தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 20 வருடங்களாக நான் எப்போ வருவேன்? எப்படி வருவேன்? என தன் அரசியல் பற்றிய கருத்துக்களை கூறிவந்தார் ரஜினிகாந்த்.
அடுத்த வருடம் 2018ல் இவர் கட்சி ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.
கமல் தன் அரசியல் களத்தை உறுதிசெய்து விட்டு, தன் அரசியல் பணிகளை கவனித்து வருகிறார். ஜனவரியில் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் விஷால் திடீரென் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் விஷால்.
வருகிற டிசம்பர் 4ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யவிருக்கிறாராம்.
இவருடன் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?
நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
Actor Vishal to contest RK Nagar bypoll