தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று நவம்பர் 18 கடலூர் அருகே பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக குஷ்பு காரில் பயணித்தார்.
அப்போது மேல்மருவத்தூர் அருகே அவருடைய கார் மீது லாரி மோதி கார் விபத்தில் சிக்கியது.
குஷ்பு கார் விபத்து என்ற தகவல் பரவியதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
கார் விபத்து தொடர்பாக குஷ்பு கூறியதாவது…
“மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன்.
கடலூர் வேல் யாத்திரைக்காக செல்கிறேன்.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்.
என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்.
எங்கள் யாருக்கும் காயம் இல்லை. டிரைவரின் புத்திசாலிதனத்தால் அனைவரும் பிழைத்தோம்.
இந்த விபத்தில் ஏதேனும் சதி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர் கூறியதாவது… இடது கை தோள்பட்டை பகுதியில் வலி உள்ளது. நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன்.
உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இன்னும் வலிமையடைய செய்கிறது”.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்புவை பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.
Actress / Politician Khushboo meets with the accident