தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்த நிலையில் சிம்பு வந்தவுடன் சூட்டிங்கை தொடங்க காத்திருந்தது படக்குழு.
ஆனால் சிம்பு பிரச்சினை செய்யவே, சுரேஷ் காமாட்சி அவர்கள் படத்திலிருந்து சிம்புவை நிறுத்தினார். அவருக்கு பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது.
பின்பு இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெறவே அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டது.
இதனையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சிம்பு.
இப்பணி சுமூகமாக முடிந்தால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக சிம்பு வேண்டியிருந்தாராம்.
அதன்படி சிம்பும் அவரின் நண்பர் நடிகர் மகத்தும் மாலை அணிந்துக்கொண்டு சபரிமலை சென்றனர். அந்த படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த 1992ம் ஆண்டு எங்க வீட்டு வேலன் என்கிற படம் சிறப்பாக வந்த சமயத்தில், சபரிமலைக்கு சென்றிருந்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
திரும்பி வந்தவுடன் விரைவில் மாநாடு சூட்டிங்கில் கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது.
Actors Simbu and Mahath at Sabarimala Maanadu shoot soon