தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதுபோல் அவரது மேடை பேச்சு, வாய்ஸ் ஆகியவையும் பெரியளவில் ரீச் ஆகும்.
இதனால் ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வந்து தமிழகத்தை ஆள வேண்டும் என நெடுநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு ரஜினி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, உயிர் பிழைத்து வந்தாலே போதும் என்று கூறி வந்தனர்.
லிங்கா, கபாலி படங்களின் வெளியீட்டின் போது ரசிகர்கள் அரசியல் பேச்சை எடுக்கவில்லை.
ஆனால் தற்போது, தலைவா தலைமையேற்க வா என்று ரஜினிகாந்தை அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
இது தொடர்பாக போஸ்டர் அடித்து தமிழகமெங்கும் ஒட்டி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் மீண்டும் ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
