நாகார்ஜுனாவின் மகன் திருமணம் ரத்து… அதிர்ச்சியில் சமந்தா

நாகார்ஜுனாவின் மகன் திருமணம் ரத்து… அதிர்ச்சியில் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akhil-Shriya-Engagement-Latestபிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜீனாவுக்கு நாக சைதன்யா, அகில் என இரு மகன்கள் உள்ளனர்.

இதில் இளைய மகன் அகில் மற்றும் ஸ்ரேயாவின் திருமண நிச்சயத்தார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.

இதனையடுத்து இத்தாலி நாட்டில் மிகப்பிரம்மாண்டமாக இத்திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

இதற்காக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகர்ள் 700 பேருக்கு விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென இத்திருமணம் நடைபெறாது என நாகார்ஜீனா அறிவித்தார்.

இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அகில் மற்றும் ஸ்ரேயா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நாகார்ஜீனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கு திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.

அகில் பிரச்சினை காரணமாக தன்னுடைய திருமணத்திற்கும் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று சமந்தா தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாம்.

Akhil Akkineni’s wedding cancelled. Samantha Shocked

நயன்தாராவுடன் மலேசியா பறக்கும் சிவகார்த்திகேயன்

நயன்தாராவுடன் மலேசியா பறக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaமோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படத்தின் நாயகி நயன்தாரா மற்றும் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் மலேசியா செல்கிறார்.

அங்கு 35 நாட்கள் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் டைரக்டர் மோகன்ராஜா.

அனிருத் இசையமைக்க, இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan fly to Malaysia for Velaikaran movie shoot

பெண்களுக்கு தனுஷின் ஸ்பெஷல் விருந்து

பெண்களுக்கு தனுஷின் ஸ்பெஷல் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush rajkiranநடிகர் தனுஷ்க்கு பெண் ரசிகைகள் அதிகம்.

இவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். இனி டைரக்டர் தனுஷ்க்கும் ரசிகர்கள் அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.

இந்நிலையில் மார்ச் 9ஆம் தேதி மகளிர் தினத்தில், தன் இயக்கத்தில் உருவாகியுள்ள பவர்பாண்டி படத்தின் இசையை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளை இன்று தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜ்கிரண், சாயாசிங், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சீன் ரோல்டன் இசையமைக்க, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dhanushs Power Pandi treat on Womens day

பாவனா பாலியல் வழக்கில் குற்றவாளி கோர்ட்டில் சரண்

பாவனா பாலியல் வழக்கில் குற்றவாளி கோர்ட்டில் சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pulsar sunilபிரபல நடிகையான பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான நான்கு பேர்களை கைது செய்தனர்.

எனினும் இதில் மூளையாக செயல்பட்டவர் சுனில்குமார் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

எனக்கு ஓட்டு போடாதவங்க கேள்வி கேட்கக்கூடாது – ‘காண்டான’ கருணாஸ்

எனக்கு ஓட்டு போடாதவங்க கேள்வி கேட்கக்கூடாது – ‘காண்டான’ கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunasநடிகர் கருணாஸ் அதிமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏவாக உள்ளார்.

தற்போது ஓபிஎஸ்க்கு எதிராக சசிகலா அணியில் செயல்பட்டு வருகிறார்.

இதனால் இவரது தொகுதியை சேர்ந்த சிலரும் மற்ற பொதுமக்களும் இவரது ஆதரவு முடிவு குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் இவரை போனில் தொடர்பு கொண்டு அசிங்கமாக பேசிவருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசினார்…

அப்போது… ‘திருவாடனை தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் தனக்கு ஓட்டு போட்ட 75,000 மக்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். மற்றவர்கள் கேட்கக்கூடாது” என்றார்.

அஜித்தின் ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்… டைரக்டர் யார்?

அஜித்தின் ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்… டைரக்டர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and junior NTRகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வில்லன் மற்றும் வரலாறு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றன.

இதில் அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் கிட்டதட்ட 11 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தை தெலுங்கிலும் கே.எஸ்.ரவிகுமாரே இயக்குவாரா? என்ற தகவல் வெளியாகவில்லை.

More Articles
Follows