விஜய்யை தொடர்ந்து அஜித் படத்திலும் ரஜினி பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய விஜய்யின் துப்பாக்கி படம் மாபெரும் ஹிட்டடித்தது.

எனவே இப்படத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்க ரீமேக் செய்தார் ஏஆர். முருகதாஸ். ஹாலிடே என்ற பெயரில் 2014ல் இப்படம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் விஜய் படத்தை தொடர்ந்து அஜித் நடித்த வீரம் இந்தி ரீமேக்கிலும் அக்‌ஷய்குமார் நடிக்கவுள்ளாராம்.
இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

இப்படத்தை அக்‌ஷய்குமாரின் நெருங்கிய நண்பர் சஜித் இயக்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் 9வது படம் இது என கூறப்படுகிறது.

விரைவில் வெளியாகவுள்ள ரஜினியின் 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akshaykumar doing Ajith role in Veeram Hindi remake

பக்கத்து வீட்டு பெண்ணை கடித்து குதறிய ஜாங்கிரி மதுமிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா.

இவரது வீட்டில் அருகில் ஒரு பெண்ணின் கையை இவர் கடித்து குதறியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது…

தன் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா உடன் பிரச்சினை ஏற்பட்டது.
மேலும் மற்றவர்களிடம் தன்னை பற்றி குற்றம் சாட்டியிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையின் போது உஷாவின் தொல்லையை தாங்க முடியாமல் லேசாக அவரை கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த பெண் கடித்த இடத்தில் குத்தி குத்தி பெரிதாக்கிவிட்ட்டார்” என்றும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

This is the reason behind why Madhumitha had to bite her neighbour

சிவகார்த்திகேயன்-நயன்தாரா… செப்-29ல் இணைதலும் மோதலும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து ஜோடியாக நடித்துள்ள படம் வேலைக்காரன்.

மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதேநாளில் ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள செம என்ற படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள அறம் படமும் இந்த படங்களுடன் மோத களத்தில் குதிக்கிறது.

ஆக மொத்தம் ஒரே நாளில் ஒரு படத்தில் இணைந்தும் மற்ற படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் மோத உள்ளார் நயன்தாரா.

ஆனால் வேலைக்காரன் பட ரிலீஸ் தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது.

Sivakarthikeyan and Nayanthara joins also clash on 29th September 2017

மாணவி அனிதா தற்கொலை; நடிகர்கள்-இயக்குனர்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

+2வில் நல்ல மார்க் எடுத்தும் நீட் தேர்வு முறையால் மருத்துவராக முடியாத மாணவி அனிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

சில பிரபலங்களின் கருத்துக்கள் இதோ…

நடிகர் விஷால் : அனிதா மருத்துவக் கல்விக்கு தகுதி பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்.

பாடலாசிரியர் விவேக் : இந்த பொண்ணு மனசுல இருந்த கனவுக்கும், கண்ல இருந்த ஏமாற்றத்துக்கும், எங்க கண்ணீருக்கும் யார் பதில் சொல்லுவா?

மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவு டா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு?

நடிகர் சிவகார்த்திகேயன் : இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது…என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் ராம் :
“நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்”.

இயக்குனர் பாண்டிராஜ் :
தூக்கு போடுற வயசா இது ? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விஷயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு.

நடிகர் விஜய்சேதுபதி
: தங்கை அனிதாவின் தற்கொலையை அரசியல் ஆக்காதீர்கள். துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

டைரக்டர் சீனுராமசாமி:

டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.

இந்த மதிப்பெண்ணுக்கு நாடு உங்களை தேடி வந்து வாய்ப்பளித்திருக்க வேண்டும் மதிப்பெண் இருந்தும் கிராம நகர ஏழை மாணவர்கள் தவிப்பவர்கள் எத்தனையோ..?

நடிகர் பார்த்திபன்:

அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும்.

நடிகை கஸ்தூரி : எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது.

நடிகர் விவேக்.

வாழ்க்கையில் உயர்வதற்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை. தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும்.

பள்ளி கல்வியை பாதியில் விட்ட பலர், வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.

விமானியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர் அப்துல் கலாம். ஆனால் அது நிறைவேறாவிட்டாலும் அவர் தவறான முடிவை எடுக்கவில்லை. பின்னர் வேறு துறையில் சாதித்து முன்மாதிரியாக இருந்தவர் அவர்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் அன்றைய தினமே அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவரது தந்தைக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும் சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.

நல்ல மருத்துவராக ஆகியிருக்க வேண்டியவர் அவர். தமிழக இளைஞர்களுக்கு இந்த நாள் கறுப்பு தினம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.‌

இயக்குனர்கள் சீமான், அமீர், ரஞ்சித், பாண்டிராஜ் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Kollywood Industry condolence to Anitha family

நீட் தேர்வு விவகாரம்; அனிதா தற்கொலைக்கு ரஜினி-கமல்-தனுஷ் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி, கமல், தனுஷ் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.

மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனிதாவுக்கு நடந்தவை துரதிஷ்டவசமானவை. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் மற்றும் ஜிவி. பிரகாஷ் அவர்களும் தங்களது இரங்கலை பதிவிட்டுள்ளனர்.

3 படங்களை தயாரித்து நடிக்கும் விமல்; பிறந்தநாளில் அறிவித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா.
இப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் விமல் தனது பிறந்த நாள் (ஆகஸ்ட் 30) கொண்டாட்டத்தின் போது, தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

மன்னர் வகையறாவை முடித்தவுடன் ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கிறார்.
அவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

இதனையடுத்து சற்குணம் இயக்கத்தில் களவாணி-2’ படத்தில் மீண்டும் நடிக்கிறார் விமல்.

இதில் சூரி, கஞ்சா கருப்பு கூட்டணியும் தொடர்கிறது.

மாதவன் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு ‘களவாணி-2’ படத்தை சற்குணம் தொடங்குவார் எனவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows