மலையாள நடிகர் சங்கத்திற்கு சூர்யா அளித்த நன்கொடை

மலையாள நடிகர் சங்கத்திற்கு சூர்யா அளித்த நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor surya‘AMMA’ என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் மாபெரும் நட்சத்திர கலை விழா நடைபெற்றது.

‘அம்ம மழவில்’ என்ற பெயரில் நடந்த இந்த விழா மூத்த கலைஞர்களுக்கு பென்ஷன் உட்பட பல நிதி உதவிகளை செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்.

இந்த நட்சத்திர கலை விழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், துல்கர் சல்மான் உட்பட மலையாள திரையுலகினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலின் பிரத்தியேக அழைப்பின் பேரில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்துடன் மலையாள நடிகர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையும் அளித்தார் சூர்யா.

டிஸ்யூ வேண்டாம்; ஒளிஞ்சி பார்க்க வேண்டாம்… அண்டாவ காணோம் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

டிஸ்யூ வேண்டாம்; ஒளிஞ்சி பார்க்க வேண்டாம்… அண்டாவ காணோம் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer JSKஜே.சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள “அண்டாவ காணோம்” படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் முக்கிய கேரக்டரில் ஸ்ரேயா ரெட்டி நடிக்க, அந்த அண்டா பாத்திரத்திற்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் கூறியதாவது…

‘அண்டாவ காணோம், நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம்.

குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை. சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது.

இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன் படியே தான் பணியாற்றி வருகிறேன்.

இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்க படும் படங்கள், “அண்டாவ காணோம்” போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளிவரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும்” என்று தனக்கே உரிய பாணியில் கூறுகிறார் ஜே எஸ் கே.

மேலும் தன் ட்விட்டரில் இப்படத்தை காண டிஸ்யூ பேப்பர் தேவையில்லை. மறைந்து ஒளிந்து பயப்பட்டு பட பார்க்க வேண்டாம். தைரியமாக முகத்தை காட்டிக் கொண்டு படத்தை பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பாமக ராமதாஸ் கண்டனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பாமக ராமதாஸ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PMK ramadossஅண்மையில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாக கருதப்படும் திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவம் ஆகும். அதை சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக்கூடாது.

இதுபோன்ற திரைப்படங்களை திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது? பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன்? ஆகியவை தான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன.

மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்திவிடும்.

இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும்.

கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மலையாளிகளின் பாதம் தொட்டு வணங்குகிறேன்..; சூர்யா பேச்சு

மலையாளிகளின் பாதம் தொட்டு வணங்குகிறேன்..; சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaதமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கடந்த 6-ந்தேதி நீட் தேர்வு எழுதச்சென்றனர்.

மலையாள மொழி புரியாமல் தமிழக மாணவர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக கேரள அரசு நீட் தேர்வு நடைபெறும் ஊர்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

குறிப்பாக எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும், அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல கிருஷ்ணசாமியின் உறவினர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கேரள போலீசாரும், அதிகாரிகளும் செய்து கொடுத்தனர்.

இவை அனைத்தும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின்பேரில் நடைபெற்றது.

பினராயி விஜயனின் நடவடிக்கைக்கு தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தன் பாராட்டுக்களை பதிவு செய்தார்.

ஏற்கெனவே பினராயி விஜயனின் செயல் பாடுகள் பற்றி வெகுவாக பாராட்டி வருபவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகர் சூர்யாவும் பினராயி விஜயனை பாராட்டி பேசினார்.

நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவி செய்தனர்.

இதைக்கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. மாணவர்கள் மன உளைச்சலின்றி தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் பினராயி விஜயன், மற்றும் அதிகாரிகளுக்கும், கேரள மக்களுக்கும் அவர்களின் பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

திட்டுனா கண்டுக்காதீங்க; செயல்ல காட்டுவோம்… ரஜினி கட்டளை

திட்டுனா கண்டுக்காதீங்க; செயல்ல காட்டுவோம்… ரஜினி கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

விரைவில் கட்சி தொடங்கவுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அதன் உறுப்பினர்களை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளார்.

ரஜினியின் அரசியலுக்கு இப்போதே சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “விமர்சனங்களுக்கு ரசிகர்கள் யாரும் பதிலடி கொடுக்க வேண்டாம்.

நம் நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக செயலில் காட்டுவோம்” என ரஜினி தெரிவித்துள்ளார்.

இன்றுமுதல் தன் விஸ்வாசத்தை தொடங்கும் தல அஜித்..!

இன்றுமுதல் தன் விஸ்வாசத்தை தொடங்கும் தல அஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and thamanசத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கியது.

‘விஸ்வாசம்’ படத்திற்காக ராமோஜி ராவ் ஃபிலிம்ஸ் சிட்டியில் வில்லேஜ் செட் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, நேற்று சென்னையிலிருந்து ஹைதராபாத் பயணமானார் அஜித்.

சென்னை விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்த இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், அஜித்துடன் ஒரு செல்ஃபி எடுத்து, அதனை இணையதளங்களில் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

விஸ்வாசம் பாத்தில் அஜித்துடன் நாயகியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

More Articles
Follows