தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்பெல்லாம் நடிகர்கள் இப்படிதான் அடிக்கடி தங்கள் முகத்தை வெளியில் காட்டாமாட்டார்கள். அப்போது டிவிக்களும் இல்லை என்பதால் சினிமாவில் மட்டுமே நடிகர், நடிகைகளை காண முடியும் என்பதால் திரளாக கூடுவார்கள்.
தற்போது அந்த யுக்தியைத்தான் நடிகர் அஜித் கையாண்டு வருகிறார்.
தன் படப்பூஜை, பட விளம்பர நிகழ்ச்சி, டிவி பேட்டி என எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாதவர் அஜித். எனவே இவரை திரையில் காண ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர்.
அண்மையில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் அஜித்.
அப்போது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள திரள ரசிகர்களைத் தாண்டி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.
ஆனால் கணேஷ் என்ற ஒரு ரசிகர் அஜித்தின் காரை துரத்திக் க்கொண்டே சென்றுள்ளார்.
பின்னர் கிட்டத்தட்ட 18 கிமீ. சென்ற பிறகு அஜித் அவரை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார்.
தம்பி.. இதுபோல் துரத்திக் கொண்டு வேகமாக வந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
ரொம்ப டயர்ட்டா இருக்கு. போட்டோ எடுத்துக்கிறீயா என்றாராம் அஜித்… ஓகே அண்ணா என்று கூறிவிட்டு இவர் போட்டோ எடுத்துள்ளார்.
உனக்கு விபத்து நடந்தால் அது எனக்குத் தான் கஷ்டம். என்று அறிவுரை கூறினாராம். இந்த தகவலை அந்த ரசிகர் தன் பேஸ்புக்கில் பதிவிட்டு அந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இன்று அஜித்துடன் போட்டோ எடுத்தது சொர்க்கத்துக்கு சென்ற நாள் எனவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
Ajith advice to his fan who chased his car for 18 KMs