இதுவரை சூர்யாதான் என் மகனுக்கு ஹீரோ; இனிமே நான்தான்… ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

36 வயதினிலே பட வெற்றியைத் தொடர்ந்து மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.

பிரம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படம் குறித்து நடிகை ஜோதிகா கூறியதாவது…

மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய தோழிகளை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதுதான் இப்பட கதை.

ஆனால் இப்படியான கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு நடிக்கும்போது பயமாக இருந்தது.
என்னால் சரியாக வசனத்தை பேச கூட முடியவில்லை. பின்னர்தான் அவர்கள் ஒத்துழைப்பு மூலம் சரியானது.

ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. எனவே சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சியளித்தார்.

என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது.

என் மகன் தேவ்வுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ.

நாச்சியார் படம் வந்தபிறகு அவனுன்கு நான் ஹீரோவாக தெரிவேன் என நம்புகிறேன்.” என்றார்.

After Naachiyar release i will be hero for my son says Jothika

வேலைக்காரன் செய்த வேலையால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன்ராஜாவும், ரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும் இணைந்துள்ள படம் வேலைக்காரன்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பதால் இதன் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தமாதம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

பின்னர் அந்த தேதி உறுதியில்லை என தகவல்கள் பறக்க, சில ஊடகங்கள் மெர்சல் படத்துடன் மோதும் என தெரிவித்தன.

எனவே சிவகார்த்திகயேன் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகாக காத்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த பண்டிகை தினத்தை குறிவைக்க தொடங்கியது வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனமாக 24ஏஎம் ஸ்டூடியோஸ்.

அதன்படி இறுதியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை தேதியை மாற்றி வருடத்தின் இறுதிக்கு படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துவிட்டதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்களாம்.

Sivakarthikeyan fans disappointed because of Velaikkaran release postponed

மணிரத்னம்-விஜய்சேதுபதி-ஜோதிகா கூட்டணியில் ஐஸ்வர்யாராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காற்று வெளியிடை பட தோல்விக்கு பிறகு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம்.

எனவே இந்த முறை மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் காணவிருக்கிறார்.

இவர் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி, துல்கர்சல்மான், பகத்பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்க, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷீம் இணைந்துள்ளார்.

இத்தகவலை ஐஸ்வர்யாவும் உறுதிசெய்துள்ளார்.

Aishwarya Rajesh teams up with Director ManiRatnam for First time

சூர்யா நீங்க டாக்டர் இல்ல; ஒரு ஆக்டர். தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு விவகாரத்தாலும் மாணவி அனிதாவின் தற்கொலையாலும் தமிழகம் உச்சக்கட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

எனவே அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் இதுகுறித்து தங்களை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவும் அனைவருக்கும் சமமான கல்வி இல்லாத போது, எதற்காக நீட் தேர்வு? என தன் கருத்தை பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது…

சூர்யா ஒரு ஆக்டர்தான். அவர் ஒரு டாக்டர் அல்ல. அவருக்கு நீட் தேர்வை பற்றி என்ன தெரியும். ?

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டும் என தெரிவித்தார்.

Suriya you are an actor not a Doctor says Tamilisai Soundararajan

அருண்ராஜா காமராஜீக்கு உதவும் கிரிக்கெட் வீராங்கனை தேவிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ் என்பதை பார்த்தோம்.

இதுவரை எந்த சினிமாவில் இப்படியொரு கதைக்களத்தை எவரும் எடுக்கவில்லை என்பதால், இதை அவர் தொட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல், தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறாராம்.

இது படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கும் இது பெரும உதவியாக இருக்கும் என அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

Arunraja Kamaraj talks about Women Cricket fame Devika

 

தலைக்கனம் இல்லாத ரஜினி; நேர்மையானவர் விஜய்சேதுபதி… – ரமேஷ்திலக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு சினிமாவிலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்று வருபவர் ரமேஷ்திலக்.

விஜய்சேதுபதியுடன் பல படங்களிலும், ரஜினியும் கபாலி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

ரஜினி சார் எதையும் ஞாபகம் வைத்திருக்கிறார். கபாலி சூட்டிங்கில் நான் நடித்தபோது ‘காக்கா முட்டை’ பட பற்றி கேட்டார்.

அதுபோல் காலா சூட்டிங்கில் கபாலி படத்தில் நான் நடித்த சின்ன ரோலை ஞாபகம் வைத்திருந்தார்.

இந்த உயரத்திலும் அவர் தன்னடக்கமாக உள்ளார். கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாதவர் தலைவர். நான் அவரின் ரசிகன் என்றார்.

அதன்பின்னர் விஜய்சேதுபதி குறித்து கூறியதாவது…

‘சூது கவ்வும்’ படத்தில் அவருடன் நடித்தேன். அன்றிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. மிகவும் நேர்மையான மனிதர் அவர்.

எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றாலும் எப்போதும் போல்தான் பேசுவார். பழகுவார். ” என்றார் ரமேஷ் திலக்.

Actor Ramesh Thilak talks about Rajinikanth and Vijay Sethupathi

More Articles
Follows