*ஆடை*க்காக அமலா பாலுடன் இணையும் மேயாத மான் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்னகுமார்.

தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

இதில் அமலா பால் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் .

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள்.

ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான/ பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது.

“ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது.

விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Amala Paul teams up with Meyaadha Maan director Rathnakumar for AADAI

ஒரு லட்சம் நிவாரண பொருட்களுடன் கேரளா சென்ற அபிசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன.

அந்தவகையில் ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.

மக்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, மக்களை பாதிக்கும் பேரிடர் சமயமாக இருந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக காலத்தில் இறங்கி தனது பங்களிப்பை தரக்கூடியவர் தான் அபிசரவணன்..

நிவாரண பணிகளுக்காக கேரளா நோக்கி செல்லும்போதே இங்கிருந்து போகும் வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வாங்கிக்கொண்டே கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசரவணன்.

வயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சில ந(ண்)பர்கள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் அபிசரவணன்.

அந்தவகையில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் அபிசரவணன் மற்றும் அவரது குழுவினர்,

இதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது.

உள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சிறிய படகுகளின் மூலம் தங்களது நிவாரண உதவியை இவர்கள் தொடர்ந்துள்ளனர் .

இந்த முயற்சியில் அபிசரவணனுக்கு உதவியாக அகில இந்திய கிக் பாக்சிங் பிரசிடென்ட் கேசவ், திருமதி. சரண்யா மதன், ஆனந்த் மற்றும் ரகு ஆகியோர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

Abi Saravanan helping Kerala peoples for those who affected in Flood

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.

தமிழக மக்களால் அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்ட இவர் கடந்த 2016ல் டிசம்பர் மாதம் முதல்வராக இருக்கும் போது மரணமடைந்தார்.

தற்போது இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது.

83 world cup, என் டி ஆர் சுய சரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது

ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம்.

அவருடைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர்.

“டாக்டர் ஜெ ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்தி பெற்ற பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர்.உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்.திரை துறையிலும்,அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம்.

அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த படத்தை துவக்க இருக்கிறோம். அன்றே first look கூட வெளியிட இருக்கிறோம்.” என்கிறார் vibri மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார்.

இவர் அஜித் நடித்த கிரீடம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் ‘தியா’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

“எங்களது vibri நிறுவனத்துக்கு சுய சரிதைகளை படமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

இந்த கதைக்கான pre production பணிகளில் இயக்குனர் விஜய் ஈடுபட்டு வருகிறார்” என்கிறாய் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி.

தென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

Vibri media நிறுவனத்தினருக்கு இந்த வருடம் முக்கியமான வருடமாகும். பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்ப்பதோடு, 83 உலக கோப்பை என்கிற ஹிந்தி படத்தையும் கபீர் கான் இயக்கத்தில், ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடிக்க தயாரிக்கும் இந்த நிறுவனம், “என் டி ஆர் சுய சரிதை” திரைப்படத்தை பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய அனைத்து படங்களையும் 2019 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு படக்குழுவினர் உழைத்து வருகின்றனர்.

Biopic of Late Jayalalitha will be directed by Vijay

ஸ்ரீப்ரியா-அறிவழகன் பங்கேற்ற *அதித்ரி* கருத்தரித்தல் மைய தொடக்க விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தை தொடங்கியுள்ளது.

ஜூன் 27, 2018-ல் தொடங்கப்பட்ட இந்த கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கல் உள்ள தம்பதிகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. அதித்ரியின் விரிவான மருத்துவ சிகிச்சை “ அட்வான்ஸ்டு அசிஸ்டட் ரீபுரொடக்டிவ் ட்ரீட்மென்ட்டை” சென்னையில் வழங்கவிருக்கிறது.

இதை முன்னிட்டு மை கேர்ள் மை பிரைடு (My Girl My Pride) என்ற பெயரில் பில்ராத் மருத்துவமனை – அதித்ரியின் சார்பாக குழு விவாத நிகழ்ச்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த குழு விவாதமானது, பெண் குழந்தைகள் இந்த உலகில் சந்திக்கும் சவால்கள் பற்றியும் அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றியும் விவாதித்தது மட்டுமின்றி, அந்த இலக்கை நோக்கி முன்னேற அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பற்றியும் ஆலோசித்தது.

