மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்..; பொங்கும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார்.

இதனால் அழகேசனை போலீஸார் 1 மணி நேரத்தில் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அமலாபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

கடந்த ஜனவரி 31ம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடன பயிற்சியில் ஈடுபட்ட போது அங்கு வந்த ஒருவர், என்னை அணுகி, மலேசியாவில் பிப்ரவரி 3ம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு, அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார்.

அப்படி என்ன விஷேசமான டின்னரா என நான், அவரை குறுக்கு கேள்வி கேட்டேன். அதற்கு அவர், அலட்சியமாக உனக்கு தெரியாதா? என்ற பாணியில் பேசினார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களிடம் என்னை மீட்க அழைத்தேன். என்னுடைய ஆட்கள் அவரை நோக்கி சென்றபோது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, ‘’அவளுக்கு விருப்பமில்லைனா, இல்லை’’’’னு சொல்லலாமே, இது என்ன பெரிய விஷயமா?” என்றார்.

பின்னர் அங்கிருந்து, எங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பியோட முயன்றார். அவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர் மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன. அவரை மாம்பலம் போலீசில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும், காவல் நிலையம் விரைந்து சென்றேன்.

இந்த பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சிலரை கைது செய்ய பிடி வாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளி கொண்டு வர வேண்டுகிறேன்.

ஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேலாளரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே, நான் அமைதி காத்து வருகிறேன்.

ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள், மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். இந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேலாளர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.

பிரியா வாரியரின் ஆசையை நிறைவேற்றுவாரா துல்கர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பத்து படங்களில் நடித்திருந்தாலும் கூட சில நடிகர்களை நமக்கு தெரியாது.

ஆனால் ஒரே படம் ஒரே பாடல் எல்லாருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் இந்த பிரியா வாரியர்.

Oru Adaar Love படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவே…’ என்ற ஒரு பாடலில் தன் புருவங்களை உயர்த்தி இளைஞர்களை வசியம் செய்துவிட்டார் இந்த பிரியா.

எனவே முந்திக் கொண்டு அவரிடம் மீடியாக்கள் பேட்டி எடுத்து வருகின்றன.

ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை? என கேட்டுள்ளனர்.

துல்கர் சல்மானோடு நடிக்கவேண்டும் என்பதே என் கனவு” என தெரிவித்துள்ளார்.

துல்கர் இந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா?

Oru Adaar Love fame actress Priya warrior new dream

படம் பார்ப்பேன் ஆனால் நடிக்கமாட்டேன்; சத்யராஜ் மகள் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. ஊட்டச்சத்து நிபுணரான இவர் கடந்த 7 ஆண்டுகளாக சென்னையிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டசத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திவ்யா சினிமாவில் நடிக்க இருப்பதாக சில சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திவ்யா.

அதில், ‘‘நான் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாக வெளியாகிய தகவல்களில் சிறிதும் உண்மையில்லை. நான் கடந்த 7 ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறேன்.

மேலும் ஊட்டச்சத்து பிரிவில் ‘PHD’ உயர் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். சினிமா மீது எனக்கு அதீத மரியாதை இருக்கிறது.

படங்களை பார்த்து ரசிப்பேனே தவிர படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை.

ஊட்டச்சத்து சம்பந்தமான ஒரு ஆவண படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன். ஆனால் அது படம் அல்ல!’’ என்று தன் விளக்கத்தை அளித்துள்ளார்.

பூஜைக்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ‘சீமராஜா’ என்று பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தையும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நிறுவனம் 24ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சன் டி.வி இதன் சாட்லைட் உரிமையை கைபற்றியுள்ளது.

சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை சன் டிவி கைப்பற்றியிருப்பதால் இந்த செய்தி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரு கோடியை நெருங்கும் பிரியா வாரியரின் க்யூட் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் சினிமாவை தாண்டி மிகவும் வைரலான வீடியோ ‘ஜிமிக்கி கம்மல்…’ என்ற ஆடல் பாடல் வீடியோதான்.

தற்போது மீண்டும் கேரளாவில் இருந்து மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவே…’ என்ற பாடலில் பிரியா வாரியர் காட்டிய க்யூட் முக பாவனைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அவர் தன் இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பார்வைதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ யு-டியூபில் வெளியாகிய நான்கு நாட்களில் 90 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராமில் அதிகமாக தேடப்பட்டவர் என்ற பெருமையும் பிரியா வாரியருக்கு கிடைத்துள்ளது.

ஓமர் லுலு இயக்கியுள்ள ‘தி அடார் லவ்’ படத்திற்காக இந்த பாடலை பாடியிருப்பது நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சிம்பு-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மணிரத்னம் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து 4 ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

செக்கச் சிவந்த வானம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிட்டனர்.

இப்படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை வைரமுத்து எழுத, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார்.

‘லைகா’ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ள மணிரத்னம் மொத்த சூட்டிங்கையும் சுமார் 60 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

எனவே படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.

More Articles
Follows