“கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்திற்காக வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்!

“கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்திற்காக வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jhanvi kapoorநட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது அதற்கான பொறுப்பு என்பது மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அதே நேரம் விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது கறாராக இருக்கும். இது போனிகபூர், ஶ்ரீதேவி தம்பதியின் செல்ல மகள் ஜான்வி கபூருக்கும் பொருந்தும். ஆனால் சினிமாவே தனது வாழ்க்கை எனும் முடிவில் நுழைந்திருக்கும் அவர், முதல் படம் முதலாகவே தொடர்ந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என, அனைவரும் பாராட்டும் நடிப்பை வழங்கி வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் கதாப்பாத்திரங்களில் அதீத கவனம் கொண்டிருக்கிறார். தனது கதாப்பாத்திரங்களுக்கு அவர் மிகுந்த பிரயத்தனத்துடன் திரையில் உயிர் தருவதில் வல்லவராக இருக்கிறார். தனது சிறப்பிலும் சிறப்பான நடிப்பை அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து தந்து வருகிறார்.

இந்த 2020 புதிய வருட தொடக்கத்தின் ஆரம்பத்திலேயே, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் தயாரிப்பான ஆந்தாலஜி படம் “கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்தில் ஒரு பகுதியில் நடித்துள்ளார். அவரது பிரமிப்பு தரும் நடிப்பு ரசிகர்கள் விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கும் அதே நேரம் மற்ற நடிகர்களிடமும் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கியுள்ள பகுதியில் இளம் செவிலியராக நடித்திருக்கிறார் ஜான்வி கபூர். தனது காதலன் மீது அதிக அன்பு கொண்டவராகவும் ஒரு அபார்ட்மெண்டில் மாட்டிக்கொண்ட பெண்ணின் தவிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஹாரர் படத்தின் மையமே பயமும் திகிலும் தான். ஜான்வி கபூர் அந்த கதாப்பாத்திரத்தில் ஒன்றி பயத்தையும், திரில் உணர்வையும் நமக்குள் அட்டகாசமாக கடத்தியிருக்கிறார். நடிக்க ஆரம்பித்திருக்கும் இந்த இளம் வயதில், வெகு சில படத்திலேயே ஒரு நல்ல நடிகை எனும் பெயரை பெற்றிருக்கிறார் ஜான்வி கபூர்.

இணையவாசிகள் தொடங்கி டிவிட்டர் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் இருந்து ஜான்வி கபூருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த வருடத்தின் ஆரம்பமே அவருக்கு அருமையான ஒன்றாக அமைந்திருக்கிறது.

தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது.

ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.

இப்படத்தில்தான் அவதார் படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களையும் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்தை பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத்தை தரும்வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது.

இந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கிராமத்து கதையை கையில் எடுக்கும் தர்பார் டைரக்டர்

கிராமத்து கதையை கையில் எடுக்கும் தர்பார் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini AR Murugadossரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையாக உருவாகியுள்ளது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் பின்னர் யாரை இயக்குவார் முருகதாஸ்? என கேள்வி தற்போதை கோலிவுட்டில் எழுந்துள்ளது.

நாயகன் யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் அவர் அடுத்து இயக்கவுள்ள கதை கிராமத்து கதையாம்.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்பலாம்.

சிம்புவின் மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி முக்கிய அறிவிப்பு

சிம்புவின் மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu in maanaduதயாரிப்பாளராக இருந்த சுரேஷ் காமாட்சி அண்மையில் வெளியான மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குனராக மாறினார்.

தற்போது பாரதிராஜாவின் குற்றப் பரம்பரை படத்தை வெப் சீரிஸாக தயாரிக்கவுள்ளார்.

இதே சமயத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த நிலையில், மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

கேரள கரையோரத்தில் தனுஷ்; மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி

கேரள கரையோரத்தில் தனுஷ்; மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajisha Vijayanஎப்போதும் தமிழ் சினிமாவுக்கும் மலையாள நடிகைக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு.

அண்மைக்காலமாக இது அதிகரித்து வருகிறது.

அதிலும் தனுஷ் படங்களில் மலையாள நடிகைகளே நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

நயன்தாரா, அமலாபால், மஞ்சு வாரியர், மடோனா செபஸ்டியன், அனுபமா, ஐஸ்வர்யா லட்சுமி (டி40 படம்) உள்ளிட்ட பல மலையாள நடிகைகள் தனுஷ் உடன் நடித்துள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் புதிய வரவாக ரெஜிஷா விஜயன் இணைந்துள்ளர்.

இவர் தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

இவர்களுடன் நட்டி, லால் நடிக்க வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூர்யா வீட்டு விருந்தில் அஜித்திடம் பாடம் கற்ற பிருத்விராஜ்

சூர்யா வீட்டு விருந்தில் அஜித்திடம் பாடம் கற்ற பிருத்விராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and prithvirajநடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

அண்மையில் ரஜினி பட இயக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியிந்தார்.

இந்த நிலையில் மற்றொரு பேட்டியில் நடிகர் அஜித் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்…

சில வருடங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரவேசத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரோடு பேசிக் கொண்டிருந்த வெற்றியிலிருந்தும்; தோல்வியிருந்தும் விலகியே இருப்பவர் அஜித் என்பதை புரிந்துக் கொண்டேன்.

வெற்றியால் சந்தோஷம் அடைவதும், தோல்வியால் துவண்டு விடுவதும் இல்லை என அஜித் என்னிடம் தெரிவித்தார். அதை நான் பாடமாக எடுத்துக் கொண்டேன்.” என தெரிவித்துள்ளார் பிருத்விராஜ்.

More Articles
Follows