தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29 அன்று காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்திய சினிமாவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று நவம்பர் 1 பெங்களூர் சென்று புனித் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“ஒரு நாள் ஒரு மேடையில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி செய்தேன். அப்போது புனித் என்னைப் பாராட்டினார்.
சில நேரங்களில் போனில் பேசுவோம். அப்போது ஒரு நாள் “உங்களை ரொம்பப் பிடிக்கும். பெங்களூருக்கு வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
எனவே அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், இப்படியொரு தருணம் நடக்கும் என நினைக்கவே இல்லை.
நிஜ வாழ்க்கையில் புனித் சார் மாதிரி நிறைய நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும். அவருடைய நல்ல உள்ளத்திற்காகவே அவர் எப்போதுமே நினைவில் நிற்பார்.
ஒரு நாயகனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் புனித் சார்.” இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.
Actor Sivakarthikeyan breaks down after paying homage to Puneeth Rajkumar in Yeshwanthpur