ஜீவி ஒரு பேண்டஸி-த்ரில்லர் – நடிகர் வெற்றி

ஜீவி ஒரு பேண்டஸி-த்ரில்லர் – நடிகர் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (12)ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. “8 தோட்டாக்கள்” படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார்.

அவர் கூறும்போது, “முதல் மற்றும் முக்கியமான விஷயம், இந்த ஸ்கிரிப்ட், நாம் ஒருபோதும் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. என்னை பொருத்தவரை, “ஜீவி” படத்தை நான் ஒரு ‘பேண்டஸி-த்ரில்லர்’ என்று கூறுவேன். ஆனால் சிறப்புத் திரையிடலில் படத்தை பார்த்தவர்களால் அதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் படம் கொண்டிருந்த புதிய மற்றும் தனித்துவமான கூறுகளால் மிகவும் உற்சாகமடைந்தனர். அடுத்து என்னை கவர்ந்த விஷயம் எனது கதாபாத்திரம், இது “8 தோட்டாக்கள்” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உண்மையில், நான் பல்வேறு கதைகளை கேட்டேன், ஆனால் அவை எல்லாமே ஒரே மாதிரியாக, என் அறிமுக படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இது மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது” என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை ஒரு ஆச்சரியமான அவதாரத்தில் அவரது அறிமுகப் படம் 8 தோட்டாக்கள் காட்டியிருந்தது. அந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் ஏதும் ஜீவியில் இருக்குமா? எனக் கேட்டதற்கு, வெற்றி கூறியதாவது, “உண்மையில், அதுபோன்ற ஒப்பீடுகளை என்னால் இங்கு கொண்டு வர முடியவில்லை. உண்மையில், ரோகிணி மேடம் போன்ற மூத்த கலைஞர்களின் மிகச்சிறந்த நடிப்பை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை. ஜீவி படப்பிடிப்பில் இருந்த எல்லோரிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரோகிணி மேடம், கிளிசரின் பயன்படுத்தாமலேயே கண்ணீர் விட்டு நடித்தார். அதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு மயிற்க்கூச்செரியும் தருணமாக அமைந்தது. ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, இயக்குனர் வி.ஜே.கோபிநாத், ஒரு தயாரிப்பாளராக ‘மணி’ கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரத்துக்கும் கலைஞர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம் என வெளிப்படையாக சொன்னார். ஏனெனில் கதாசிரியர் பாபு தமிழ் முன்னரே நடிகர் கருணாகரன் மட்டுமே இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியும் என தீர்மானித்திருந்தார். எனவே, படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவான மற்றும் கணிசமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ளபாண்டியன், சுப்ரமணியம் வெள்ளபாண்டியன் தயாரித்திருக்கும் இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருக்கிறார். பாபு தமிழ் கதை எழுதியிருக்கிறார். வெற்றி, மோனிகா சின்னகோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஐரா புகழ் சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்திருக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ்வாமிநாதன் காலமானார்.!

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ்வாமிநாதன் காலமானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான பிரமிட் சாய்மிரா ஸ்வாமிநாதன் அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிர் நீத்தார். இவரது மனைவி பெயர் உமா ஸ்வாமிநாதன் மற்றும் இவருடைய மகள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.

இவரது நிறுவனம் 2000 களில் தமிழ் சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த ஒன்று.
இவரது நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கண்ணாமூச்சி ஏனடா’ என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார், மற்றும் ‘மொழி’ படத்தை விநியோகம் செய்துள்ளார். பின்னர் ஸ்பை த்ரில்லர் படமான முக்பீர் (2008) ஐ இந்தியில் தயாரித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, தளபதி விஜய்யின் ‘அழகிய தமிழ் மகன்’, அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ போன்ற வெற்றி படங்களை விநியோகம் செய்திருக்கிறார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்து, விநியோகம் செய்துள்ளார்.

சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில், திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார்.

முண்டாசுபட்டி மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை – இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் பி கார்த்திக் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார், அதன் இரண்டாம் பாகத்திற்கு கதை, திரைகதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.

‘சூது கவ்வும், தானா சேர்ந்த கூட்டம், மிஸ்டர். லோக்கல்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் செப்டம்பர் மாதத்தில் துவங்கவிருக்கிறது.

இப்படத்தை எதிர்வரும் 2020 கோடை விடுமுறை காலத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

லயன் கிங் ரிலீஸால் விலகி ஓடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

லயன் கிங் ரிலீஸால் விலகி ஓடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்த படம் 2.0.

லைக்கா நிறுவனம் 500 கோடியில் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் இந்தியாவில் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், எவருக்கும் நஷ்டத்தை தரவில்லை.

இந்த நிலையில் இப்படம் வருகிற ஜூலை 12ல் சீனாவில் வெளியாகவுள்ளது.

இதன் வெளியீட்டு உரிமத்தை ஹெச் ஒய் மீடியா என்ற நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

நாளை ஜூன் 28ம் தேதி சிறப்பு காட்சியும், ஜூலை 12ல் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் ஹாலிவுட் படமான லயன் கிங் வெளிவருவதால் 2.0 புரோமோசன் பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லயன் கிங் கார்டூன் படமாக வந்தபோதே சீனாவில் வசூலை வாரிக்குவித்த படமாம். எனவேதான் ரஜினி படத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹவுஸ் ஓனர் சொல்லியும் கண்டுக் கொள்ளாத சிந்துபாத்

ஹவுஸ் ஓனர் சொல்லியும் கண்டுக் கொள்ளாத சிந்துபாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’.

கடந்த வாரம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பாகுபலி 2 படத்தின் விநியோகம் சம்மந்தமாக 18 கோடி ரூபாயை சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் அப்படம் வெளியாகவில்லை!

தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து ‘சிந்துபாத்’ படம் இன்று ஜீன் 27ஆம் தேதி வெளியாகிறது.

இத்துடன் நாளை ‘யோகி’ பாபுவின் ‘தர்மபிரபு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ மற்றும் ‘நட்சத்திர ஜன்னலில்’, ‘ஜீவி’, ‘காதல் முன்னேற்ற கழகம்’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து விஜய் சேதுபதியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து டுவீட் போட்டார்.

”பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்” என்று பதிவிட்டார்.

ஆனால் அவற்றை எல்லாம் சிந்துபாத் கண்டுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

நேற்று ஜுங்கா & சீதக்காதி..; இன்று சீக்குபாத்.. என்னாச்சு மக்கள் செல்வன்..?

நேற்று ஜுங்கா & சீதக்காதி..; இன்று சீக்குபாத்.. என்னாச்சு மக்கள் செல்வன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Sindhubaadh getting negative reviewsமாதத்திற்கு ஒரு படம் அல்லது 2 மாதத்திற்கு ஒரு படம் என தமிழக ரசிகர்களுக்கு விருந்தளித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இவரது ஓரிரு படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சில படங்கள் கடுமையான விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.

சென்ற வருடம் 96, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் வெற்றியை பெற்றாலும் ஜீங்கா மற்றும் சீதக்காதி படங்கள் மோசமான விமர்சனங்கள் பெற்றது.

அதுபோல் இந்தாண்டில் ரஜினியின் பேட்ட இவருக்கு கைகொடுத்த்து. ஆனால் சூப்பர் டீலக்ஸ் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இந்த நிலையில் இன்று வெளியான சிந்துபாத் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

மக்கள் செல்வன் இனியாவது கதையிலும் திரைக்கதையிலும் கவனம் செலுத்துவாரா? என்பதை பார்ப்போம்.

Vijay Sethupathis Sindhubaadh getting negative reviews

More Articles
Follows