கண்தானம் செய்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை, மாட்டுத்தாவணியில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில்…

‘நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர்.

இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நம் உடலின் முக்கிய அங்கமாகத் திகழும் கண்ணைக் காக்கவும்.

இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்’ என்றார்.

அப்போது தன் கண்களை தானம் செய்வதாக அறிவித்தார்.

Actor Vijay Sethupathi donated his eyes

நிதியமைச்சருக்கு கமல்ஹாசனின் பணிவான கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற 2018 ஜீலை முதல் இந்தியளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

இதனால் எல்லா பொருட்களும் விலையும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சினிமா உள்ளிட்ட ஆடம்பர செலவுகளுக்கு 28% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக கமல் குரல் கொடுத்து வருவதை நாம் பார்த்தோம். இந்நிலையில் மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான ஒரு கோரிக்கையை கமல் பதிவிட்டுள்ளார்.

அதில்… “பிராந்திய மொழிப்படங்களைக் காக்க மத்திய அரசின் ஜிஎஸ்டி குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை, வற்புறுத்தலாக கருதாமல், பணிவான கோரிக்கையாக மத்திய நிதியமைச்சர் கருத வேண்டும் எனவும் அதில் கமல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Not pressurising. It’s a plea & SOS from regional cinema to our FM We fear it will collapse.We request the council to do all to save it.

ஹாலிவுட் பட போஸ்டரை காப்பியடித்த வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் வேலைக்காரன்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியானதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் அதே போன்ற ஒரு டிசைனில் உள்ள மற்றொரு ஹாலிவுட் படத்தின் போஸ்டரும் தற்போது கிடைத்துள்ளது.

ஃபாலிங் டவுன் என்ற பெயரிடப்பட்ட இப்படம் கடந்த 1993ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆகியுள்ளது.

Michael Douglas, Robert Duvall, Barbara Hershey உள்ளிட்டோர் நடித்த இப்டத்தை Joel Schumacher இயக்கியிருந்தார்.

அப்படத்தின் போஸ்டரில் அவர் ஒரு கையில் சூட்கேசும் மறுகையில் துப்பாக்கியும் வைத்துள்ளார்.
வேலைக்காரன் போஸ்டரில் துப்பாக்கி பதிலாக அருவாள் இருக்கிறது.

எனவே இந்த இரு போஸ்டர்களையும் இணைத்து படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Falling Down poster copy cat by Velaikkaran first look poster

சூப்பர்ஸ்டார் படத்திற்கு எதிர்ப்பு; ஆதரவு கரம் நீட்டிய மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சரித்திர கால படத்தை தயாரிக்க பலரும் முன்வந்துள்ளனர்.

இதில் எவருமே எதிர்பாராத வகையில் மகாபாரத கதையை ரூ. 1000 கோடியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பி.ஆர்.ஷெட்டி.

எம்.டி.வாசுதேவனின் விருது பெற்ற பிரபல நாவலான ரண்டாமூழம் என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் பீமன் வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க மற்றொரு கேரக்டரில் நாகார்ஜீனா நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திதை மகாபாரதம் என்ற பெயரில் வெளியிடக்கூடாது என கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே, இப்படத்தை இந்தியாவில் ரண்டாமூழம் என்ற நாவலின் தலைப்பிலும், உலகம் முழுவதும் மகாபாரதம் என்ற பெயரிலும் திரையிடவிருக்கிறார்களாம்.

இதே வேளையில் தயாரிப்பாளர் பி.ஆர். ஷெட்டிக்கு தனது முழு ஆதரவை தருவதாக கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

அதில்.. “நமது தேசத்தின் பெருமையை சொல்லப்போகும் மகாபாரதம் படத்தினை காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு வருகிற ஜூலை 7 ம் தேதி பிரதமரை சந்திக்கவிருக்கிறார்களாம்.

இரண்டு பாகங்களாக தயாராகவுள்ள இப்படத்தின் சூட்டிங் அடுத்த 2018ம் ஆண்டு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Prime Minister Modi supports Rs 1000cr movie Mahabharata and calls it pride of the India

காலா படத்தில் ரஜினியுடன் இணையும் மம்மூட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் ஹீமா குரேஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இதில் கௌரவ தோற்றத்தில் இளவயது ரஜினியாக தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் மிக முக்கிய கேரக்டரில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் படத்தின் நாயகி ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட திரைக்கதை பேப்பரில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கதைப்படி ஒரு சில காட்சிகளில் சட்ட மாமேதை பீம்ஜி என்றழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் தோன்றுவாராம். (பழைய காலத்தில்)

அந்த கேரக்டரில்தான் மம்மூட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். எனவேதான் அவரை தேர்வு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டே தளபதி படத்தில் ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Rajinikanth and Mammootty to come together after 25 years for Kaala movie

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் எப்படி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரெமோ வெற்றியை தக்க வைப்பாரா? என்ற ஒரு காரணமும், இப்படத்தில் நடித்து வரும் நட்சத்திர பட்டாளமும் மற்றொரு காரணம் ஆகும்.

மோகன்ராஜா இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், ரோகினி, சதீஷ், ஆர்ஜே. பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

மற்ற படங்களை போல் இல்லாமல், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும்..? என ரசிகர்களை காத்திருக்க செய்யவில்லை படக்குழு.

காரணம் படத்தின் பூஜை தேதி, பர்ஸ்ட் லுக், வியாபார தேதி முதல் படத்தின் ரிலீஸ் தேதியை வரை அனைத்தையும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று (ஜீன் 5, 2017) மாலை 6 மணிக்கு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்…

வேலைக்காரன் டைட்டிலில் உழைக்கும் வர்க்கத்தின் ஆயுதங்கள் காணப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கையில் அருவாள் வைத்துக் கொண்டு டிசன்டாக பேன்ட் சர்ட் போட்டுக் கொண்டு டை கட்டி இருக்கிறார்.

மேலும் அவரது சட்டையின் மேல் ரத்தகறையும் படிந்துள்ளது.

ஒரு புறம் மிகவும் குப்பைகளாகவும் மறுபுறம் சிட்டி போன்று மிக சுத்தமான காணப்படுகிறது.

குப்பையான புறத்தில் சிவகார்த்திகேயன் கையில், ஒரு பேக் மட்டும் வைத்திருக்கிறார்.

ஆனால் மற்றொரு புறத்தில் சுத்தமாக இருந்தபோதும் அந்தப் பக்கம் அவர் சட்டையில் ரத்தக்கறை இருக்கிறது. மேலும் அந்த பக்க கையில்தான் அருவாள் வைத்திருக்கிறார்.

இது சமூகம் சார்ந்த கதை என இதன் மூலம் தெரிகிறது.  நேர்மையாக நாம் வாழ்கின்ற போதும் நம்மை பாதுகாக்க அருவாள் போன்ற ஆயுதம் இருக்க வேண்டும் என உணர்த்துவதாக தெரிகிறது.

More Articles
Follows