தளபதியின் ‘மாஸ்டர்’ டீசர் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள படம் ‘மாஸ்டர்’.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் மாளவிகா, சாந்தனு, ரம்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor Vijays Master teaser to be out soon

கமல் வழங்கும் ‘பிக்பாஸ் சீசன் 4’ தொடங்கியது.; போட்டியாளர்கள் விவரங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும்
பிக்பாஸ் சீசன் 4 ஒளிப்பரப்பு தொடங்கியது.

அதன் போட்டியாளர்கள் விவரம் இதோ…

1. முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் ரியோ ராஜ். டிவி தொகுப்பாளராக இருந்து அதன்பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்தவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

2. மாடல் சனம் ஷெட்டி 2016-ம் ஆண்டில் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர்.

‘அம்புலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார்

3. கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானப்படங்களில் நடித்த நடிகை ரேகா.

4. மாடலிங் துறையைச் சேர்ந்தவர் பாலா என்ற பாலாஜி முருகதாஸ். 2017-ம் ஆண்டு மிஸ்டர் பெர்ஃபெக்ட் பட்டம் பெற்றுள்ளார். இவர் ‘டைசன்’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார்.

5. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இவரின் அழகிய தமிழுக்கி ரசிகர்கள் ஏராளம். பிக்பாஸ் 3ல் லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக உள்ளே சென்றார்.

6. கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

7. நடிகர் ஜித்தன் ரமேஷ். திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமாவார் இவர்.

8. பின்னணி பாடகர் வேல்முருகன். சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

9. நடிகர் ஆரி அர்ஜுனா. ஜல்லிக்கட்டு போராளி.. சமூக ஆர்வலர். என பன்முகம் கொண்டவர்.

10. குத்துச்சண்டை வீரர் சோம் சேகர். மாடலிங். ஆல்பம் சாங்ஸ் நடிகர்.. நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

11. நடிகை கேப்ரில்லா.. ‘3’ படத்தில் ஸ்ருதிக்கு தங்கையாக நடித்தவர். ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

12. நடிகை அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கியவர்.

13. நடிகை ரம்யா பாண்டியன்.. ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மொட்டை மாடியில் போட்டோ ஷூட் எடுத்து இடுப்பழகி என பெயரெடுத்தவர். கலக்கப்போவது யாரு சீசன் 9, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

14. டிவி நடிகை சம்யுக்தா. மாடல், சிவில் என்ஜினியர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முகம் கொணரடவர் சம்யுக்தா கார்த்திக்.

15. நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. அழகன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். பாட்டிகள் ஜாக்கிரதை என்ற தொடரில் பாட்டியாக நடித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார்.

16. பாடகர் ஆஜித்… 2012ல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தை வென்றவர் ஆஜித்.

Bigg Boss 4 Tamil full contestants list here

தருண்கோபி இயக்கத்தில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகன் நடிக்கும் ‘யானை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , ” மாயாண்டி குடும்பத்தார் ” படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து விரைவில் வெளிவரவிருக்கும் ” வெறி ( திமிரு – 2 ) ” அருவா இயக்கி முடித்த கையோடு சூட்டோடு சூடாக தற்போது ஒரு ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த ” யானை ” என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

நடிப்பில் யானை பலம் பொருந்திய முன்னனி நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் முன்னணி நடிகை, நடிகர்கள், நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன்

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கவுளார்.

எடிட்டிங் – வி.டி.விஜயன்

கலை – மணி கார்த்திக்

ஸ்டண்ட் – கனல்கண்ணன்

நடனம் – தினேஷ், பிருந்தா

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – மன்னன்காடு M.குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா

படம் பற்றி இயக்குனர் தருண்கோபி கூறியதாவது..

ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாக போக வேண்டும், அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும். என்ற மையக்கருத்தை வைத்து உணர்வுப்பூர்வமாக, ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதை, மக்கள் அன்றாட சந்திக்கும் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படத்தை இயக்கவுள்ளேன்.

படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது என்கிறார் இயக்குனர் தருண்கோபி.

Director Tarun Gopi’s next film is titled Yaanai

அக்டோபர் 5 முதல் வாரத்தில் 6 நாட்கள்.; அரை நாள் வகுப்புகள்..; புதுச்சேரி & காரைக்காலில் 9-12-ம் வகுப்புகள் அட்டவணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி & காரைக்காலில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக, புதுவை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது…

”புதுச்சேரி, காரைக்காலில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

ஆனால் வகுப்புகள் 8-ம் தேதி தான் தொடங்கப்படுகிறது.

5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பள்ளி, வகுப்பறைகள் மாணவ, மாணவிகள் வருகைக்காக தூய்மைப்படுத்தப்பட்டு தயார்படுத்தப்படும்.

தனிமனித இடைவெளியுடன் இருக்கை அமைத்தல், கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களுக்குக் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

9, 10, 11,12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் பள்ளிக்கு வரலாம்.

மாணவர்கள் கட்டாயம் வகுப்பறைக்கு வரவேண்டும் என அவசியமில்லை. அவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது.

மாணவர் பேருந்துகளை இயக்குவது குறித்து வருவாய்த் துறை முடிவு செய்ய வேண்டும்.

தற்போது 6 நாட்கள் பள்ளிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.

திங்கள், புதன், வெள்ளி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமையில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை அரை நாள் மட்டுமே வகுப்புகள் இருக்கும்.

மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.

இதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் வீட்டிற்கு அருகில் பள்ளிகள் இருக்காது. மாணவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்குச் சென்றுகூட அங்குள்ள ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்கலாம்.

மதிய உணவு வழங்குவது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்.

மாணவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு, அறிகுறி இருந்தால் அவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரக்கூடாது. ஆசிரியர்களும் கரோனா பாதிப்பு, அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வரக்கூடாது.

தனியார் பள்ளிகள் முழுநேரம் பள்ளி நடத்த அனுமதி கிடையாது.

இதுகுறித்துக் கல்வித்துறைக் குழு கண்காணிக்கும். விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்.

மாணவர்களுக்கு முகக் கவசம் வழங்குவது பற்றி அரசிடம் தெரிவித்து உள்ளோம்.

முழுமையாகப் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும். மாஹே, ஏனாமில் அந்தந்த மண்டல நிர்வாகிகள் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வார்கள். தற்போது அங்கு பள்ளி திறப்பு இல்லை”.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.

Schools in Puducherry to reopen from October 5

அரசியலுக்கு வராதீங்க.. தாங்க மாட்டீங்க..; பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்ற பனைத் திருவிழாவின் போது செய்தியாளார்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது ரஜினிகாந்த் பற்றி பேசினார் சீமான்.

“ரஜினி அவருடைய கட்சியில் வேறொரு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என்று சொன்னதும் அவருடன் இருந்த முரண்பாடு நீங்கிவிட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால்… அவர் அரசியலில் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர் அவர்.

நாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை அவரால் தாங்க முடியாது.

இமயமலை செல்லுங்கள், புத்தகம் படியுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்” என தெரிவித்துள்ளார் சீமான்.

NTK leader Seeman advice to Super Star Rajinikanth

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இப்பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிப் போயுள்ளது.

இதனையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் லோகேஷ்.்

தற்போது இப்பட முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இதனையடுத்து கமல் தயாரிப்பில் சிம்புவை லோகேஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

ஆனால் கமல் படத்தை முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

Kamal and Simbu joins for a new film ?

More Articles
Follows