தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபலங்கள் பலருக்கும் அரசியலுக்கு வரும் ஆசை வருவதுண்டு. ஒரு சிலருக்கு அது நிறைவேறாமல் போகலாம்.
இதில் முதலில் சொன்ன வரிகளில் வருபவர் நடிகர் விஜய்.
விஜய்யை அவரது ரசிகர்கள் அடிக்கடி அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள் ஒட்டி வருவதுண்டு. அதை விஜய்யும் கவனித்துதான் வருகிறார்.
இன்றைய கால கட்டத்தில் அரசியலில் நுழைந்தால் அது எந்தளவு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் விஜய் ஆலோசித்துதான் வருகிறார்.
இந்த நிலையில் அவரது எண்ணத்திற்கேற்ப நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் அமைந்துள்ளன எனலாம்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட நிர்வாகிகள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளதால் விஜய் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.
எனவே பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி இருக்கிறார் விஜய்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட விஜய் அதில் எவருமே கண்டுபிடிக்காத படி ஒரு ஓரத்தில் அமர்ந்துள்ளார்.
இந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாக இது போன்ற போட்டோக்களை எடுக்கும்போது ஒரு இயக்கத்தின் தலைவர் எல்லோருக்கும் நடுவில்தான் இருப்பார். ஆனால் விஜய் எங்கே இருக்கிறர்? என தேட வேண்டி உள்ளது. அவர் ஒரு ஓரமாக அமர்ந்து இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் ‘தல கணம் இல்லாத தளபதி’ என புகழ்ந்து வருகின்றனர்.
Actor Vijay took photo with TN Local body election winners