ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் தொழில் நுட்ப பயிற்சியில் நடிகர் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வாசம் பட சூட்டிங்கை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் தக்ஷா மாணவர் குழு தயாரித்துள்ள ஏர்- ம்புலன்ஸ் குட்டி விமானத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தில் அஜித்குமார் தொழில் நுட்ப பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

பெரிய விமானங்களில் ஒரு என்ஜின் பழுதுபட்டால் தானாக மாற்று என்ஜின் இயங்கும்.

அதுபோல, தக்க்ஷா மாணவர்கள் தயாரிக்கும் ஆளில்லா ஏர் ஆம்புலன்சிலும் கூடுதல் தொழில் நுட்பத்தை சேர்ப்பதற்காகவே அஜித்குமார் ஜெர்மனியில் உள்ள வெரிகோ நிறுவன அதிகாரிகளின் கருத்தை கேட்டறிந்துள்ளார்.

ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகளை பாதுகாப்பாக எடுத்து வர இந்த தொழில் நுட்பம் பேருதவியாக இருக்கும் என்கின்றனர் தக்க்ஷா குழுவினர்.

நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டில் இருந்து தினமும் சுவர் ஏறிக் குதித்து ஓடுவதாக கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்சினி என்ற பெண், மீ டூ இயக்கம் வாயிலாக ஃபேஸ்புக்கில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி சார்பில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தினர்.

புகார் உண்மையானதால் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணை நடத்தி விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

நம்பர் 1 விளையாட்டு; விஜய்-அஜித் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவரின் இடத்தை பிடிக்க கடந்த 15 வருடங்களாக விஜய், அஜித் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனாலும் அவர்களால் முடியவில்லை.

இருந்தபோதிலும் ரஜினி பட வசூலை முறியடிக்க முயற்சி வருகின்றனர்.

ரஜினியின் இடத்தை பிடித்து விட்டால் நம்பர் 1 இடத்தில் வந்து விடலாம் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

அவர்கள் கூட அப்படி நினைப்பார்களோ எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் ரசிகர்கள் ரஜினி இடத்தை தல பிடித்துவிட்டார். தளபதி பிடித்துவிட்டார் என்பதை ஒவ்வொரு படம் வரும்போது சொல்வதை வாடிக்கையாக வைத்துள்னர்.

இந்நிலையில் நேற்று வெளியான 2.0 படத்தில் நம்பர் 1 இடத்தை பற்றி ஒரு வரி பன்ச் வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நம்பர் 1, நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு. The one and Only Super One நான்தான் என்பதுபோல பேசியிருக்கிறார். இது ரஜினி ரசிகர்களிடையை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No 1 game Rajinikanth warns Vijay and Ajith fans

மரணமடைந்த ரசிகரின் மகள் படிப்புச் செலவை ஏற்றார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயதான இவர் அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறா.

இவர் கடந்த 13-ந் தேதி மணிகண்டன் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இதனையறிந்த நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தாரை சேலம் சென்று நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அதனுடன் அந்த குடும்ப செலவையும் ஏற்றுக் கொண்டு அவரின் மகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதைக்கேட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர்.

Actor Suriya help to his fans family

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் டிவி நடிகர் ரியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய 6 வருடங்களில் ஒரு முன்னணி நடிகராகவும் ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்து விட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் சார்பாக கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் அடுத்த டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அடுத்த படத் தயாரிப்பையும் தொடங்கியுள்ளார் சிவா.

கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இப்படத்தில் டிவி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார்.

இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.

விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் ரியோ துணை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TV fame Rio Raj team up with Sivakarthikeyans 2nd production movie

சர்கார் சாதனையை அடித்து நொறுக்கிய ரஜினியின் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

லைகா நிறுவனம் இப்படத்தை ரூ.550 கோடி பொருட்செலவில் உருவாக்கியது.

படத்தை பார்த்த அனைவரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது காலா, சர்கார், மெர்சல், விவேகம் ஆகிய பட வசூல்களை விட அதிகம்.

விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது.
மேலும் சர்கார் தீபாவளி தினத்தில் வெளியானது.

ஆனால் 2.0 படம் எந்த பண்டிகையும் இல்லாத நாளில் வியாழக்கிழமையில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis 2.0 movie beat Vijays Sarkar box office collection

Rajinis 2point0 movie beat Vijays Sarkar box office collection

More Articles
Follows