கமல்-ரஜினிக்கு முன்பே அரசியலில் விஷால்; அதிமுக-திமுகவுக்கு போட்டி!

கமல்-ரஜினிக்கு முன்பே அரசியலில் விஷால்; அதிமுக-திமுகவுக்கு போட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal to contest RK Nagar bypollகடந்த 20 வருடங்களாக நான் எப்போ வருவேன்? எப்படி வருவேன்? என தன் அரசியல் பற்றிய கருத்துக்களை கூறிவந்தார் ரஜினிகாந்த்.

அடுத்த வருடம் 2018ல் இவர் கட்சி ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.

கமல் தன் அரசியல் களத்தை உறுதிசெய்து விட்டு, தன் அரசியல் பணிகளை கவனித்து வருகிறார். ஜனவரியில் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் விஷால் திடீரென் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் விஷால்.

வருகிற டிசம்பர் 4ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யவிருக்கிறாராம்.

இவருடன் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Actor Vishal to contest RK Nagar bypoll

கலைப்புலி தாணுக்கு விஜய்யுடன் துப்பாக்கி; விக்ரம்பிரபு உடன் துப்பாக்கி முனை

கலைப்புலி தாணுக்கு விஜய்யுடன் துப்பாக்கி; விக்ரம்பிரபு உடன் துப்பாக்கி முனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabu teams up with Kalaipuli Thanu for Thuppaki munaiகபாலி, தெறி படங்களை தன் மகன் இயக்கத்தில் இந்திரஜித் படத்தை தயாரித்தார் கலைப்புலி தாணு.

இப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தையும் ஆரம்பித்துவிட்டார் தாணு.

இப்படத்திற்கு துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் ‘துப்பாக்கி’ படத்தை தயாரித்திருந்தார். தற்போது துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார்.

இந்திரஜித் புகழ் ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன்
எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அன்பறிவ் சண்டைப் பயிற்சிகளை கவனித்துக் கொள்கின்றனர்.

இன்று ‘துப்பாக்கி முனை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் படத்தின் நாயகி யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

2014 வெளியான விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தையும் தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabu teams up with Kalaipuli Thanu for Thuppaki munai

2.0 வரிசையில் வெளிநாட்டில் நேத்ரா இசையை வெளியிடும் வெங்கடேஷ்

2.0 வரிசையில் வெளிநாட்டில் நேத்ரா இசையை வெளியிடும் வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nethra audio launch happening today in Canadaதமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ. வெங்கடேஷ்.

இதுவரை 22 படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார்.

மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.
லைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன்.

ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே அது கமர்ஷியல் ஹிட்டுதான். தயாரிப்பாளர்களை மகிழ்வித்து மகிழும் இயக்குநர்களை கோடம்பாக்கத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வரிசையில் A.வெங்கடேஷ்க்கு நிரந்தரமாக ஒரு இடம் உண்டு.

இந்தப் படமும் ஆக்சன், திரில்லர் கலந்த கதைதான். கூடுதலாக காதலும் சேர்ந்து கொள்ள.

இந்தக் காலத்திய இளைஞர்களுக்கு பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இசை வெளியீட்டு விழா வெளிநாடுகளில் நடந்திருக்கிறது. முதன் முறையாக “நேத்ரா” இசை வெளியீட்டு விழா வரும் இன்று டிசம்பர் 2ஆம் தேதி கனடாவில் நடைபெறுகிறது.

அண்மையில் ரஜினியின் 2.0 இசை வெளியீடு துபாய் நாட்டில் நடைபெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nethra audio launch happening today in Canada

nethra venkatesh

விவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் எழுமின்

விவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் எழுமின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ehumin Movie Shoot Starts with Poojaவையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகின்ற படம் ‘எழுமின்’.

‘சின்ன கலைவாணர்’ விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே ஆரம்பமானது.

இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியான ‘உரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek and Devayani teams up for Ehumin movie

 

 

 

 

தயாரிப்பாளர் அன்புசெழியனை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

தயாரிப்பாளர் அன்புசெழியனை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anbu chezhiyan and H Rajaசசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு காரணம் தயாரிப்பாளர் அன்புசெழியன்தான் என கடிதம் எழுதிவிட்டு இறந்துவிட்டார்.

இதனால் ஒரு சிலர் அசோக்குமாருக்கு ஆதரவாகவும் மற்ற சிலர் அன்பு செழியன் நல்லவர் எனவும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக.வை சேர்ந்த எச். ராஜா தன் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

H Raja‏Verified account @HRajaBJP 4m4 minutes ago
பொதுவாக கொலை மற்றும் தற்கொலை வழக்கில் இறந்தவரின் கடிதம் மற்றும் மரண வாக்குமூலம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும். எனவே கடலூர் ஆனந்தின் மரண வாக்குமூலம் மற்றும் அசோக்குமார் கடிதம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும்.நிழல் உலக தாதா அன்புச் செழியனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விஷால்..?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விஷால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalஇந்த டிசம்பர் மாதம் ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சுயேட்சை வேட்பாளராக தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் விஷால் தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளது.

அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே இதுபோன்ற செய்திகள் வருகின்றன.

More Articles
Follows