நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sillu karuppatti stillsஇந்த சமூகத்தில் காதல் குறைந்து கொண்டே போகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த நம்பிக்கைகளை புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. நிச்சயமாக, ஒவ்வொரு காதலர் தினத்திலும் இசை காதலர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த ‘பிப்ரவரி’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள்.

பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்திப்போம், ஆனால் நாம் அவருடன் நீண்ட காலம் பழகியது போலவும், உரையாடியது போலவும் ஒரு வலுவான உணர்வை கொடுக்கும். அது தான் தெய்வீக காதலின் அழகு அல்லவா?. நாம் சந்திக்கும் முன்னரே ஆன்மாக்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை, இதை நம்பாதவர்களுக்கு அந்த தருணம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரதீப்குமார் முதன் முதலில் டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், சில்லுக் கருப்பட்டி மூலம் இசையிலும் காதலை அள்ளி தெளிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்கிறார்.

கண்ணம்மா, மாயநதி, ஆகாயம் தீப்பிடிச்சா, ஆகாசத்த நான் பாக்குறன், மோகத்திரை மற்றும் பல ஆன்மாவை தொடும் பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரதீப் குமார், ஹலிதா ஷமீம் எழுதிய இந்த பாடலையும் பாடியிருக்கிறார்.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட நான்கு அழகான காதல் கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு தான் சில்லு கருப்பட்டி. வெங்கடேஷ் வெலினேனி தயாரித்திருக்கிறார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே மற்றும் சில பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மாதவன் – அனுஷ்கா இணையும் புது படம்

மாதவன் – அனுஷ்கா இணையும் புது படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhavan and anushkaசில நேரங்களில் ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு மட்டும் நமக்கு மயிர்க்கூச்செரியும் அனுபவத்தை வழங்கும். நம் மனது அடுத்த உடனடியான சிந்தனையாக அந்த பெரிய படம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி கற்பனையாக சிந்திக்க துவங்கி விடும். மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த நடிகர்கள் நடிக்கும், இந்த படத்தின் பணிகள் தற்போது முழு மூச்சில் நடந்து வருகிறது. இது ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் திரைப்படமாகும். கோபி மோகன் உடன் இணைந்து கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராவும் பணிபுரிகிறார் கோனா வெங்கட்.

இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, “நான் உண்மையிலேயே உறைந்து போய் இருக்கிறேன். பல வருடங்களாக நடிப்பில் மகத்தான சாதனையை புரிந்திருக்கும் மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்துக்கு கிடைத்திருப்பது, என்னை மிகக் கடுமையாக உழைக்க, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்துகிறது. குறிப்பாக, இது ஒரு சைலண்ட் த்ரில்லராக இருப்பதால் அது முழுமையாக ‘நடிகர்கள்’ மற்றும் ‘தொழில்நுட்ப கலைஞர்கள்’ சார்ந்தது, அதற்கேற்ற வகையில் சிறப்பானவர்களை கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மாதவனின் அர்ப்பணிப்பு அபாரம். அதனால் தான் அப்படிப்பட்ட திரைப்படங்கள் அவரை விரும்புகின்றன. அவரின் சமீபத்திய கதைகளில், சிறந்த நடிகராக ப்ரீத் சீரீஸிலும், மிகக்கடுமையான பயிற்சியாளராக இறுதிச்சுற்று படத்திலும் அவர் ஸ்கோர் செய்ததை பார்த்தாலே புரியும். அவர் ‘சாக்லேட் பாய்’ என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை, மாறாக தன் திறமைகளை மேம்படுத்தும் கதைகளை நடிக்கவே விரும்புகிறார். இந்த படம் அவரது மகுடத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனுஷ்கா ஷெட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவரது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு ‘அற்புதமான நடிகை’ என்று நிரூபித்தவர். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற குணங்கள் தேவைப்பட்டது. அனுஷ்காவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு ஆகியோர் மொழி மற்றும் எல்லைகளை கடந்து தங்கள் திறமையால் பிரபலமானவர்கள். அவர்களும் இந்த படத்தில் நடிப்பது பலம். குறிப்பாக கோனா வெங்கட் சார் மற்றும் கோபி மோகன் சார் எழுதிய கதை மற்றும் திரைக்கதையை திரையில் மொழி பெயர்க்கும் செயல்முறையை அனுபவிப்பதில் ஒரு இயக்குனராக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக தான் மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்கிறார் இயக்குனர்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார். பாப் பிரவுன் (ப்ரிடேடர்ஸ், தி வால் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் புகழ்) சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். க்‌ஷனம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ போன்ற திரைப்படங்களில் தன் ஒளிப்பதிவு மூலம் தெலுங்கு சினிமாக்கு ஒரு புது வண்ணத்தை வழங்கிய ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்கிறார். யனா ருசனோவா (ப்ரிசம், ட்ரோன் வார்ஸ், தி நெக்ஸ்ட் பிக் திங் புகழ்) கலை இயக்குனராக பணிபுரிகிறார். கோபி மோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார். 1500 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.

