தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளாவில் வசிக்கும் அமலாபால் புதுச்சேரியில் வரி குறைவு என்பதற்காக தான் வாங்கிய விலை உயர்ந்த காரின் பதிவை புதுச்சேரியில் செய்திருந்தார்.
இதனால் பல சர்ச்சைகள் உருவானது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி அமைச்சர்களே தலையிட்டு அமலாபாலுக்கு ஆதரவாக பேசியிருந்தனர்.
இந்நிலையில் காரை பதிவு செய்ததில் கேரள அரசை ஏமாற்றியிருப்பதால் அவரை இன்று கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சில நிமிடங்களிலேயே அவர் பெயிலில் வெளியே வந்து விட்டார்.
தான் கைது ஆவோம் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த அமலாபால் ஏற்கெனவே முன் ஜாமீன் பெற்று இருந்தாராம்.
அமலாபால் கைதான சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.