தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் ‘விவேகம்’ கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
என் படம் ’ஐ-நா’-வின் அடிப்படைக் கதையே ’விவேகம்’ படத்தின் கதை. என் படம் 2013ல் எழுதப்பட்டது. இந்த கதையை அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொன்னேன்.
அவரிடம் ஒரு கதை வடிவமும் தந்தேன். அஜித் குமாரை சந்திக்க வைக்கிறேன் என 3 வாரம் எடுத்துக் கொண்டார். பின்னர் வந்து அஜித் புதுமுக இயக்குநருடன் கதையில் நடிக்க மாட்டார் என சொல்லிவிட்டார்.
நான் ’விவேகம்’ படம் பார்த்த போது நான் சொன்னதில் 60 சதவீதம் திரையில் இருந்தது. திரைக்கதையில் சில ஒற்றுமைகள் இருந்தன. இதற்கும், இயக்குநர் சிவா மற்றும் அஜித்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஏனென்றால் அவர்களை நான் இதுவரை சந்திக்கவில்லை. எனவே இந்தக் கதையை திருடியது அஜித்குமாரின் நெருங்கிய நண்பரே. அவர் அப்போது என்னை அலையவிட்டு, ’விவேகம்’ படம் பார்க்கும்போது அழவும்விட்டார்.
படம் ஆரம்பிக்கும் முன்னர் படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே என்ற எழுத்துகள் வரும். நம்பமுடியவில்லை.
நான் எனது கதையை பல ஆராய்ச்சிக்குப் பின், நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். அதை அஜித்துக்கு ஏற்றவாறு எழுதியிருந்தேன். ’ஐ-நா’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளுக்கே 1.5 வருடங்கள் ஆகும்.
இந்தக் கதையை பல பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்கள் படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டு இந்த அறிவுத் திருட்டைப் பற்றி கேட்டார்கள்.
ஒரு இயக்குநர், உதவி இயக்குநரின் சிந்தனை திருடப்படும்போது எப்படி வலிக்கும் என இப்போது புரிகிறது. இந்தத் துறையில் இவ்வளவு ஆபத்துகளுக்கு நடுவில் போராடுபவர்களுக்கு என் வணக்கங்கள்
ஒரு தயாரிப்பாளராக இருந்து 3 படங்கள் எடுத்த பின்பும் நான் துரோகத்தை சந்தித்துள்ளேன். இதுவே வேறு யாராவதாக இருந்தால் அவர் எப்படி கஷ்டப்படுவார்?
இதை நான் இப்போது சொல்வது எந்த வித மலிவான விளம்பரத்துக்கும் கிடையாது. அல்லது எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.
ஒரு எளிய மன்னிப்பு கேட்டால் போதும். பொதுவில் கூட சொல்ல வேண்டாம். தல உடன் இருக்கும்போது தவறுகள் நடக்கக்கூடாது என்பது புரிய வேண்டும். நானும் தல ரசிகன் என்பதால்தான் அவருக்கேற்றார் போல கதை எழுதினேன்.
விவேகத்தின் தரத்தைப் பற்றி நான் பேசவரவில்லை. படம் அற்புதமாக இருக்கிறது. எனது ‘ஐ-நா’ படத்தின் ஷூட்டிங் 2018ஆம் ஆண்டு தொடங்கும்.
சம்பந்தப்பட்ட நபர் என்னை சீக்கிரம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டால் நல்லது.
இல்லையேல் தேவையான ஆதாரங்களுடன் பொதுவில் சொல்லுவேன். அஜித்குமார் என்ற மனிதரை நான் மதிப்பதால் இன்னும் பொறுமையாக இருக்கிறேன்.
எதிர்காலத்திலும் இது போன்ற பிரச்சினையை யாரும் சந்திக்கக் கூடாது. எதிர்த்து கேள்வி கேட்க முடியாதே என அழக்கூடாது.
நான் சொல்வதில் நியாயம் இருக்கும் என நினைப்பவர்கள் எனக்கு நீதி கிடைக்க ஆதரவும் கொடுங்கள். உங்களைப் போல கனவுகள் இருக்கும் ஒருவன் நான். தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குநராகவும் கனவு வைத்திருப்பவன்.
NEVER EVER GIVE UP.
இவ்வாறு ரவீந்திரன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
இவருடைய ஃபேஸ்புக் பதிவுக்கு ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‘விவேகம்’ படத்தின் கதை தனது என்று ஒருவர் அர்த்தமில்லாத பதிவு ஒன்றை போட்டிருந்தார். அவர் என் நண்பர் தான். ஆனால் அவருக்கு ஒன்று விளம்பரம் தேவைப்படுகிறது அல்லது அவர் சிறுபிள்ளைத்தனமானவர் என நினைக்கிறேன்.
என் தொடர்பை ப்ளாக் செய்துவிட்டார். மற்ற நாயகர்களின் ரசிகர்களும் வேறு பலரும், ஒருவருக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்று அந்தப் பதிவை பகிர்ந்து வருகின்றனர். இதை ஆதரிக்காதீர்கள்.
ஏனென்றால், இந்த மாதிரியான ஆட்களால், நாளையே வேறொருவர் இது போன்ற பிரச்சினையில் மாட்டி அவரிடம் ஆதாரம் இருந்தாலும் அவரை நாம் புறக்கணித்துவிடுவோம்.
யோசித்து, ஆதரவு கொடுங்கள். கொஞ்சம் முதிர்ச்சியாக நடந்து கொள்வோம்.
இவ்வாறு சினிஷ் தெரிவித்துள்ளார்.
Ajiths Vivegam story theft Producer Ravindran Chandrasekar complaint