லூசு பு… நீ மூடூ.; ரசிகரை இப்படி அசிங்கமாக பேசலாமா சுஜா வருணி.?

லூசு பு… நீ மூடூ.; ரசிகரை இப்படி அசிங்கமாக பேசலாமா சுஜா வருணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Suja Varunees bad words to scold fan in twitterமாயாவி, தெனாவட்டு, குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் சுஜா வருணி.

இவர் அண்மையில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் பற்றிய தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதற்கு ஒரு ரசிகர் இவரை அசிங்கமாக பேசியிருக்கிறார்.

அந்த படத்தை பகிர்ந்து இவரும் அவரை படு கேவலமாக கெட்ட வார்த்தை சொல்லி பேசியிருக்கிறார்.

பொதுவெளியில் பேசும் நட்சத்திரங்கள் இப்படி பேசலாமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Actress Suja Varunees bad words to scold fan in twitter

Suja Varunee‏Verified account @sujavarunee
Ungaluku mariyadhaiyana thamizh theriyadhunu nenaikuren!! Ungaluku puriyum padi solluren Loosu punda nee mudu…ennoda tweeter la naa enna venulum poduven…vandhutan goiyala @arul2594

அவர்கள் பேசிக் கொண்டதன் ஸ்கீரின் ஷாட் இதோ….

sujavarunee tweet screen shot

 

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் நயன்தாராவின் படம்.?

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் நயன்தாராவின் படம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayantharas Kolamaavu Kokila movie in Oscar award Nomination listஇந்திய தேசிய விருதுகளை பல சினிமா கலைஞர்கள் வென்றாலும் ஆஸ்கார் விருதை வெல்வதே அவர்களின் கனவாக இருக்கிறது.

அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

இந்த ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்’ என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரீமா தாஸ் இயக்கிய இந்த திரைப்படம் ஏற்கெனவே இந்த ஆண்டுக்கான இந்திய தேசிய விருதினை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய குழு தேர்வு செய்யும் பட்டியலில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் தேசிய விருதை வென்ற டூலெட் படங்களும் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Nayantharas Kolamaavu Kokila movie in Oscar award Nomination list

2.0 படத்தை ரிலீஸ் செய்ய டென்ஷனில் ஷங்கர்-ஏஆர். ரஹ்மான்

2.0 படத்தை ரிலீஸ் செய்ய டென்ஷனில் ஷங்கர்-ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar and AR Rahman in tension to release 2point0 in fixed release dateலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரூ. 545 கோடியில் உருவாகியுள்ள படம் 2.0.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங்கை பல மாதங்களுக்கு முன்பே ஷங்கர் முடித்து விட்டாலும் கிராபிக்ஸ் பணிகளால் ரிலீஸ் தாமதம் ஆகி கொண்டே போகிறது.

இதனிடையில் வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என ஷங்கர் அறிவித்திருந்தார்.

இந்த முறை எப்படியும் படத்தை தள்ளிப்போடாமல் வெளியிட்டுவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம்.

எனவே அடுத்த அக்டோபர் மாதம் 14-ம் தேதிக்குள் அனைத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்துத் தர வேண்டும் என கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளாராம்.

அதன்பின்னர் தான் பின்னணி இசையமைக்கவிருக்கிறாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.

Shankar and AR Rahman in tension to release 2point0 in fixed release date

விஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்

விஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijays son Sanjay in action in Junction short filmஇயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாரிசாக சினிமாவுலகில் அறிமுகமானார் விஜய்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் வாரிசுகளும் சினிமாவில் தலைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய் மகன் சஞ்சய் நடித்தார். தெறி படத்தில் அவரது மகள் திவ்யா நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜங்ஷன் என்ற ஒரு குறும்படத்தில் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.

இவர் கனடாவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே சில வருடங்களில் விஜய்யின் மகனையும் வெள்ளித்திரையில் நாயகனாக நிச்சயம் பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Actor Vijays son Sanjay in action in Junction short film

Actor Vijays son Sanjay in action in Junction short film

*பரியேறும் பெருமாள்* படத்தில் இடம்பெற்ற *கருப்பி* படைக்கும் சாதனை

*பரியேறும் பெருமாள்* படத்தில் இடம்பெற்ற *கருப்பி* படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuppi En Karuppi song crossed 1 million views in youtubeமாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’.

முக்கிய வேடம் ஒன்றில் கருப்பி என்ற ஒரு நாயும் நடித்துள்ளது.

கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக நடித்துள்ளனர்.

இப்படத்தினை நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் காலா பட இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வரவுள்ளனர்.

மண் மணம் மாறாத வகையிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை வலியுறுத்தி இப்படம் உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள ‘கருப்பி.. என் கருப்பி..’ என்ற பாடலை யூ-டியூப் பக்கத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karuppi En Karuppi song crossed 1 million views in youtube

தாமரையின் ரெக்கார்டு ரெய்டு; சீக்ரெட் சிக்கியதால் அதிர்ச்சியில் நடிகை!

தாமரையின் ரெக்கார்டு ரெய்டு; சீக்ரெட் சிக்கியதால் அதிர்ச்சியில் நடிகை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Phone call voice leaked out news updatesசெய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்திபோல என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்…

அதேநேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்… போட்டுக் கொள்ளுங்கள்…

சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு… அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறிவைத்த ரெய்டு சமீப காலமாக அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான்.

அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் வருமானவரித்துறை இத்தகைய ரெய்டுகளிலேயே பல மாநிலங்களில் ஆட்சிமாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும் அது மிகையில்லை…

விஷயம் ரெய்டு பற்றியும் இல்லை….

