உனக்கு அடிப்பட்டா எனக்குதான் கஷ்டம்.; துரத்திய ரசிகருக்கு அஜித் அட்வைஸ்

உனக்கு அடிப்பட்டா எனக்குதான் கஷ்டம்.; துரத்திய ரசிகருக்கு அஜித் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith advice to his fan who chased his car for 18 KMsமுன்பெல்லாம் நடிகர்கள் இப்படிதான் அடிக்கடி தங்கள் முகத்தை வெளியில் காட்டாமாட்டார்கள். அப்போது டிவிக்களும் இல்லை என்பதால் சினிமாவில் மட்டுமே நடிகர், நடிகைகளை காண முடியும் என்பதால் திரளாக கூடுவார்கள்.

தற்போது அந்த யுக்தியைத்தான் நடிகர் அஜித் கையாண்டு வருகிறார்.

தன் படப்பூஜை, பட விளம்பர நிகழ்ச்சி, டிவி பேட்டி என எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாதவர் அஜித். எனவே இவரை திரையில் காண ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர்.

அண்மையில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் அஜித்.

அப்போது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள திரள ரசிகர்களைத் தாண்டி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.

ஆனால் கணேஷ் என்ற ஒரு ரசிகர் அஜித்தின் காரை துரத்திக் க்கொண்டே சென்றுள்ளார்.

பின்னர் கிட்டத்தட்ட 18 கிமீ. சென்ற பிறகு அஜித் அவரை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார்.

தம்பி.. இதுபோல் துரத்திக் கொண்டு வேகமாக வந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ரொம்ப டயர்ட்டா இருக்கு. போட்டோ எடுத்துக்கிறீயா என்றாராம் அஜித்… ஓகே அண்ணா என்று கூறிவிட்டு இவர் போட்டோ எடுத்துள்ளார்.

உனக்கு விபத்து நடந்தால் அது எனக்குத் தான் கஷ்டம். என்று அறிவுரை கூறினாராம். இந்த தகவலை அந்த ரசிகர் தன் பேஸ்புக்கில் பதிவிட்டு அந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இன்று அஜித்துடன் போட்டோ எடுத்தது சொர்க்கத்துக்கு சென்ற நாள் எனவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

Ajith advice to his fan who chased his car for 18 KMs

கேரளாவில் சறுக்கிய *சர்கார்*.; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

கேரளாவில் சறுக்கிய *சர்கார்*.; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar box collection reports Disappointment for Vijay fansதமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

175 அடி உயர கட்-அவுட், வெளியான 300 தியேட்டர்களில் 220 தியேட்டர்களில் ரசிகர்கள் சிறப்பு காட்சி என களைக்கட்டியது.

மேலும் விஜய்யின் பெண் ரசிகைகளுக்கு சிறப்புக் காட்சி என கேரளாவில் சர்காருக்கு ராஜ மரியாதை இருந்தது.

கேரளாவில் மட்டும் முதல் நாள் 6 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்பட்டது.

அதாவது கேரளாவில் ‘பாகுபலி 2’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது என்றனர். ’மெர்சல்’ வசூலை ஒப்பிடும் போது, இது பெரிய வசூல் அல்ல என்கின்றனர்.

ஆனால், 2ஆம் நாள் முதல் வசூல் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

திரைப்படம் முழுவதும் தமிழக அரசியலையே மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் கேரள மக்களிடையே அவை எடுபடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சர்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

உலகம் முழுவதும் 6 நாட்களில் இதுவரை 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆந்திராவில் 6 நாட்களில் சுமார் 13 கோடியை வசூலித்துள்ளது. கர்நாடகாவிலும் 6 நாட்களில் 11 கோடி வசூலை கடந்துள்ளதாம்.

Sarkar box collection reports Disappointment for Vijay fans

மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா

மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mani and govindவிஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தின் இமாலய வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தன.

அந்த படத்திற்கு இசையமைத்தவர் கோவிந்த் வஸந்தா.

இவர் தற்போது விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே துல்கர், பஹத் பாசில் ஆகியோரின் மலையாள படங்களுக்கு இசையமைத்து அசத்தியவர் இவர்.

இந்நிலையில் மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாம்.

இளையராஜாவுக்கு பிறகு மணிரத்னம் படங்களுக்கு ரஹ்மான் தானே இசை, பின்னர் கோவிந்த வசந்தா? எப்படி என்றுதானே யோசிக்கிறீர்கள்.?

இது மணிரத்னம் இயக்கும் படமல்ல. அவர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்குதான் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தை தனசேகரன் என்பவர் இயக்குகிறார்.

இந்தியாவை தோனி வழிநடத்தனும்; விக்னேஷ் சிவனின் விபரீத ஆசை..?

இந்தியாவை தோனி வழிநடத்தனும்; விக்னேஷ் சிவனின் விபரீத ஆசை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivan and dhoniஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் இவருக்கு, தமிழகத்தில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ரசிகர்கள் பட்டாளத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனும் ஒருவர்.

அவர் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட்டு தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

“எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான மன நிறைவான நாள். தோனியை சந்திப்பது எனது வாழ்நாள் கனவு.

இதற்கு காரணமான கடவுளுக்கும் உலகத்திற்கும் நன்றி. ஒருநாள் இவர் நம் நாட்டை வழி நடத்துவதைப் பார்க்க காத்திருக்கிறேன். இது என்னுடைய கனவு’ என பதிவிட்டுள்ளார்.

எனவே தோனியை இவர் அரசியலுக்கு வரவேற்கிறாரா? என பலரும் கேட்கின்றனர்.

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீர்ர் இம்ரான்கான் வெற்றி பெற்று 22வது பிரதமராக பதவியேற்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

வாக்கை விற்று வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள்… கமல்ஹாசன்

வாக்கை விற்று வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள்… கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanமக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

அண்மையில் அரூரில் மக்கள் மத்தியில் பேசினார் கமல். அவர் பேசியதாவது…

ஓட்டு பேரம் பேச நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதியும் தர வரவில்லை.

மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக் கொள்ளும் வகையில் ஓர் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும்.

ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்து விடாதீர்கள்.

சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை விற்று விடாதீர்கள்.

மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்கும் கிராம சபைகளில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்.” என்று பேசினார்.

த்ரிஷாவை இயக்கும் விஷால்..; 5 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி

த்ரிஷாவை இயக்கும் விஷால்..; 5 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and trishaதன் தந்தை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என சினிமா துறைக்கு வந்தவர் விஷால்.

எனவேதான் நடிகர் அர்ஜீனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

ஆனால் அர்ஜீன் சிபாரிசின் பேரில் நடிகராக மாறினார்.

பின்னர் நடிப்பு, தயாரிப்பாளர் என பயணிக்க ஆரம்பித்த இவரின் 25வது படம் சண்டக்கோழி2.

தற்போது தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இதனையடுத்து 25 படங்களை நடிகராக முடித்துவிட்டு முதன்முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இதில் த்ரிஷாவை நாயகியாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் முழுக்க விலங்குகளை மையப்படுத்தை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சமர் என்ற படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows