ஜானகி பாடிக்கொடுத்த பாடலால் பரவசத்தில் *பண்ணாடி* படக்குழு

ஜானகி பாடிக்கொடுத்த பாடலால் பரவசத்தில் *பண்ணாடி* படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After long time Play back singer S Janaki sung in Pannadi movieதிரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்த எஸ்.ஜானகி பாடல்கள் பாடிக் கொடுத்ததை எண்ணி ‘பண்ணாடி’ படக் குழு நெகிழ்ந்து போய்க்கிடக்கிறது.

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் “பண்ணாடி’. இப்படத்தை டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார்.

பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் பழனி வேலன் கூறும்போது…..

நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ‘ பண்ணாடி என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் .

இது கிராமத்துப் பின் புலத்தில் உருவாகிறது . முற்றிலும் புதிய களத்தில் ஆர்.வி. உதயகுமார், வேல ராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் முன்னனி பிரபலமான நட்சத்திரங்கள் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இதுவரை திரை காணா யதார்த்த பாத்திரங்களின் உணர்வுகளில் இப்படம் உருவாகிறது.

படம் தொடங்குவதற்கு முன் சேகர் என்பவர் மூலமாக. இப்படத்தில் ஒரு பாடல் பாட எஸ்.ஜானகியைக் கேட்டிருந்தோம்.

அப்போதே ஜானகி சினிமாவில் பாடுவதைக் குறைத்து அனேகமாக நிறுத்தியிருந்தார். அப்போது கேட்ட போது சூழல் பிடித்துப்போய் பார்க்கலாம் படம் தொடங்கும் போது வாருங்கள் என்றிருக்கிறார் நாங்கள் மீண்டும் எஸ்.ஜானகியைப் பார்த்த காலக்கட்டத்தில் அவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

“நான் இனிப் பாடுவதில்லை என்று முடிவெடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட் டேன்” என்றிருக்கிறார். ஆனால் இதற்கு உங்களைத் தவிர வேறு யாரையும் கற்பைனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை என்றிருக்கிறார்கள். கடைசியில் ஒரு வழியாகச் சமாதானமாகி பாட ஒப்புக் கொண்டு பாடியிருக்கிறார்.

அந்தஅனுபவம் பற்றி இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் கூறும் போது

” இப்படத்தில் வரும் ஒரு பாடல் மகிழ்ச்சி, துயரம் என இரு வேறு வடிவங்களில் இருக்க வேண்டும் இதற்கு நான் ஜானகியம்மாவைப் பாட வைப்பதை ஒரு கனவு போல எண்ணியிருந்தேன்.

அவர் சினிமாவை விட்டு விலகி விட்டேன் என்றதும் சற்றே அதிர்ச்சியாகவே இருந்தது..

நாங்கள் ஜானகி அம்மாவிடம் நீங்கள் தான் பாட வேண்டும் என்று கேட்டேன் அதற்கு நீங்கள் வேறு யாராவது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன். என்னை விட்டு விடுங்கள் என்றார். நாங்கள் விடாமல் நச்சரித்தோம்.

விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் எங்கள் தொல்லை தாங்காமல் என்ன வரிகள் என்றார் நான் ‘ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன் ‘என முதல்வரியைச் சொன்னேன். புன்முறுவல் செய்தார்.

அப்பாடா என்றிருந்தது. முதலில் சோகப் பாடலைப் பாடியவர் ,டூயட் பாடுவது ஆண் குரல் யார் என்றார். நான் டிராக் பாடி இருந்ததைப் போட்டுக் காட்டினேன். என் குரல் அவருக்குப் பிடித்து விடவே நீயே பாடு என்றார். இல்லம்மா நான் சும்மா டம்மிவாய்ஸ் க்காகப் பாடினேன் என்றேன்.

வேறு யாரையாவது வைத்துப் பாடவைப்பதே திட்டம் என்றேன். ஆனால் நீயே பாடு என்றார் .ஒரு கட்டத்தில் நீ பாடினால் தான் நான் பாடுவேன் என்றார் பிடிவாதமாக . சரி என்றேன். மகிழ்ச்சி, சோகம் என இரண்டு பாடல்களையும் ஒரே டேக்கில் பாடிக் கொடுத்தார்.

அத்துடன் படக் குழுவையும் வாழ்த்தினார். 80 வயதில் சற்றும் உற்சாகம் குறையாமல் அவர் பாடிக்கொடுத்தது வியப்பூட்டியது.ஜானகியம்மா எங்கள் படத்திற்குள் வந்தது எங்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது. ” என்கிறார்.

இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி வேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா. பழநிவேலன்.

இவர், கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பிரகாஷ். ஜானகியம்மா பாடிய இரண்டு பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

After long time Play back singer S Janaki sung in Pannadi movie

மன்னிப்பு கேட்க மாட்டேன் என முருகதாஸ் கூறியதற்கு ரஜினி படம் பின்னணியா..?

மன்னிப்பு கேட்க மாட்டேன் என முருகதாஸ் கூறியதற்கு ரஜினி படம் பின்னணியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kanth and AR Murugadossவிஜய் நடிப்பில் உருவான சர்கார் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிக்களை வைத்திருந்தார் முருகதாஸ்.

மேலும் அந்த காட்சியில் அவரே நடித்தும் இருந்தார்.

பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு அந்த காட்சி நீக்கப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

அதன்பின்னர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

ஆனால் மன்னிப்பும் கேட்க முடியாது. அரசை விமர்சிக்கும் காட்சிகளை இனி என் படங்களில் வைக்க மாட்டேன் என்ற உத்திரவாதமும் தர முடியாது என உறுதியாக கூறினார் முருகதாஸ்.

