தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
,
ஈசிஆர் சாலையில் நேற்று நள்ளிரவு ஜூலை 24ல் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்.
இவர் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி 28 வயது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற யாஷிகா மது குடித்து இருந்தாரா?, விபத்திற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை யாஷிகா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி யாஷிகா ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது சுயநினைவு பெற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actress Yashika Aannand injured and her friend dies in car accident