நல திட்டங்களுக்காக மோடி-ரஜினி-கமலை சந்திக்க நினைத்தேன்; அவர்கள் விரும்பல.. : சுரேஷ் மேனன்

நல திட்டங்களுக்காக மோடி-ரஜினி-கமலை சந்திக்க நினைத்தேன்; அவர்கள் விரும்பல.. : சுரேஷ் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suresh Menon launched My Karma mobile app You can win Cash prizesபுதிய முகம் திரைப்படம் மூலம் நடிகராக தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுரேஷ் மேனன்.

சினிமாவில் பல துறைகளில் பணியாற்றிய இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் ஆவார்.

இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நம் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினார்.

அவர் பேசியதாவது…

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். சினிமாவில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டேன்.

சினிமா ஒருபக்கம் இருந்தாலும், சமூகம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்ய பல ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அதில் ஒரு சிலவற்றை அரசு செய்துள்ளது.

சென்னை ராஜ்பவன் கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை தந்தேன். தற்போது அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டது.

இதுபோல நிறைய இலவச ஆலோசனைகள் அளித்து வருகிறேன். இதனால் என்னை அவ்வப்போது தலைமை செயலகத்தில் பார்க்கலாம்.

சில நேரங்களில் இது உனக்கு தேவையில்லாத வேலை என்பார்கள். எனக்கு பொருளாதார ரீதியாக எந்த பயனும் இல்லை. ஆனால் ஒரு மன திருப்திக்காக இதனை செய்து வருகிறேன்.

ஒரு முறை டெல்லி சென்றேன். சில நல திட்டங்களுக்கு ஆலோசனை சொல்ல பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.

அதுபோல் ரஜினி, கமலை சந்திக்கவும் நேரம் கேட்டேன். ஆனால் அவர்களுக்கு என்னை சந்திக்க விருப்பமில்லை.
நான் ஒரு மலையாளி என்பதால் தமிழ்நாட்டில் என்னால் அரசியலில் சாதிக்க முடியாது.

அதேபோல் நான் இங்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அங்கும் (கேரளா) என்னால் ஒண்ணும் சாதிக்க முடியாது.

எனவே, தற்போது மை கர்மா (my karma) என்ற மொபைல் ஆப் மூலம் வினாவிடை போட்டி ஒன்றை ஆரம்பித்துள்ளேன். எனது நண்பர்கள் ஆதரவுடன் ரூ. 20 லட்சம் செலவில் இதை ஆரம்பித்துள்ளேன்.

இந்தியாவை பற்றி தான் 90% கேள்விகள் கேட்கப்படும். குடும்பத்துடன் அமர்ந்து இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

தினமும் மாலை 7 மணி, 8 மணி, 9 மணி என 3 முறை இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயழியை பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை உண்டு”, என சுரேஷ் மேனன் கூறினார்.

Actor Suresh Menon launched My Karma mobile app You can win Cash prizes

*பேட்ட* படத்தில் தனுஷ்-அனிருத்தை இணைய வைத்த ரஜினி

*பேட்ட* படத்தில் தனுஷ்-அனிருத்தை இணைய வைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Anirudh joins together in Rajinis Petta movie3 படத்தில் தொடங்கிய தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணியாக விளங்கியது.

இதனையடுத்து தனுஷ் தயாரித்த படங்களிலும் நடித்த படங்களிலும் அனிருத்தே இசையமைப்பாளராக இருந்தார்.

எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணி புரிந்தனர்.

ஆனால் மாரி படத்திற்கு இவர்கள் இணையவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இணைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இளமை திரும்புதே என்ற பாடலை தனுஷ் எழுதியுள்ளார். அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பேட்ட படத்தின் பாடல்கள் நாளை சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

Dhanush and Anirudh joins together in Rajinis Petta movie

petta songs track list

Breaking அதிரடி தலைப்புடன் மீண்டும் தினேஷுடன் இணைந்த ரஞ்சித்

Breaking அதிரடி தலைப்புடன் மீண்டும் தினேஷுடன் இணைந்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith titled his next production as Irandam Ulaga Porin Kadaisi GUNDUஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, தயாரிப்பாளர் ரஞ்சித் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரஞ்சித் தினேஷ், கபாலி காலா ரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கிறது.

“இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.

கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த் ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிறார்கள். பாடல்களை உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் எழுதுகிறார்கள். கலை இயக்குனராக ராமலிங்கம் பணி புரிகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் தான் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி-யில் தினேஷை நாயகனாக நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith titled his next production as Irandam Ulaga Porin Kadaisi GUNDU

*அட்டு* பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக்

*அட்டு* பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Shariq join hands with Attu movie director Rathan Linga‘அட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படமாக ‘உக்ரம்’ என்கிற படம் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக உள்ளது .

