தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் உள்ள பிரபலமான விலங்குகள் பூங்காவில் ஒன்று சென்னை வண்டலூர் பூங்கா.
உயிரியல் பூங்காக்களில் அதிகளவு விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக இது திகழ்ந்து வருகிறது.
இதில் விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் விருப்பமானவர்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை மேலும் 4 மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே 2018-ம் ஆண்டு முதல் இந்த புலியை தத்தெடுத்துள்ளார். இந்த புலி வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.