சொகுசு கார் நுழைவு வரி வழக்கு : விஜய்யை தொடர்ந்து தனுஷ் கார் மீதும் விசாரணை

சொகுசு கார் நுழைவு வரி வழக்கு : விஜய்யை தொடர்ந்து தனுஷ் கார் மீதும் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படுவது வழக்கம்.

தான் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குமாறு கோரியிருந்தார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு தடை உத்தரவும் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியில் 50% செலுத்தும்படி தனுஷுக்கு உத்தரவிட்டது.

50% வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் தரப்பிலும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை ஆகஸ்ட் 5 வியாழக்கிழமை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

After Vijay, Dhanush seeks tax exemption for his luxury car

தயாரிச்ச படமெல்லாம் நஷ்டமாச்சு.; அப்பா சம்பாதித்த சொத்துக்களை அழித்தாரா எஸ்.பி.பி.சரண்.?

தயாரிச்ச படமெல்லாம் நஷ்டமாச்சு.; அப்பா சம்பாதித்த சொத்துக்களை அழித்தாரா எஸ்.பி.பி.சரண்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் எஸ்.பி.பி.சரண்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் எஸ்.பி.பி.சரண் கூறியதாவது…

“சினிமா மீதுள்ள ஆர்வத்தால் படங்கள் தயாரித்தேன்.

நான் தயாரித்த உன்னை சரணடைந்தேன் படத்திற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால் படத்திற்கு லாபம் கிடைக்கல.

தெலுங்கில் வெளியான ‘வர்ஷம்’ படத்தை தமிழில் மழை என்ற பெயரில் தயாரித்தேன். அதிலும் நஷ்டம்.

‘சென்னை 28’ படத்தை எடுத்தேன். படம் வெற்றி பெற்றாலும் பெரிய லாபமில்லை.

ஆரண்ய காண்டம் படம் தயாரித்தேன். அதற்கு தேசிய விருதுகள் கிடைத்தது.

ஆனால் பணம் வரவில்லை. நல்ல நல்ல படங்கள் எடுத்தும் எனக்கு லாபமில்லை. இதனால் மன உளைச்சல் தான் வந்தது.

சினிமாவில் நஷ்டம் இயல்பானது என அப்பா ஆறுதல் சொன்னார்..

இதனையறிந்தவர்கள் எஸ்.பி.பாலு சம்பாதித்த பணத்தையெல்லாம் பையன் அழிச்சிட்டான் என்றார்கள். மொத்த சொத்தும் கரைந்தது.

மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக கை கொடுத்தன.

கொரோனாவால் அப்பாவை இழந்துவிட்டோம். வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது.

தெலுங்கு டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிய இசை நிகழ்ச்சியை இனி நான் நடத்தவுள்ளேன். எனது தந்தை குரலில் பாடவும் இருக்கிறேன்.”

இவ்வாறு எஸ்.பி.பி.சரண் அந்த பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார்.

SPB Charan talks about his losses

கமல் படத்தை தயாரித்து 20 வருடங்களுக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படம்.; ஆதரவளித்தார் சூர்யா

கமல் படத்தை தயாரித்து 20 வருடங்களுக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படம்.; ஆதரவளித்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் தர்ஷனும், நடிகை லொஸ்லியாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார்.

பிரபல வெற்றிப்பட இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்த பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் ‘தெனாலி’, மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.

இப்படத்தில் கே. எஸ் ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லொஸ்லியா மற்றும் யோகி பாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள்.

இவர்கள் இருவரும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களில் சபரிகிரீசன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

அறிமுக கலை இயக்குநரான சிவா கலை இயக்கத்தை கவனிக்கிறார். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா, ‘என்ஜாய் என்ஜாமி’ புகழ் அறிவு ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இரட்டை இயக்குனர்கள் பேசுகையில்,’மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம்.

ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது.

இப்படத்தில் ரோபோ ஒன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும்.’ என்றனர்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா இன்று தன் இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

Actor Suriya released KS Ravikumar’s movie first look

BATH TUBல் தலையில்லாமல் தம் அடிக்கும் பெண் ‘பிசாசு’.; விஜய்சேதுபதி-ஆண்ட்ரியா பட மிரட்டல் லுக்

BATH TUBல் தலையில்லாமல் தம் அடிக்கும் பெண் ‘பிசாசு’.; விஜய்சேதுபதி-ஆண்ட்ரியா பட மிரட்டல் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T. முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’

தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் First Look Poster இன்று தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

விரைவில் இப்படத்தின் First Single வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

The most expected Horror Thriller Pisasu 2 first look is here

தன் அப்பா பெயரை இணைத்து தன் மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

தன் அப்பா பெயரை இணைத்து தன் மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 12ல் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில்.. “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் தற்போது தன் ஆண் குழந்தைக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அப்பா பல ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். அவரின் அப்பாவின் பெயர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் அப்பாவின் பெயரை தன் மகன் பெயருடன் இணைத்து வைத்துள்ளார் என்பதை இங்கே கவனிக்கலாம்.

Actor Siva Karthikeyan names his son ‘Gugan Doss’

நிவின்பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் சிம்பு பட புரொடியூசர்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி

நிவின்பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் சிம்பு பட புரொடியூசர்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ‘மாநாடு’ என்கிற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய படத்தை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார்.

‘தங்க மீன்கள்’ படம் மூலம் 3 தேசிய விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கச் செய்தவர் ராம்.

‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட, மலையாள திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

மக்கள் தொடர்பு – A. ஜான்

V house productions next film announcement is here

More Articles
Follows