ரஜினிக்கு இரு வேடம் கொடுத்து அழகு பார்க்கும் முருகதாஸ்

ரஜினிக்கு இரு வேடம் கொடுத்து அழகு பார்க்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth going to play dual role in Thalaivar 166ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் பின்னர் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்பட சூட்டிங் அடுத்த மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சமூக சீர்திருத்த போராளி என இரண்டு வேடங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth going to play dual role in Thalaivar 166

விஜய்யுடன் கை கோர்க்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் கபீஸ் பூவையார்

விஜய்யுடன் கை கோர்க்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் கபீஸ் பூவையார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Singer fame Kabish Poovaiyar team up with Vijay in Thalapathy 63விஜய், நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரது நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை தற்போது அட்லி படமாக்கியுள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பிரபலமான கபீஸ் பூவையார் என்ற சிறுவனும் இப்படத்தில் நடிக்கிறாராம்.

அத்துடன் ரஹ்மான் இசையில் ஒரு பாடலையும் கபீஸ் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.

Super Singer fame Kabish Poovaiyar team up with Vijay in Thalapathy 63

ஆர்கே. சுரேஷின் ‘அமீரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் சீமான்

ஆர்கே. சுரேஷின் ‘அமீரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seeman and RK Suresh team up for Ameera movie‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகர் ஆர். கே. சுரேஷ் அவர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஆர் சுப்ரமணியம் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்க நாயகியாக அனுசித்தாரா நடிக்கிறார்.

இவர் அண்மையில் வெளியான ‘பொதுநலன் கருதி’ படத்தில் நடித்தவர்.

இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இப்பட பூஜை நாளை பிப்ரவரி 22ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறவுள்ளது.

Seeman and RK Suresh team up for Ameera movie

சுஜித்துடன் என் மனைவி அதிதிக்கு நிச்சயதார்த்தம்.. ; அழுது புலம்பும் அபி சரவணன்

சுஜித்துடன் என் மனைவி அதிதிக்கு நிச்சயதார்த்தம்.. ; அழுது புலம்பும் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abi saravanan and ahiti menon“எனக்கும் அதிதி மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அவர் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும் அதிதிக்கும் பிரச்சனையானது.. அதைத்தொடர்ந்து அந்த இயக்குனர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு கூறியதுடன் மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. ஆனால் இதுபற்றி தற்போது என் மீது அளித்துள்ள புகாரில் அதிதி மேனன் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனக் கூறியதால் மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி எனது வீட்டிலேயே பாதுகாப்பு அளித்தேன்.. . அப்போது நான் அவரை அப்பவே அக்கறையுடன் கவனித்துக் கொள்வதாக எனது பெற்றோரிடம் அதிதி மேனன் கூறி, திருமணத்திற்கு சம்மதம் கேட்க, எனது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அப்போது அதிதியின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும் வாழ்த்தும் பெற்று 2016 ஜூன் 9ஆம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.. அதன்பின் மதுரையிலும் அதைத் தொடர்ந்து சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டிலும் கடந்த மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அந்த வீட்டின் ஒப்பந்தப் பாத்திரம் ஆதிரா சந்தோஷ் கணவர் பெயர் சரவண குமார் என்றே போடப்பட்டிருக்கும். கடந்த மூன்று வருடங்களில் கேரளாவில் உள்ள அதிதி வீட்டிற்கு 10-க்கும் மேலான தடவை சென்று அவரது பெற்றோருடன் தங்கி இருந்து வந்துள்ளோம்.