தாமரை மலர் பார்த்திருப்பீர்கள்… குளங்களில் மிக அழகாக பூத்திருக்கும்… தாமரையின் அழகில் மயங்கி அதை பறிக்கவேண்டும் என்று யாரும் குளங்களில் இறங்கினால் அவ்வளவுதான்….

மேலே அழகாக கண்ணுக்கு தென்படும் தாமரை மலரை தாங்கிப்பிடித்திருக்கிற அதன் தண்டுகள் கொடிகளாக அந்த தண்ணீருக்கடியில் வலைப்பின்னலாக பரவியிருக்கும்.

மலர் பறிக்கும் ஆசையில் இறங்குகிறவன் கால்களை கொடிகள் பிடித்து இழுத்து சேற்றில் சிக்க வைத்து விடும் வெளியில் வருவது அத்தனை சுலபமில்லை.

அதேபோல, அந்த குளத்து தண்ணீரில்தான் தாமரை மலர்ந்தாலும் அந்த தண்ணீரையோ, மழையாக பொழியும் நல்ல நீரைகூட தன் இலை மீது ஒட்டிக் கொள்ள அனுமதிக்காமல் நாசுக்காக தவிர்த்து விடும் பழக்கம் தாமரைக்கு உண்டு…

சரி தாமரையை பற்றி தெரிந்து கொண்டீர்கள்… அந்த நடிகை தமிழ் சினிமாவில் சமீபத்திய பிரபலம்… தொழிலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் பலரின் அறிமுகம் அவசியம் என்பதால் ஒரு கிரிக்கெட் விழா நிகழ்வில் ஒரு பிரபலத்தை சந்தித்திருக்கிறார்… அதன்பிறகு அவர்களுக்குள் அதிக நெருக்கம்…

சரி அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம்…

படிக்கிற நீங்களும் நானும் அப்படிதான் நினைச்சி அடுத்த செய்திக்கு போயிடுவோம்… ஆனா, தாமரைக்கு அந்த பிரபலம் மேல ஒரு பார்வை… வழக்கமான நாமதான் தாமரை மீது கண் வைப்போம்… இங்கே உல்டாவாக தாமரை கண் வைத்தது.

தங்கள் வழக்கமான ரெய்டு வலை வீசியும் பலன் இருக்காது என்று தெரிந்து கொண்டது… காரணம், அந்த பிரபலம் ஒழுங்கா வரிகட்டி பல காலமாக சமூகத்தில் பல தலைமுறையாக ஒரு அந்தஸ்தில் இருப்பவர்…

இப்படி ஏதாவது இருந்தால் அடுத்து அவர்கள் தனித்தகவல்கள், தகவல் தொடர்புகள் ஆராயப்படும்… செல்போன்… வீட்டுப்போன்… ஆபீஸ் போன் எல்லாம் யாரோ ஒருவரால் பதிவு செய்யப்படும்…

அப்படி செய்யும்போது சில நேரங்களில் பல பிரபலங்களின் அந்தரங்கங்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரித்திருக்கிறது…

முன்பெல்லாம் ஒரு தகவலை சொல்ல வேண்டுமானால் கடுதாசி எழுதி, தந்தி அடித்து, ஆள் அனுப்பி செய்தி சொல்வது வழக்கம்… இப்போது பல சமூக வலைதளங்கள் வந்து விட்டதால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அது அடுத்த மூலையில் இருப்பவரை போய் சேர்ந்து விடுகிறது…

தாமரையின் கண்ணில் சிக்கிய அந்த பிரபலத்தின் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டது… செல்போன் பேச்சுக்களில் நடிகையின் தொடர்புகள் சிக்கியதும்… ஏக குஷியடைந்த தாமரையின் கொடிகள் இப்போது அந்த நடிகையையும், அந்த பிரபலத்தையும் தனித்தனியாக தங்கள் வசப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது…

அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்து விடுமோ என நடிகையை விட அதிக அதிர்ச்சியில் இருப்பவர் அந்த பிரபலம்.

அதே நேரம் நடிகை ஷாக் ஆனதோடு ரொம்ப கவலையாகியிருக்கிறாராம்… காரணம், பதிவு சிக்கியதல்ல… பல ரூட்டில் ஓடும் வண்டி என்பது தெரிந்துவிடக்கூடாதே என்பது அவரின் கவலை…

எதையோ நினைத்து பதிவை தொடங்கிய தாமரைக்கு பலரின் பர்ஸ்னல்கள் சிக்கியதால்… அடுத்தடுத்து அவர்களை வளைக்கும் பணியை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

அதேநேரம், ரெக்கார்டு ரெய்டை சத்தமில்லாமல் ஒரு பக்கம் செய்து வருகிறது தாமரையின் தனிப்படை.

இன்னும் சில மாதங்களில் சத்தமில்லாமல் தொடங்கிய ரெக்கார்டு ரெய்டு… பல அதிர்ச்சிகளை நடிகர், நடிகைகளுக்கு தெரியாமலேயே தாமரைக்கு வாரி வழங்கியிருக்கிறது… இதை வைத்து எப்படியும் தாமரையை மலர வைத்து விடலாம் என கணக்கு போடுகிறார்கள்…

ஐய்யோ பாவம்… சேற்றில் முளைத்தாலும்… பூஜைக்கு கோயிலுக்கு போனாலும்… ஓட்டு போடும் மக்கள் மனசில் வைத்துக் கொள்ளவோ, தலையில் சூடிக்கொள்ளவோ தாமரை லாயக்குபடாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை…!

Actress Phone call voice leaked out news updates

More Articles
Follows