விஜய்சேதுபதிக்கு அஜித் அட்வைஸ்; விஜய்சேதுபதி மனைவி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைச்சே பாக்கல. ஆனா வாய்ப்பு வந்துட்டு. இப்படின்னு சில பிரபலங்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.

ஆனால் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்குள் அவர்களின் பாதி ஆயுள் முடிந்திருக்கும்.

அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு துறையாக முன்னேறி வருவார்கள்.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் விஜய்சேதுபதி.

பல இன்னல்களை அனுபவித்து, முன்னேறிய இவர் இன்று முன்னணி நாயகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

அதுபோல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் படங்களை கண்ட அஜித் சமீபத்தில் அழைத்து பாராட்டி பேசி ஆலோசனைகள் சொன்னாராம்.

இதனை விஜய்சேதுபதி தன் மனைவியிடம் சொல்ல, அவர் கோபப்பட்டராம்.

நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் கோபம்? அப்படித்தானே கேட்கிறீர்கள்.

விஜய்சேதுபதியின் மனைவி ஜெஸி, திவீர அஜித் ரசிகையாம்.

அப்படி தெரிந்தும், அஜித்தை காண மனைவியை அழைத்து செல்லவில்லை என்பதால்தான் இந்த கோபமாம்.

Ajith appreciates Vijay Sethupathi

‘பைரவா’ தமிழ் சொல் இல்லை; வரிவிலக்கு மறுப்பால் கோர்ட்டில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து உருவான படம் பைரவா.

இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியானது.

இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு வரிவிலக்கு தர மறுத்துவிட்டது.

‘பைரவா’ என்கிற சொல் தமிழ் வார்த்தை இல்லை என்பதால், வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டதாக புதுவை அரசின் பொழுது போக்குதுறை ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு….

வரிச்சலுகை மறுக்கப்பட்டதால், புதுவை மாநில விநியோகஸ்தரான ஜி.ஆர்.துரைராஜ், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி புதுவை மாநில உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொழுது போக்குத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

Puducherry govt refuse to give tax exemption to Bairavaa

“ரஜினி-விஜய் படங்களை விற்று தருகிறேன்…” ஞானவேல் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதில் விஷால் அணி சார்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது தயாரிப்பாளர் தாணுவை கடுமையாக சாடினார்.

தாணு தயாரித்த ரஜினியின் கபாலி படம் ரிலீஸான அன்றே இணையத்தில் லைவ் ஆக வெளியானது.

அதை கண்டிக்க கூட இல்லை. ஆதங்கத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒரு தயாரிப்பாளராக எந்த நடவடிக்கையும் அவர் படத்திற்கே எடுக்கவில்லை.

இன்றுவரை கபாலி மற்றும் தெறி படத்தின் சாட்டிலைட் உரிமையை அவர் விற்கவில்லை.

நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியேற்ற உடன் விற்றுத் தருகிறேன்” என்று பேசினார்.

‘கபாலி யோகி’யை சரோஜா பிரேக் செய்வாள்… தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீரா கதிரவன் தயாரித்து இயக்கியுள்ள விழித்திரு படம் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, வெங்கட்பிரபு நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசும்போது…

இப்படத்தில் நான் சரோஜா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன்.

இது கபாலி படத்தில் நான் நடித்த யோகி கேரக்டரை உடைக்கும்.

அந்தளவு இந்த கேரக்டர் பவர்புல். இயக்குனர் மீரா கதிரவனுக்கு நன்றி.” என்று பேசினார்

பட புரோமோஷனுக்கு அஜித் வரவேண்டும் – மீரா கதிரவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவள் பெயர் தமிழரசி என்ற தரமான படத்தை இயக்கியவர் மீரா கதிரவன்.

இவர் தயாரித்து இயக்கியுள்ள விழித்திரு படம் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, வெங்கட்பிரபு நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பேசும்போது…

இந்த நிகழ்ச்சிக்கு விதார்த் வரவில்லை. முன்பு ஒருமுறை அஜித்தின் வீரம் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

நான் இப்போது தயாரிப்பாளர் ஆகிவிட்டதால் தயாரிப்பாளரின் வலி அதிகமாக தெரிகிறது.

அஜித்துக்கு இமேஜ் இருக்கலாம். ஆனால் அவரும் படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவேண்டும்.

ஒரு படம் 3 நாட்கள் மட்டுமே ஓடுகிறது. எனவே நடிகர்கள் பட விளம்பரத்திற்கு வரவேண்டும். என்று பேசினார்

ரஜினி இடத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பாட்ஷா எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 160 படங்களில் நடித்துவிட்டார்.

அவரின் 40 ஆண்டு கால சினிமா கேரியரில் எவராலும் மறக்க முடியாத படம் ‘பாட்ஷா’.

அதுபோன்ற படத்தை தன்னால் இனி தரமுடியாது என்று ரஜினியே அடிக்கடி கூறிவருகிறார்.

இப்படம் 22 வருடங்களுக்கு பிறகு தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஓரிரு தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.

இதே படம் முதல் முறை வெளியான சமயத்தில் எப்படி ஒரு பரபரப்பு கொண்டாட்டம் இருந்தத்தோ, அதுபோல் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஓப்பனிங் வசூலில் மற்ற புதிய படங்களுக்கு சவால் விட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 110 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் ரூ.40,16,000 வசூல் செய்துள்ளதாம். இது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகமே பார்த்த ஒரு திரைப்படம் பாட்ஷா.

22 வருடங்களுக்கு பின்பு வந்தும், இப்படி வசூல் வேட்டை செய்து வருவதால், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு இது பாட்ஷா தரும் எச்சரிக்கை பாடம் என கோலிவுட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More Articles
Follows