கடந்த நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், நாங்கள் தங்கிருந்த வீட்டை எனக்கே தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்கள், கார், பைக் மற்றும் பீரோவில் இருந்த நகை, பணம், எனது 2 செல் போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் அதை விசாரித்த போது அவர் சுஜித் என்ற நபருடன் தவறான உறவில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது. சுஜித்தை நேரில் அழைத்து விசாரித்த போது அவர்களுக்கிடையேயான கள்ள காதலை ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் அதிதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, எனது சொந்த பிரச்சனையால் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்பதால் நான் படப்பிடிப்பிற்கு சென்று விட்டேன். அதன் பின்னரும் 40 நாட்களுக்கும் மேலாக சமாதானம் பேச முயற்சித்து தோல்வியுற்றதால் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் எங்களை சேர்த்து வைக்கும்படி வழக்கு தொடர்ந்தேன்.

மூன்று வாரங்களுக்கு மும்பு அதிதி அவரது ஆண் நண்பர் சுஜித்துடன் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பதாக தெரிந்ததை அடுத்து அவருடன் சமாதானம் பேச சென்றேன். அப்போது நான் அதிதியுடன் பேச முயன்ற போது என்னை பேசவிடாமல் தடுத்து தாக்கியதால் நான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

இவை அனைத்தும் நடந்து கொண்டு இருக்கும் போதுதான், என் மீதும் நான் செய்துவரும் சமூக பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார்.

நேற்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு கொடுத்து, எனது திருமணம் சட்டப்படி செல்லும் என்பதையும் தமிழக அரசு பதிவுத்துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் என்றும் சார்பதிவாளர் மூலம் பெற்ற ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.எங்கள் திருமணம் லீகலா இல்லையா என்பது பற்றி சட்டபூர்வமான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது..

ஆனால் சமூகம் சம்பந்தமான எனது பணிகளை கொச்சைப்படுத்தி, என்னை அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். இந்த சமூகத்தில் எனக்கு இருந்த நற்பெயரை கெடுத்து விட்டார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் விவசாய போராட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் மூலம் கிடைத்த நிதியை முறைகேடாக எனது சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்..

மதுரையில் நான் வாங்கிய வீடு என்னுடைய தந்தையின் ஓய்வூதிய பணத்தை முன் தொகையாக செலுத்தி வாங்கப்பட்ட வீடு.. அந்த வீட்டின் மதிப்பு மொத்தம் 27 லட்சம் ரூபாய்.. அதற்கு 20 லட்சம் ரூபாய் வங்கியில் கடனாக பெற்றுள்ளோம்.. அந்த வங்கிக்கடன் கூட எனது தந்தையின் வயது காரணமாக அவருக்கு கிடைக்கவில்லை என்பதால் என் பெயரிலும் என் அக்கா பெயரிலும் சேர்த்து வங்கிக்கடன் பெற்றோம். முன் தொகைக்காக என் தந்தையின் ஓய்வூதியப் பணமும், நாங்கள் ஏற்கனவே குடி இருந்த வீட்டின் அட்வான்ஸ் தொகை ஐந்து லட்சமுமாக சேர்த்து மொத்தம் அந்த 7 லட்சத்தை தயார் செய்தோம்.

என்னுடைய தந்தை அவருடைய பல வருட உழைப்பில் கிடைத்த ஓய்வு ஊதியத் தொகையை கொண்டு தனக்கென சொந்தமாக இப்போதுதான் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். ஆனால் அந்த வீட்டையும் இப்படி முறைகேடாக சம்பாதித்த பணத்தில் நான் வாங்கி இருக்கிறேன் என்று கூறி அவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.

