தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2013ஆம் பெரும் எதிர்பார்ப்பில் உருவான கமலின் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு விஸ்வரூப பிரச்சினை எழுந்தது.
இஸ்லாமிய சமூகத்தை இழிவு படுத்தும் காட்சிகள் படத்தில் உள்ளதாக பிரச்சினை உருவாக படம் தமிழகத்தில் வெளியாகாமல் அண்டை மாநிலங்களில் வெளியானது.
இதனால் நாட்டை விட்டு வெளியேற தயார் என கமல் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், (தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட இது தொடர்பாக அப்போது பேட்டியளித்திருந்தார்) சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிய பின் படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது.
தற்போது இதே நிலைமை கரண் ஜோஹரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘ஏ தில் ஹே முஷ்கில்’ என்ற படத்திற்கு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் நடிகர் ஒருவர் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு பிரச்சினை உருவாகியுள்ளது.
இப்படம் வெளியானால், மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா அமைப்பு திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றனர்.
இதனால் மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையில் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இனி தனது படங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று தயாரிப்பாளர் கூறியதன் பின்னர் படம் வெளியாக தயாராகிவிட்டது.
ஒரு திரைப்படத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கலாமா? என்பதை முடிவு செய்ய சென்சார் கமிட்டி உள்ளது.
ஆனால் இது போன்ற சில அமைப்புகளால் சினிமாவிற்கு மேலும் பிரச்சினைகள் வலுத்து வருகிறது.
மேலும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள். இங்குள்ளவர்கள் அங்கே விளையாட செல்கிறார்கள்.
ஆனால், மொழி, மதம், இனம், மாநிலம் பார்க்காத சினிமாவில் தற்போது இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதன் காரணமாக இயக்குனரின் படைப்பு சுதந்திரம் பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்பது மட்டும் நிச்சயமே.