தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெமினி’ படத்தில் விக்ரம் உடன் ‘ஓ போடு…’ என ஆட்டம் போட்டு தமிழில் அறிமுகமானவர் கிரண்.
அதன்பின்னர் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
கமல்ஹாசன் உடன் ‘அன்பே சிவம்’, பிரசாந்த் உடன் ‘வின்னர்’, அஜித் உடன் ‘வில்லன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியுடன் ‘சகுனி’, விஷாலுடன் ‘ஆம்பள’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் கிரண்.
ஆனால் ரஜினி படத்தில் நடிக்கவில்லை. நடிக்க சான்ஸ் வந்தும் அதை மிஸ் செய்து விட்டாராம்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
அதில் கிரண் கூறியிருப்பதாவது:
”கடந்த ஆறு மணி நேரமாக ‘பாபா’ பட பாடல்களைக் கேட்கிறேன்.
இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்ட காரணமாகக் கூட அது இருக்கலாம்.
அப்போது நான் ‘ஜெமினி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை.
நடிப்பிலும் நடனத்திலும் ரஜினியை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்”.
என கிரண் பதிவிட்டுள்ளார்.
Actress Kiran talks about her missed chance to work with super star