இளையராஜா இசையில் ரஜினி வில்லனும் நாயகியும் ஜோடியாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய ரசிகர்களை தன் இசையால் தாலாட்டி வருபவர் இளையராஜா.

ஆயிரம் படங்களை முடித்தபின்னும் அவரது இசைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தற்போது புதிதாக ஒரு இந்திப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

பிரபல இந்தி இயக்குனர் இப்படத்தை பால்கி இயக்குகிறார்.

அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தை இயக்கியவர் இவர்.

இப்படத்தில் அக்ஷய்குமார் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கின்றனர்.

அக்ஷய்குமார் ரஜினி 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே ரஜினியின் கபாலி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைரவா’ ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துவரும் பைரபா படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் டீசரை அண்மையில் தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டனர்.

இதுவரை பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 50 லட்சத்தை கடந்துள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு 2017 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் பாடல்களை இந்தாண்டு டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) அன்று வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்திலும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தொடரும் எனத் தெரிகிறது.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு சிறந்த ஆளுமை விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாடும் நிலா பாலு…’ இப்படி ஒரு அழகான சொல்லுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

1966ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.

அதன் பின்னர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக காட்டி திரையுலகில் வலம் வந்தார்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமலின் ஆஸ்தான பாடகர் இவர்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

1000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர் இவர் கிட்டதட்ட 14 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.பிக்கு இந்தாண்டிற்கான (2016) சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் சிறந்த ஆளுமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

வருகிற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன் திரைத்துறையில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டோரும் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி-தெறி தயாரிப்பாளரை கைது செய்ய உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தாணு.

இவரை கைது செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் நியூ தியேட்டர் உரிமையாளர் டேவிட் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கு தொடுத்தவருக்கு வட்டியுடன் ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டிருந்த நீதிமன்ற தீர்ப்பை தாணு செயல்படுத்தவில்லை.

இதனால், தாணுவை நவம்பர் 28-ம் தேதிக்குள் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் டூ சினிமா…. ரீஎன்ட்ரீ ஆகும் ரஜினி-அஜித் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கரின் காதலன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் நக்மா.

அதன்பின், திடீரென ரஜினியுடன் பாட்ஷாவில் நடிக்க ஒப்பந்தமானார்.

இப்படம் மாபெரும் வெற்றியடைவே இந்தியா முழுக்க பிரபலமானார்.

அதன்பின்னர் அஜித்துடன் சிட்டிசன் படத்திலும் நடித்தார்.

இதனிடையில் அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

தற்போது நீண்ட நாட்களுக்கு ரீ எண்ட்ரிக்கு தயாராகி வருகிறாராம்.

சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவின் அக்கா நக்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபாலுடன் இணையும் விவேக்-ரோபா சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், விவேக், மாளவிகா உள்ளிட்டோர் நடித்த படம் திருட்டு பயலே.

பெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த கூட்டணியில் அண்மையில் அமலா பால் ஒப்பந்தம் ஆனார்.

தற்போது இவர்களுடன் விவேக் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் இணைய உள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார்.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

More Articles
Follows