தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.
இதனால் மருத்துவதுறை வல்லுனர்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி & ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
இந்தியாவில் புனேவின் சீரம் நிறுவனம், மத்திய அரசின் மேற்பார்வையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கிறது.
தமிழகத்திலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டார்
அவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலக்குறைவு, தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பக்கவிளைவு ஏற்பட்டது.
இதனால் சிகிச்சையில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதனால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில், ராமச்சந்திர மருத்துவமனைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது…
“அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருத்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை.
ஆனால் இராமச்சந்திர மருத்துவமனை விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Alleging side-effects from Covishield vaccine trials, Chennai volunteer seeks Rs 5 crore compensation