தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனையடுத்து படங்களில் முழு கவனத்தை செலுத்தி நடித்தி வருகிறார் சமந்தா.
கடந்த வருடம் வெளியான ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆட்டம் போட்ட *ஊ…. சொல்றியா மாமா….* என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது
தற்போது சமந்தா கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பட வாய்ப்புகள் உள்ளன.
இதில் யசோதா படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் சமந்தா. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அதில் எந்த பதிவும் பதிவிடாமல் இருந்து வந்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் சமந்தாவுக்கு ஒரு புதிய வகையான நோய் இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார்.
அதன்படி தான் Myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.
விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் சதந்தா நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.