தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்.எம். சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்துள்ள படம் ‛100% காதல்’.
இப்படம் அக்டோபர் 4ஆம் தேதி அசுரன் படத்துடன் வெளியாகவுள்ளது.
இதில் ஜிவி. பிரகாஷின் அம்மாவாக நடிகை ரேகா நடித்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை ரேகா பேசியதாவது…
‛உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனு, கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனு இருந்தால் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என நடிகர் விஜய் சொன்னார்.
அதுபோல் தான் என் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கிறது.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு யூ-டியூப் தளத்தில் நான் இறந்து போய் விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
என்னை புதைத்து அருகில் ரஜினி, கமல் எட்டி பார்ப்பது போன்றும் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள். நான் உயிரோடு இருக்கும் போதே எனக்கு பாடை கட்டி, கற்பூரம் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.
கலைஞர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே பல முறை அவர் மரணமடைந்துவிட்டதாக செய்திகளை சிலர் வெளியிட்டனர்.
சினிமா பிரபலங்களான கே.ஆர்.விஜயா, மோகன் போன்றவர்களை இப்படி சாகடித்து, அதை யு-டியூப் மூலம் பரபரப்பை உண்டு பண்ணி பணம் சம்பாதிக்கிறார்கள்.
இது நன்றாகவா இருக்கிறது. இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற யு-டியூப் தளங்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். என வேதனையுடன் பேசினார் ரேகா.
இறுதியில் நான் ஜம்முன்னு இருக்கேனா.. சொல்லுங்க.. நான் ஜம்முன்னு தானே இருக்கேன் என பேசி விடைபெற்றார்.
Actress Rekha emotional speech on 100 percent Kaadhal press meet