மை கேர்ள் மை பிரைடு குழு விவாதத்தில் கலந்து கொண்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஏற்றமிகு சிந்தனைகளின் மூலம் இந்த விவாதத்திற்கு வலிமை சேர்த்தனர்.

அதன் மூலம் இனி வரும் தலைமுறைக்கு, மாற்றத்திற்கான விதையையும் அவர்கள் விதைத்தனர். பெண்களுக்கான பாதுகாப்பு, பொருளாதார ஏற்றதாழ்வு, எண்ணற்ற பணிச்சுமைகளை அவர்கள் கையாளும் விதம், அவர்களுக்குள்ள பொருளாதார அனுகூலங்கள் ஆகியவற்றை பற்றியும் இந்த விவாதத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், டாக்டர். கல்பனா ராஜேஷ், சிஇஓ, பில்ராத் ஹாஸ்பிடல்ஸ் லிட்., பேசியதாவது, “பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமவுரிமைக்கும் நாங்கள் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

இன்னும் எத்தனை வருடங்களுக்கு பெண்களின் முன்னேற்றத்தைப்பற்றி நாம் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கப்போகிறோம்? அவர்கள் முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் மாற்றங்கள் அனைத்தையும் இப்போதிலிருந்தே செய்ய வேண்டும்.

நாம் இந்த தலைமுறையிலேயே பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூகத்தின் அவலங்களை நிறுத்த வேண்டும்” என்றார்.

அதித்ரி – குழந்தையின்மைக்கான பல்வேறு காரணிகளுக்கான ஒரே தீர்வாக இருக்கும். பில்ராத் மருத்துவமனை இப்போது மருத்துவத்துறையில் உள்ள மிக சமீபத்திய தொழில்நுட்பங்களையும் அதற்குத் தேவையான வல்லுனர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த வல்லுனர்களும் தொழில்நுட்பமும் இந்த மக்களுக்குத் தேவையான மகப்பேறு பிரச்சனை சம்பந்தமான அனைத்து விதமான தீர்வுகளையும் குறைந்த விலையிலேயே கொடுக்க முடியும்.

பில்ராத் மருத்துவமனைகள் பற்றி:

பில்ராத் மருத்துவமனை, அமரர்.டாக்டர். V. ஜெகன்னாதன் அவர்களால்,30 நவம்பர், 1990-ல் தொடங்கப்பட்டது.அவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மீதான கரிசனம், வெளிப்படையான அணுகுமுறை, தொழில் நெறிமுறை மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் மருத்துவத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இதனாலேயே தென்னிந்தியாவின் மிகமுக்கிய மருத்துவமனையாக பில்ராத் விளங்குகிறது.

பில்ராத் மருத்துவமனை குழுமத்தின் தலைவராக இருந்ததோடு, நாட்டின் முன்னனி இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவராகவும், லேசர் மற்றும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணராகவும் அவர் விளங்கினார்.

2007-ம் ஆண்டு, டாக்டர்.V. ஜெகன்னாதன் அவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக, அவரது மகன் டாக்டர்.ராஜேஷ் ஜெகன்னாதன், பில்ராத் மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தினார்.

புற்றுநோயியல், இருதயநோய் மருத்துவம், நரம்பியல், தீவிர சிகிச்சைப்பிரிவு, எலும்பியல் மற்றும் எலும்பு மாற்று சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை ஆகியவற்றை அறிமுகப்படுத்தி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தரமான சிகிச்சை அளிக்கும் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியுள்ளார்.

விவாதக்குழு உறுப்பினர்கள் பற்றி:

பவானி தேவி – வாள்வீச்சு சாம்பியன்: ஃபென்சிங் எனப்படும் வாள் வீச்சு விளையாட்டில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட போட்டி ஒன்றில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் இவர்.

தனது 11-வது வயதில் ஃபென்சிங் பயிற்சியைத் தொடங்கிய இவர், இண்டர்நேஷனல் ஃபென்சிங் ஃபெடரேஷனின் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 36-வது இடத்தில் உள்ளார். 2009-ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த ஜூனியர் காமன்வெல்த் போட்டிகள், சர்வதேச தாய்லாந்து ஓப்பன், 2012-ல் ஜெர்ஸி(UK)-ல் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

2014-ல் இத்தாலியில் நடந்த டுஸ்கானி கோப்பையில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப் U-23 பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். 2015-ல் நடந்த தேசிய விளயாட்டுப் போட்டியில் ஜூனியர் சீனியர் ஆகிய இருபிரிவுகளிலும் வென்றுள்ளார்.

