தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரையுலகிறல் கன்னடம் மற்றும் மலையாள சினிமா வட்டாரத்தில் போதை புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இது தொடர்பாக நடந்த சோதனைகளில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முக்கிய நபராக கருதப்பட்ட கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.
இதில் அவர் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்படி நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
சஞ்சனா கல்ராணி, தமிழில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். தண்டுபால்யா 2ம் பாகத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது மற்றொரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு பிரச்னையை கூறி சஞ்சனாசிங் தற்போது ஆஜராக முடியவில்லை எனவும் பிறகு ஆஜர்வதாக தெரிவித்து இருந்தாராம்.
கன்னட படங்களில் நடித்து வரும் ராகினி திவேதி தமிழில் நிமிர்ந்து நில், அரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ராகினி தனது வழக்கறிஞர் மூலம் செப்டம்பர் 7-ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்காத போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ஐகோர்ட்டில் அனுமதி பெற்று இன்று காலை பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
இதன்பின்னர் ராகினியை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.