்த வில்லன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் இப்பட சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் 8 மாதத்திற்கு பிறகு இதன் சூட்டிங் 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மீண்டும் தொடங்கியது.

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது.

அங்கு படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே சூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.

மேலும் ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் “தான் அரசியலுக்கு வரப்போவதில்லை. மன்னித்து விடுங்கள் மக்களே” என அறிக்கை விட்டார். (2020 டிசம்பர் 29)

இதையடுத்து நிறுத்தப்பட்ட சூட்டிங் சென்னையில் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி ரீலிசாக உள்ளது.

Famous villain joins Rajiniaknth’s Annatthe

Capture

ஆனந்தம் விளையாடும் வீட்டில் குடும்ப உறுப்பினரானார் வெண்பா

ஆனந்தம் விளையாடும் வீட்டில் குடும்ப உறுப்பினரானார் வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venbaகுடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள்.

கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது.

சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதில் கௌதம் கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார் வெண்பா. இவரின் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.

கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியதாவது…

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு தளத்தில், நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது.

பல வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கிறேன் எப்போதுமே அழகான குடும்ப கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன.

கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல் தான் குடும்பகதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும்.

முன்பே சொன்னதுபோல் விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

இப்படியான படங்களை ரசிகர்கள் ஒரு முறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள்.

எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களை தயாரிப்பதே ஆகும்.

அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும் நிறைந்த அழகான குடும்ப கதையினை உருவாக்கியிருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.

Actress Venba is on board for Gautham Karthik’s next film

More Articles
Follows