தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட, சிலர் காவல் துறையினரை தாக்கினர்.
இதை கண்டிக்கும் வகையில் ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.” என கருத்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
இதனை கண்டித்த பாரதிராஜா… கர்நாடக் காவியின் தூதுவர் ரஜினி என கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.
ரஜினியிடம் இந்த கருத்து குறித்து கேட்டதற்கு, அரசியலில் இதெல்லாம் சகஜம் என கூறியிருந்தார்.
தற்போது மீண்டும் ரஜினி பற்றி பரபரப்பாக பேசியுள்ளார் பாரதிராஜா.
‘நான் ஒரு பச்சைத் தமிழன் என ரஜினி கூறுகிறார். இதன் மூலம் அவர் தன் தாய் மொழி கன்னடத்திற்கு துரோகம் செய்துள்ளார்.
தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்.
பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக் கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Again Bharathiraja speaks against Rajinikanth