இந்த சாதனைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல், 2017-ல் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சாட்டிலைட் உலகக்கோப்பையில் தங்கம் வென்றார். தற்போது இவர், சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில், எம்பிஏ படித்து வருகிறார்.

அறிவழகன் வெங்கடாசலம்: திரைப்பட இயக்குனர் அறிவழகன், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சிறிது காலம் பணியாற்றிய பின்னர், ஈரம், வல்லினம் மற்றும் குற்றம் 23 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஸ்ரீப்ரியா, திரைப்பட நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீப்ரியா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

டாக்டர்.V.ரஞ்சினி, எம்.பி.பி.எஸ். டிஜிஓ – குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் மற்றும் மகளிர் நல மருத்துவர் ஆவார். இத்துறையில் 23 வருட அனுபவமிக்கவர். குழந்தைப்பேறு இல்லாத எத்தனையோ தம்பதிகள் இவரது சீரிய மருத்துவ சிகிச்சையின் மூலம், தாய் தந்தையர் ஆகியிருக்கின்றனர்

கீர்த்தி ஜெயகுமார் – செயற்பாட்டாளர், ஓவியர், சமூக தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர்: பாலின சமவுரிமைக்கான ரெட் எலிஃபன்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர். பென்ணிய ஈ-பப்ளிஷிங் நிறுவனமான ஃபைன்பிரிண்ட்டும் (fynePRINT) இவரால் தொடங்கப்பட்டதே. பாலின சமவுரிமைக்கான இளைஞர் பாசறையான UNIANYD-ல் இவர் உறுப்பினராக உள்ளார்.

இதுவரை இரண்டு நாவல்களை எழுதியுள்ள இவர், பாலின வேறுபாட்டினால் வன்முறைக்குள்ளானோருக்கு உதவும் வகையில் “Sahas” என்னும் செயலியை உருவாக்கியுள்ளார்.

மிஷெல் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடத்திய யுனைடட் ஸ்டேட் ஆஃப் வுமன் சம்மிட்டுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டார். பராக் ஒபாமாவின் டவுன் ஹால், டெட் எக்ஸ் சென்னை, சென்னை எகனாமிக் டைம்ஸ் வுமன் சம்மிட் -2018, யுஎன்வி பார்ட்னர்ஷிப் ஃபோரம் ஆகிய நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். 2012-ல் யுஎஸ் பிரெசிடென்ஷியல் சர்வீசஸ் பதக்கம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

C.K.குமரவேல் – தொழில்முனைவோர்: இவர், க்ரூம் இந்தியா சலூன் அண்டு ஸ்பா பிரைவேட் லிமிட்டெடின் இணை நிறுவனர் ஆவார். இந்நிறுவனத்தின் குடையின் கீழ்தான் இந்தியாவின் நம்பர் 1 சலூனான நேச்சுரல்ஸ் இருக்கிறது.

2000-மாவது ஆண்டில், இவரது மனைவி திருமதி.K.வீணா அவர்கள் முதல் நேச்சுரல்ஸ் சலூனை தொடங்கினார். சலூன் தொழில் நடைமுறையில் நாடு முழுவதும் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய நேச்சுரல்ஸ் இப்போது இந்தியா முழுவதிலும் 600-க்கும் மேற்பட்ட கிளைகளைத் தொடங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

பெண்கள் முன்னேற்றத்தில் அளப்பரிய நம்பிக்கை கொண்ட திரு.குமரவேல் அவர்கள், பெண்கள் பணரீதியாக யாரையும் சாராத வாழ்க்கையை வாழ ஊக்குவித்து வருகிறார்.

ஆங்கில அகராதியிலிருந்து “ஹவுஸ் ஒயிஃப்” எனும் வார்த்தையை நீக்கும் அளவுக்கு, பெண்கள் வாழ்வில் மாற்றம் வரவேண்டுமென்பதே இவரது கனவாகும்.

Billroth Hospitals Adhitri My Girl My Pride Panel Discussion

சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் தாம்பத்திய நல்லுறவு கருத்தரங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வளமான தாம்பத்திய நல்லுறவு தலைப்பில், ஆகஸ்ட் 17, 19, 19 தேதிகளில் சென்னை ஹையட் ரேஜன்ஸி ஹொட்டெலில் மேற் குறிப்பிட்டுள்ள தலைப்பில் 3- நாள் கருத்தரங்கம் நடக்க உள்ளது.

