தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘AMMA’ என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் மாபெரும் நட்சத்திர கலை விழா நடைபெற்றது.
‘அம்ம மழவில்’ என்ற பெயரில் நடந்த இந்த விழா மூத்த கலைஞர்களுக்கு பென்ஷன் உட்பட பல நிதி உதவிகளை செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்.
இந்த நட்சத்திர கலை விழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், துல்கர் சல்மான் உட்பட மலையாள திரையுலகினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலின் பிரத்தியேக அழைப்பின் பேரில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் மலையாள நடிகர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையும் அளித்தார் சூர்யா.