அண்மையில் வந்த படங்களில் பட உருவாக்கத்தில் கவனிக்கப்பட்டு பேசப்பட்ட படம் ‘அட்டு’. ரத்தின் லிங்கா இப்படத்தை இயக்கியிருந்தார்.

திறமைசாலிகள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கவனம் பெறுவர். அந்த வகையில் இவரது அடுத்த படமான, ‘உக்ரம் ‘படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
.
இப்படத்தின் நாயகனாகப் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார். நாயகியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.

சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

படத்துக்கு ஒளிப்பதிவு துரை K.C. வெங்கட், இசை – பூ பூ சசி, கலை இயக்கம் – சுரேஷ் கேலரி, படத்தொகுப்பு – ப்ரவீன் உள்ளிட்டோர் இயக்குநருடன் கைகோர்த்துள்ளனர்.

தயாரிப்பு: ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த்

Bigg Boss fame Shariq join hands with Attu movie director Rathan Linga

கடமான் பாறை-க்கு எதிர்பார்த்த மாதிரியே ஏ சர்ட்டிபிகேட் கிடைச்சிட்டு… : மன்சூர் அலிகான்

கடமான் பாறை-க்கு எதிர்பார்த்த மாதிரியே ஏ சர்ட்டிபிகேட் கிடைச்சிட்டு… : மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali Khans Kadamaan Paarai censored A certificateமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ்.
இசை – ரவிவர்மா
பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார் ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.

கடமான் பாறை படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இது பற்றி குறிப்பிட்டுள்ள மன்சூரலிகான்…

நான் எதிர்பார்த்ததுதான். என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது. அதனால் “ A “ தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன் சரியாக கிடைத்திருக்கிறது.

காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கு படத்தில்.” என்கிறார் மன்சூரலிகான்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடை பெற உள்ளது.

Mansoor Ali Khans Kadamaan Paarai censored A certificate

டிக் டாக் தளத்தில் ஆரி & ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் பட ப்ரொமோஷன் ரிலீஸ்

டிக் டாக் தளத்தில் ஆரி & ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் பட ப்ரொமோஷன் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aari aishwrya duttaஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு.

விரைவில் படத்தின் தலைப்பும் டிக் டாக் தளத்தில் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தினை S.S.ராஜமித்ரன் இயக்குகிறார். இவர் ‘அய்யனார்’ என்ற படத்தை இயக்கியவர். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த ப்ரொமோஷன் வீடியோ ரிலீஸ் குறித்து பட நாயகன் ஆரி கூறியதாவது :

இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ஒரு படத்தின் ப்ரொமோஷன் வீடியோ டிக் டாக்கில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களும் தங்களோட வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை கடந்தே வந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய காதலை முதலில் கடக்கும் பருவம் இளமைப் பருவம் என்பதால் இன்னும் சுவாரஸ்யமாக உணர்வார்கள். அப்படிப்பட்ட காதலை மையமாக வைத்து சுழலும் படம்தான் இது. ஆகவே, இப்படத்தினை எங்கள் காதல் கதை என்று சொல்லாமல் உங்கள் காதல் கதை என்று சொல்வதிலேயே படக்குழுவினராக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

காதலிக்கும் நாம் கால ஓட்டத்தால் மாறுவோம். ஆனால் காதல் எப்போதும் மாறாது. எல்லா காலகட்டத்திலும் அது இளமையாகவே இருக்கும். அப்படி ஒவ்வொருவருக்குக்குள்ளும் உலாவும் காதலை பெரிய அளவில் கொண்டாடுகிற இன்றைய இளைஞர்கள் அதிகம் கூடும் இடம் சமூக வலைதளமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் தங்களது காதல் விஷயத்துக்காக பெரிதும் பயன்படுத்தும் ‘டிக் டாக்’ தளத்திலேயே படத்தின் ப்ரொமோஷன் வீடியோவை வெளியிட்டோம். அடுத்து விரைவில் படத்தின் தலைப்பும் அறிவிக்க உள்ளோம். அதையும் இதே போல டிக் டாக் தளத்திலேயே வெளியிட உள்ளோம். இனிமேல் இந்தமாதிரி படத்தின் பர்ஸ்ட் லுக், இசை, பாடல்கள் எல்லாம் இந்த தளத்தில் வெளியாவது அதிகரிக்கும்!’’ என்கிறார், படத்தின் நாயகன் ஆரி.

More Articles
Follows