இல்லற சுகம் வழங்க விழையும் தாம்பத்திய உறவு, மனித குலத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்தை WHO நிறுவனம் 2002-ஆம் ஆண்டிலேயே அங்கீகரித்தது.

இது ஒரு குறைபாடோ உடல் உபாதையோ அல்ல! அரசாங்க ரீதியாகவும் பொதுநல உடல் பேணுதல் பற்றிய ஒரு விஷயமாக இதை கருத வேண்டும்!

தாம்பாத்திய உறவு மற்றும் அது தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் தற்கால வளர்ச்சி பரிமாணங்களை இந்த கருத்தரங்கம் அலசி ஆராயும்!

இந்த துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் மற்றும் விற்பன்னர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள்!

இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெறும். கலை ரீதியாக இந்த விஷயங்களை அலசி ஆராயும் நிகழ்வுகளும் உண்டு!

‘ 11 நாடுகளில் இருந்து 250 பிரதிநிதிகள் பாங்குப்பெறுகிறார்கள். இந்த கருத்தரங்கத்தின் மூலமாக இந்த துறையின் இன்நாளாயே நிகழ்வுகள் பற்றியும் பரஸ்பரம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும்!’ என்கிறார், Dr. நாராயண ரெட்டி, இந்த நிகழ்வின் தலைவர்.

பல்வேறு தலைப்புகளிலும் பல கோணங்களிலும் கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெறும்.

பலரும் பயன் பெற வழி வகுக்கும் விதத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது

Dr Narayana Reddy conducting Sexual Health Conference for Quality of life

ஆடியன்சுக்கு பிடிக்கும்ன்னா அடுத்த செகண்ட்டே ஓகேதான்… – பவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களின் ட்ரெண்டிங் வார்த்தை இது.

ஷோஸியல் மீடியா இல்லாத காலகட்டத்திலும் அந்த காமெடி அத்தனை பேர் மனசிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் காமெடி.

பவன் எண்ணிக்கையில் இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 90 படங்களில் நடித்திருக்கிறார். இதில் “செங்காத்து பூமியிலே”, “காலகட்டம்”, “விலாசம்” மூன்று படங்கள் ஹீரோவாக நடித்த படங்கள்.

சில வருடங்களுக்கு முன் தமிழ்சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற மாசிலாமணி, இங்கிலீஷ்காரன், கலாபக்காதலன், திமிரு, பீமா, சூரியன் சட்டக் கல்லூரி, பொல்லாதவன், கதகளி, வீரம் என பவன் நடித்த மேக்ஸிமம் படங்கள் ஹிட் லிஸ்டில் தனித்த இடம் பிடித்த படங்கள்.

தற்போது தமிழில் தம்பி ராமையாவின் “மணியார் குடும்பம்” படத்தில் காமெடி கலந்த வில்லன் கேரக்டரிலும், “அழகுமகன்” படத்தில் மெயின் வில்லனாகவும், சமுத்திரகனியின் “நாடோடிகள் 2”, வெற்றி மாறனின் “வடசென்னை” என அடுத்தடுத்து ரிலீஸ்க்கு ரெடியாக நான்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

சமீபத்தில் பவன் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்த “யுத்தம் சரணம்” ஆந்திராவில் வசூலை அள்ளியது.

பொல்லாதவன் படத்தில் அவுட்டு கேரக்டர் தனித்து அப்போது பேசப்பட்டது, அதுபோல வடசென்னை படத்தில் வேலு என்னும் கேங்ஸ்டர் ரோல்.

இதுவரை பார்த்த பவனின் வேறு ஒரு பரிணாமம் வேலு கேரக்டர் நிச்சயம் பேசப்படும் ரோல் அது.

ஹீரோ, காமெடியன், வில்லன், குணசித்திர நடிகர் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை பாத்திரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரகுவரன், பிரகாஷ் ராஜ், பவன் என சிலருக்கு மட்டுமே அது சாத்தியப்பட்டது.

சின்ன கேரக்டர் என்றாலும், அது ஆடியன்ஸ் மனசில் நிற்கும் கேரக்டர் என தெரிந்தால் அடுத்த செகண்ட் அந்தப் படத்தில் நடிப்பேன் என கூறுகிறார் பவன்.

Actor Pawan shares his Cinema carrier experience

More Articles
Follows