நான் ஜல்லிக்கட்டு மற்றும் விவசாய போராட்டங்களில் முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் நான்கு கார்களை வாங்கி உள்ளேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் அதிதி. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. நான் ஓலா நிறுவனத்துடன் இணைந்து டிராவல்ஸ் பிசினஸ் தொடங்குவதற்காக என்னுடைய நண்பர்களிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளேன்.. அவர்கள் எனது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியதற்குண்டான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான்கு கார்களுக்கும் சேர்த்து தனித்தனியாக வங்கிக்கடன் பெறுவதற்காக நான் செலுத்திய மொத்த முன்தொகை சுமார் மூன்றரை லட்சம் ரூபாய்தான். இதில்கூட மீதி ஒரு லட்சம் ரூபாயை எனது தந்தை, வீட்டிலிருந்த நகையை அடமானம் வைத்துதான் எனக்கு கொடுத்துள்ளார். அவர் நகை அடமானம் வைத்ததற்கான ஆதாரமும் அந்தப்பணத்தை எனக்கு வங்கி கணக்கு மூலம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் இந்த சமூகத்தின் மீதான ஆர்வத்தில், எனது சொந்த விருப்பத்தின் பேரில் ஜல்லிக்கட்டு, விவசாய புரட்சி போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்காக தோள் கொடுத்ததை அதிதி கொச்சைப்படுத்தி உள்ளார். 2017ல் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் விவசாய போராட்டத்திலும் கலந்து கொண்டதில் நான் முறைகேடு செய்திருந்தால் கடந்த இரண்டு வருடமாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது திடீரென அது பற்றி புகார் செய்வது ஏன்?.. அப்போதே அவற்றை தெரியப்படுத்தி இருக்கலாமே..?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்த காலம் என்று ஒன்று இருக்கும்.. அவரும் கடந்த காலத்தில் ஒரு பையனை காதலித்து கொச்சியில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.. கேரளாவில் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்த நிலையில் அவரை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார் அதிதி. இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது.

தற்போது சுஜித் என்பவருடன் தொடர்பில் உள்ளார் என்கிற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி அவர் அளித்த புகாரில் எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை.. மேலும் அந்த சுஜித்துடன் அதிதி மேனனுக்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் அவர்களின் குடும்பத்தார் ஈடுபட்டுள்ள தகவலும் எனக்கு தெரியவந்தது.. அந்தப் பையன் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. இளமுருகு எனும் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன்..

இந்த தகவல்களை எல்லாம் புகாராக கொடுத்து என் மனைவியை நான் அசிங்கப்படுத்த விரும்பாமல் சட்டபூர்வமாகவே அணுக நினைத்தேன்.. எனக்கும் அதிதி மேனனுக்கு திருமணம் நடக்கவில்லை என அவர் சொல்கிறார். ஆனால் திருமணம் நடந்ததை நான் சட்டபூர்வமாக நிரூபிப்பேன். அவருடன் நான் குடும்பம் நடத்தியதற்கு பல சாட்சிகள் இருக்கின்றனர்..

அவரது ஈமெயிலை ஹேக் செய்து அவருடைய சான்றிதழ்களை திருடி விட்டதாக இன்னொரு ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். எங்களது திருமணம் நடைபெற்றபோது, பதிவாளர் முன்பு அவர் கையெழுத்திட்டது உட்பட அனைத்துமே சாட்சிகளாக ஆதாரங்களாக இருக்கின்றது.. என்னை திருமணம் செய்யவில்லை என்றால் எப்படி என்னுடன் மூன்று வருடம் சேர்ந்து வாழ முடியும்..? என்னுடன் அவர் தங்கியிருந்த வீட்டிற்கான ஒப்பந்த பத்திரமே அபி சரவணனின் மனைவி என அவர் பெயரில் தானே போடப்பட்டிருக்கிறது.

அவர் தனது கள்ளக்காதல் விவகாரத்தை திசைதிருப்புவதற்காக என் மீது எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுநாள்வரை நான் அவர் மீது எந்த தனிப்பட்ட புகாரும் கொடுக்கவில்லை. இந்த விவகாரம் பற்றி அவரிடம் கேட்க போனபோது அவருடன் இருந்த அவரது ஆண் நண்பர்கள் என்னை தாக்க முயற்சி செய்தார்கள் என்பதால்தான் அவர்கள் மீது, நான் காவல்துறையில் புகார் அளித்து உள்ளேன். 3 ஆண் நண்பர்களுடன் தங்கி இருந்த அதிதி மேனன் எதற்காக என்னிடம் சமாதானம் பேச அவரது நண்பர் ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்..? அதுவும் இரவு 12 மணிக்கு..!

மேலும் திருவனந்தபுரம் எல்லைக்குள் வரக்கூடாது என என்னை காவலர்கள் எச்சரித்து அனுப்பியதாக ஒரு குற்றசாட்டு சொல்லி இருந்தார்.. ஆனால் நான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களுக்கும் மேலாக திருவனந்தபுரத்தில் தான் காவல்துறை அனுமதியுடன் நடந்தது.”

என தனது தரப்பு நியாயங்களை முன் வைக்கிறார் அபி சரவணன்.

More Articles
Follows