தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடவுளின் சொந்த தேசம் எனப்படும் கேரளாவில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் கேரளாவே வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது.
இதுவரை வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது.
கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது.
இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.
எப்பொழுதும் சூர்யா கார்த்தி -க்கு கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்.” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Actors Suriya and Karthi donate 25Lacs to Kerala CM Relief Fund