கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா.; வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு திரு இயக்கும் படம் மிஸ்டர்.சந்திரமவுலி.

இதில் நவரச நாயகன் கார்த்திக் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுடன் ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், விஜி சந்திரசேகர், மைம்கோபி, அகத்தியன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்க, போப்டா மீடியா ஒர்க் சார்பில் தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

அண்மையில் இதன் சூட்டிங்கை தாய்லாந்தில் முடித்துவிட்டு படக்குழு சென்னை திருமபியது.

தற்போது இப்படத்தில் இடம் பெற்ற ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து இளைஞர்களை சூடேற்றும் வகையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறார்.

இப்போ சொல்லுங்க.. நாங்க வைச்ச டைட்டில் சரிதானே… கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா

Actress Regina Cassandras hot stills goes viral

ஸ்டெர்லைட் போராட்ட முறையே தப்பு; நடிகர் பீச்சாங்கை கார்த்திக் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்குள்ள மக்கள் கடந்த 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்களும் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பீச்சாங்கை என்ற படத்தில் நடித்த கார்த்திக் என்பவர் இந்த போராட்டமே தேவையில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

மேலும் தமிழக மக்களிடம் ஒற்றுமையில்லை என்பதாலேயே இந்த போராட்டங்களில் தீர்வு இல்லை எனவும், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

Ban Sterlite protest is wrong says Peechaankai fame Actor Karthik

அவரின் பேட்டி இதோ….

மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா; விக்னேஷ்சிவன் கோவிச்சிக்கமாட்டரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லு படத்தில் பணி புரிந்த போது டைரக்டர் பிரபுதேவாவுக்கும் நாயகி நயன்தாராவுக்கும் லவ் ஆனது.

அதன்பின்னர் நயன்தாராவை திருமணம் செய்ய தன் காதல் மனைவியை விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா.

அதன்பின்னர் என்ன ஆனதோ? இவர்களின் காதல் பிரேக் அப் ஆனது.

தற்போது விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் காட்டி வருகிறார் நயன்தாரா.

அவரை தன் வருங்கால கணவர் என்ற முறையிலேயே ஒரு பொது மேடையில் பேசினார்.

இந்நிலையில் விசுவாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள ஒரு படத்தை பிரபுதேவா இயக்கவிருக்கிறாராம்.

இது தொடர்பாக அஜித்தை அடிக்கடி பிரபுதேவா சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

ஒருவேளை இது உறுதியானால் இப்பட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

சிம்பு உடன் காதல் முறிவுக்கு பின்னர் அவருடன் இணைந்து நடித்தார் நயன்தாரா.

எனவே பிரபுதேவா உடன் அவர் நிச்சயம் இணைந்து பணி புரிவார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதெல்லாம் சரிதான். விக்னேஷ் சிவன் ஒத்துக் கொள்வாரா பாஸ்..?

Will Vignesh Shivan accept Prabudeva Nayanthara new project

ஒளிப்பதிவாளரை மணக்கிறார் ஜோக்கர் நாயகி காயத்ரி கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜீமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் அனைத்து தரப்பினைரையும் கவர்ந்த படங்களில் ஒன்று.

இப்படத்தில் ரம்யா பாண்டியன் மற்றும் காயத்ரி கிருஷ்ணன் நாயகிகளாக நடித்திருந்தனர்.

தற்போது ஆண் தேவதை என்ற படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

மற்றொரு நாயகியான காயத்ரி கிருஷ்ணன் நிறைய மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கும் ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அடுத்தஆண்டு இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கவுள்ளதாம்.

Joker fame Gayathri Krishnan marriage news updates

2.0 டீசர் லீக்காச்சு; இப்போ டீ சர்ட்டும் வந்தாச்சு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி, எந்திரன் படங்களுக்கு பிறகு ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 2.0.

ரூ. 400 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் கடந்த 2017ஆம் ஆண்டே துபாய் நாட்டில் வெளியானது.

இது முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளதால், இதன் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இப்படத்தின் டீசர் அண்மையில் லீக்காகியது.

தற்போது இப்படம் தொடர்பான டீ சர்ட்டுகளை விற்பனையில் இறக்கியுள்ளது லைகா.

அதில் ரஜினிகாந்த் மற்றும் அக்சய்குமார் ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளது.

Lyca has started selling Rajini and Akshaykumars 2Point0 Official Merchandise

சல்மான்கான் ஜெயிலுக்கு சென்றதால் ரூ. 1000 கோடி பிஸினஸ் பாதிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் ஜாமீன் கேட்டுள்ளநிலையில் இந்த விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 1000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் ரேஸ்-3 திரைப் படத்தில் நடித்து வருகிறார் சல்மான்கான்.
இதனையடுத்து தொடர்ந்து தபாங்-3, பாரத் மற்றும் கிக் – 2 ஆகிய படங்களிலும் அவர் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் சோனி டிவியில் சல்மான்கான் நடத்தும் Dus Ka Dum எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில விளம்பர ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு இருக்கிறாராம் சல்மான்கான்.

Due to Salman khan arrest nearly Rs 1000 crores business affected

More Articles
Follows