தனுசுடன் நடிக்க ஆசைப்படும் ‘செம போத ஆகாத’ மிஷ்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வாவின் செம போத ஆகாத படத்தில் நாயகியாக நடிப்பவர் பெங்காலி நடிகை மிஷ்டி.

இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் தனுசுடன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்.

இதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறாராம் இந்த மிஷ்டி.

வாழ்த்துக்கள் அம்மணி.

‘இந்த விஜய்க்கு பதிலாக அந்த விஜய் நடிக்கிறார்’… விஜய்சேதுபதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா சங்கர் எழுதி இயக்கியுள்ள எமன் படத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் படக்ழுகுழுவினருடன் இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி கலந்துக் கொண்டு பேசும்போது எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் இவரிடம்தான் தெரிவித்தாராம்.

ஆனால் இவரிடம் கால்ஷீட் இல்லாததால், அதன்பின்னர்தான் அந்த வாய்ப்பு விஜய் ஆண்டனிக்கு சென்றதாம்.

விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள் என்றும் வித்தியாசமான கதைகளை எப்போதும் தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் விஜய்சேதுபதி.

‘கனவிலும் நினைத்திடாத வாழ்க்கை இது…’ – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் தொடங்கிய தனது கலைப்பயணத்தை இன்று சினிமாவில் தொடர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

வெள்ளித்திரைக்கு இவர் நடிக்க வந்து 5 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன.

ஆனால் தன்னுடைய கடின உழைப்பாலும் தொடர் வெற்றியாலும் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் சிவா.

இவர் நடித்த முதல்படமான மெரினா பிப்ரவரி 3ஆம் தேதி, 2012ஆம் ஆண்டில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தன்னால் மறக்க முடியாத அந்நாளை தனக்கு தந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan thanks to all on his 5th year in Cinema

அந்த அறிக்கை இதோ….

விஷால் அணியினர் தேர்தலில் போட்டியிட இத்தனை காரணங்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகின்றனர்.

சற்றுமுன் இந்த அணியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர் என்பதை பார்த்தோம்.

இதுகுறித்து விஷால் அணியினர் சற்றுமுன் கூறியதாவது…

இந்த சங்கத்தில் பதவியில் இல்லாமல் வெளியில் இருந்து குரல் கொடுத்ததால் எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் இப்போது போட்டியிடுகிறேன்.

என் வேட்புமனு மீது சர்ச்சை எழுப்பினாலும் தடைகளை தகர்ப்போம்.” என்றார். விஷால்

“நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைய குறைகள் உள்ளது.

சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவேதான் போட்டியிடுகிறோம்” என்றார் பிரகாஷ்ராஜ்.

சினிமாவினால் நல்லது செய்யமுடியும். எனக்கு பதவி ஆசையில்லை. இதில் ஆதிக்கம் செலுத்த வரவில்லை என்றார் மிஷ்கின்.

நல்ல ஒரு சினிமாவை உருவாக்க பாடுபடுவோம். அதுபோல் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்வோம்.” என்றார் ஞானவேல் ராஜா.

Reasons behind Vishal team in Producer Council Election

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வேட்புமனுதாக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற மார்ச் 5ஆம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் விஷால் தலையிலான அணியினர் சற்றுமுன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இதே அணியைச் சேர்ந்த மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

செயலாளர் பதவிக்கு ஞானவேல் ராஜா, பிரகாஷ்ராஜ், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர். பிரபு போட்டியிட உள்ளனர்.

பாண்டிராஜ், ஆர்யா, மிஷ்கின், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

Vishal team nominations in Producer Council Election

நீர்மூழ்கி கப்பல் ‘காஸி’ பற்றிய படத்தில் ராணா-டாப்ஸி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிவிபி சினிமா , மேட்ணீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனைந்து வழங்கும் மும்மொழி படைப்பு “ காஸி“

இது ஒரு போர்கள திரைப்படமாக உருவாகிவுள்ளது.

பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன், அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்கூரிய ஒன்றாகும்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார். இப்படம் யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கி கப்பலான PNS காஸியை பற்றி மிக ஆழமாக பேசும் ஒரு படைப்பாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை தேசிய விருது வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார்.

எந்தவித சமரசமுமின்றி பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று சமூக வலைதளங்களில் அதிக அளவில் விரும்பி பார்க்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் பொன் விழாவான இவ்வருடத்தில் இப்படம் வெளிவருவது பெருமைக்கூரிய ஒன்றாகும் என்கின்றனர் படக்குழுவினர்.

Rana Dagubaati, Tapsee Pannu starring in Ghazi The trilingual naval warfare film

More Articles
Follows