வேலை நிறுத்தம்னா இழப்பு இருக்கும்; தயாரிப்பாளருக்கு விசுவாசி அஜித் அட்வைஸ்

வேலை நிறுத்தம்னா இழப்பு இருக்கும்; தயாரிப்பாளருக்கு விசுவாசி அஜித் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith advice his Viswasam producer to co operate in Film Industry Strikeநடிகர் சங்கமே ஒன்று திரண்டு நட்சத்திர விழா நடத்தினால் கூட அதில் கலந்துக் கொள்ளாதவர் அஜித்.

ரசிகர்களிடம் நான் சினிமா பார்ப்பதற்கு பணம் வாங்கி விடுகிறோம். பின்பு எதற்கு இந்த கலை நிகழ்ச்சி வசூல் என்பார்.

தற்போது அவரது விசுவாசத்திற்கு சான்றாக இன்னொரு நிகழ்வு நடந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு அறிவித்தபடி மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

மேலும் இன்று மார்ச் 16 முதல் திரைப்பட துறை சார்ந்த அனைத்து படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சினிமா தியேட்டர் சங்கங்களும் தாங்களும் தியேட்டர்களை மூடி விடுகிறோம் என்று அறிவித்து அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளில் மட்டும் பழைய படங்கள் திரையிடப்படும் என அறிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.

இதனிடையில் அஜித் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு விட்டன.

படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் முறையிட்டதுடன் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டுள்ளாராம்.

இதனையறிந்த அஜித், “அனைவரது நலனுக்கான போராட்டத்தில் நமது நலன் மட்டும் பார்ப்பது நியாயம் அல்ல.

சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்கள் முடிவை அமுல்படுத்த தீவிரமாக உழைக்க வேண்டும். அதைவிடுத்து விஸ்வாசம் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டது தவறானது” என்று சத்யஜோதி தியாகராஜனுக்கு அட்வைஸ் செய்தாராம்.

Ajith advice his Viswasam producer to co operate in Film Industry Strike

விக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா

விக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivan suriyaகடந்த ஜனவரி மாதம் 2018 பொங்கலுக்கு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு டொயாட்டா கார் ஒன்றை பரிசளித்தார் சூர்யா.

இது அப்பட வெற்றிக்கு அன்பளிப்பு என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கி வெளியிட்ட சேலம் விநியோகஸ்தர் தனது கணக்கை அப்படியே வெளியிட்டு, ஓடாத தோல்விப் படத்துக்கு ஏன் இந்த பில்டப்பு? என்று கேட்டிருக்கிறார்.

இதில் யார் சொல்வது உண்மை.? என கோலிவுட் குழம்பியுள்ளது. படத்தயாரிப்பாளர் உண்மையை சொல்வாரா? என காத்திருப்போம்.

Suriya gift to Vignesh Shivan creates issue Whether TSK movie is hit or flop

விநியோகஸ்தரின் லாப நஷ்ட கணக்கு படம் இதோ…

tsk salem box office

தமிழ் புத்தாண்டில் தளபதி ரசிகர்களுக்கு விஜய் 62 விருந்து

தமிழ் புத்தாண்டில் தளபதி ரசிகர்களுக்கு விஜய் 62 விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 62 first look release on Tamil New yearசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் 62 படம் உருவாகி வருகிறது.

துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரு படங்களின் வெற்றிக்கு பின்னர் ஏஆர். முருகதாஸ் மற்றும் விஜய் இதில் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இரண்டுக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால், தளபதி ரசிகர்கள் தமிழ் புத்தாண்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Thalapathy 62 first look release on Tamil New year

விஜய்-தனுஷ் படத்தை அடுத்து வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி

விஜய்-தனுஷ் படத்தை அடுத்து வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varalaxmi sarathkumarபாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் தேசிய விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர் வரலட்சுமி சரத்குமார்.

அந்தளவுக்கு அருமையான நடிப்பை கொடுத்திருந்தார்.

இவர் தற்போது ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவரது பிறந்தநாளில் விஜய்யின் 62-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது அதிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கவுள்ள ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கியுள்ளனர்.

இதில் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார் வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு.?

ரஜினி கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Partyஅரசியலுக்கு வருவது உறுதி, எம்ஜிஆரை போல நல்லாட்சியை கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்துவிட்டு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

தனது ஆன்மிக பயணத்தை முடித்த பிறகு, அரசியல் கட்சி பெயரை அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் ரஜினிகாந்த் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான வேலைகளில் தற்போது சௌந்தர்யா ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம், ரஜினியின் அடுத்த அரசியல் வாரிசு தனுஷ் என அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறும்போது… குடும்ப அரசியலை விரும்பாதவர் தலைவர் ரஜினி. எனவே இந்த செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கின்றனர்.

ம்ம்ம்ம்ம்… பொறுத்திருந்து பார்ப்போம்…

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Party

திருட்டுத்தனமாக படம் காட்டிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது

திருட்டுத்தனமாக படம் காட்டிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil rockersதமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவு செய்து திரையுலகத்திற்கே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்கள் தமிழ் ராக்கர்ஸ்.

ஒருபுறம் பலரும் இந்த இணையத்தை பலரும் திட்டினாலும் அதுவே இதற்கு விளம்பரபாக அமைய இது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

தென்னிந்திய சினிமாவின் ஆணி வேரையே ஆட்டம் காண வைத்தது.

இதனால் பெருமளவில் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் இதற்கு முடிவுகட்டும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழுவை உருவாக்கினார்கள்.

இதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் குழுவினை விரைவில் கண்டறிவோம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

அதன்படி தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள பைரசி பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களைப் பதிவேற்றம் செய்துவந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 நபர்களை எஸ்பி பிரசாந்தன் தலைமையிலான கேரள பைரசி பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்தி, சுரேஷ் , பிரபு ஆகிய மூவரும் புலிமுருகன் படத்தை .IN, .AC, .NE ,.CO, .IS, .US, .RO உள்ளிட்ட 19 டொமைன்களிலிருந்து பதிவேற்றம் செய்துவந்திருப்பதும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான்சன், ஜெகன் டிவிடி ராக்கர்ஸ் என்ற பெயரில் பதிவேற்றம் செய்துவந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து எஸ்பி பிரசாந்தன், “புலிமுருகன் மற்றும் ராம் லீலா படக் குழுவினர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து கண்காணித்துவந்து அவர்களைக் கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரங்களுக்காக பல்வேறு நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றிருப்பதால் இவர்களின் அக்கவுண்ட்களைத் தொடர்ந்து கண்காணித்து, போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் பயன்படுத்திவந்த லேப்டாப், ஹார்டு டிஸ்க், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த வருடம் தமிழ் ராக்கர்ஸ் அக்கவுண்டிற்கு ஒரு கோடியும், டிவிடி ராக்கர்ஸ் அக்கவுண்டிற்கு 75 லட்சமும் பணபரிமாற்றம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை பைரசி பிரிவு போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.

ஆனால் மற்றொரு பெயரில் படத்தை வெளியிட்டு வந்துள்ளனர்.

பிரித்விராஜின் விமானம் படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக படக் குழுவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் அந்த தளத்தை கண்காணித்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Articles
Follows