இந்நிலையில் முருகதாஸ் அடுத்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

அதில் ரஜினி ஆலோசனைப்படி நிறைய அரசியல் பன்ச்களும் இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அப்படியிருக்கையில் அரசை விமர்ச்சிக்கும் காட்சிகளை இனி வைக்க மாட்டேன் என முருகதாஸ் எப்படி? உத்திரவாதம் அளிப்பார். என விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்மஸ்-பொங்கலுக்கு இஷ்டம் போல ரிலீஸ் பண்ணிங்குங்க…- விஷால்

கிறிஸ்மஸ்-பொங்கலுக்கு இஷ்டம் போல ரிலீஸ் பண்ணிங்குங்க…- விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஇன்று டிசம்பர் 7ல் மூன்று தமிழ் படங்களும் அடுத்த வாரம் டிசம்பர் 14ஆம் தேதி இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகிறது.

ஆனால் டிசம்பர் 20 மற்றும் 21ல் தேதிகளில் முன்னணி நடிகர்களின் 5 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை தினம் என்பதாலும் அதற்கு அடுத்த வாரமே புத்தாண்டு (ஜனவரி 1) என்பதாலும் இந்த விடுமுறை தினங்களை குறி வைத்து 5 படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தனுஷின் மாரி2, ஜெயம் ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஜய்சேதுபதியின் சீதக்காதி, விஷ்னுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரேடியாக 5 படங்கள் மோதினால் தமிழகத்தில் இருக்கும் 1000 தியேட்டர்களில் ஒரு படத்திற்கு 200 தியேட்டர்கள் கூட கிடைக்காது.

இதனால் எந்த தயாரிப்பாளருக்கும் சரியான லாபம் கிடைக்காது என கோலிவுட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைக்கு தயாரிப்பாளர் சங்கமும் ஒன்று கூடி அந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் பேசி பார்த்தது.

ஆனால் எந்தவொரு தயாரிப்பாளரும் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்…. வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்று (festival date) தான் வெளிவர வேண்டும் என்றும் அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்று முடிவெடுத்து அவர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதின் பேரில் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கண்ட கிருஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டுகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது.

மேற்படி, இந்த இரு தேதிகள் தவிர்த்த மற்ற நாட்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள் வரும் வாரம் நடைபெறும் அனைத்து தயாரிப்பாளர்கள் கூட்டத்திற்குப் பின் முடிவு செய்யப்படும்.”

என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி-அஜித்தை சமாளிக்க முடியாது என்பதால் முன்கூட்டியே முடிவை அறிவித்த விஷால்

ரஜினி-அஜித்தை சமாளிக்க முடியாது என்பதால் முன்கூட்டியே முடிவை அறிவித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalஇந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 5 படங்கள் மோதுகின்றன.

டிசம்பர் 21ல் தனுஷின் மாரி2, ஜெயம் ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஜய்சேதுபதியின் சீதக்காதி, விஷ்னுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே தேதியில் மோதாமல் பட ரிலீஸ் தேதியை மாற்ற சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.

ஆனால் அந்த 5 பட தயாரிப்பாளர்களும் மறுப்பு தெரிவிக்க வேறு வழியில்லாமல் எப்படியோ நீங்களே தியேட்டர் எண்ணிக்களை முடிவு செய்து ரிலீஸ் செய்துக் கொள்ளுங்கள் என அறிவித்துவிட்டார்.

இந்த பிரச்சினைக்கு மட்டும் முடிவு சொல்லாமல் அடுத்த வருடம் வரவுள்ள பொங்கல் படங்களுக்கும் இப்போதே முடிவை அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட, அஜித் நடித்துள்ள விஸ்வாசம் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.

இரண்டும் ஒரே நேரத்தில் மோதினால் வசூல் பாதிக்கப்படும் என்பதை அறிந்தும் இரு பட தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவில் உறுதியாகவுள்ளனர்.

இப்போது வந்துள்ள 5 பட ரிலீஸ் பிரச்சினை நிச்சயம் பொங்கல் சமயத்திலும் 2 படங்களுக்கும் வர வாய்ப்புள்ளது.

சின்ன நடிகர்கள் பிரச்சினையே சமாளிக்க முடியாது. இதில் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் நிச்சயம் தீர்வே சொல்ல முடியாது என்பதால் அவர்கள் இஷ்டப்படியே ரிலீஸ் செய்துக் கொள்ள சொல்லிவிட்டார் விஷால்.

நெல் ஜெயராமன் வாழ்க்கையை மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் – தங்கர் பச்சான்

நெல் ஜெயராமன் வாழ்க்கையை மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thanagar bachchanநெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

’எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்?

மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர்.

அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர்.

நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்.

எதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர கடமை இருக்கிறது!

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.

முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கு இதான் தலைப்பா..? சூப்பர்ல..!

முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கு இதான் தலைப்பா..? சூப்பர்ல..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and AR Murugadossஇந்த 2018 வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் 2.0 படம் ஆகிய இரண்டும் திரைக்கு வந்துவிட்டது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் பொங்கல் தினத்தில் பேட்ட திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

தன் அரசியல் வருகைக்கு ஏற்ப இதில் அரசியல் பன்ச் டயலாக்குகள் அதிகம் இருக்க வேண்டும் என ரஜினி விரும்பியதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் சமூகம் சார்ந்த விஷயங்களும் தற்போதைய நாட்டு நடப்புகளும் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

தற்போது ரஜினியின் அனுமதிக்காக இந்த தலைப்பு காத்திருக்கிறதாம்.

ஒருவேளை இது முடிவானால் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான் என்பதில் ஐயமில்லை.

More Articles
Follows