ஆதிவாசி குடும்பங்களுக்கு நடிகர் ராணா கொரோனா கால நிவாரண உதவி

ஆதிவாசி குடும்பங்களுக்கு நடிகர் ராணா கொரோனா கால நிவாரண உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rana daggubatiதெலுங்கில் மிக பிரபலமானவர் நடிகர்
ராணா டகுபதி.

‘பாகுபலி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

தமிழில் “பெங்களூர் டேய்ஸ்“, “ஆரம்பம்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

சமீபத்தில் வெளியான பிரபு சாலமனின் “காடன்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களையும் மருந்து பொருட்களையும் கொரோனா கால நிவாரண பொருட்களாக வழங்கி உள்ளார் நடிகர் ராணா.

Actor Rana Daggubati Helps 400 Tribal Families Of Nirmal District During COVID-19 Pandemic

இண்டர்நெட் யூஸ் பண்ணாதவங்க உயிர் வாழ வேண்டாமா.? மோடிக்கு ராகுல் சரியான கேள்வி

இண்டர்நெட் யூஸ் பண்ணாதவங்க உயிர் வாழ வேண்டாமா.? மோடிக்கு ராகுல் சரியான கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi rahul gandhi18 வயது முதல் 45 வயதுக்குள் உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

பொதுமக்கள் பலரும் முன் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

கிராமப்புற மற்றும் நகரப்புறங்களிலும் கூட இண்டர்நெட் பயன்படுத்தாதவர்கள் ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் பலர் உள்ளனர்.

இதை எல்லாம் குறித்து கவலைப்படாத புரிந்துக் கொள்ளாத அரசாங்கம் COWIN இணைய தளத்தில் பதிவு செய்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என உத்தரவிட்டுள்ளது்

இதுகுறித்து ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில்..

“தடுப்பூசிக்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது. தடுப்பூசி மையம் வரும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்.”

இவ்வாறு ராகுல் காந்தி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

Rahul Gandhi slams PM Modi

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆபத்து.; தமிழக அரசு அதிரடி மூவ்

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆபத்து.; தமிழக அரசு அதிரடி மூவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mk stalin (7)தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள அறிக்கை உத்தரவில்…

“தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக இக்கல்வி ஆண்டுடன் மூடுதல் சார்ந்து உரிய விதிமுறைகளின்படி அப்பள்ளியில் பயலும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துவக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலை பள்ளிகள், உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளை மூடுதல் சார்ந்து விதிமுறைகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் , வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும்.

எனவே, அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது பள்ளி வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஜூன் 20க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.”

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN govt ordered to shut schools without recognition

கொரோனா நிவாரண நிதியாக ரூ 1 கோடி வழங்கினார் ‘தூங்காவனம்’ & ‘பழசிராஜா’ படத்தயாரிப்பாளர்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 1 கோடி வழங்கினார் ‘தூங்காவனம்’ & ‘பழசிராஜா’ படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல சிட் ஃபண்ட் நிறுவனம் ‘ஸ்ரீ கோகுலம் சிட் பண்ட் & பைனான்ஸ்’ நிறுவனம். இதன் நிறுவனர் ‘கோகுலம்’ கோபாலன்.

இந்த நிறுவனம் தவிர தமிழ்நாடு உட்பட பல இடங்களில் கல்வி நிறுவனங்களையும், ஹோட்டல்களையும், மருத்துவமனைகளையும் நிர்வகித்து வரும் ‘கோகுலம்’ கோபாலன் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட ஆவார்.

தமிழில் வெளியான ‘தூங்காவனம்’, ‘தனுசு ராசி நேயர்களே’ மலையாளத்தில் வெளியான ‘பழசிராஜா’, ‘காயங்குளம் கொச்சுண்ணி’ உள்பட பல படங்களை தயாரித்தவர் ‘கோகுலம்’ கோபாலன்.

சென்னையில் இயங்கி வரும் ‘ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோஸ்’ என்ற சினிமா நிறுவனத்தின் அதிபரும் இவரே.

இப்படி பல்வேறு துறைகளில் கால் பதித்து சிறந்த ஒரு தொழிலதிபராக விளங்கி வரும் ‘கோகுலம்’ கோபாலன் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்வதிலும் கவனம் செலுத்தி வருபவர் ஆவார்.

இப்போது நம் நாட்டில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோணா எனும் கொடிய தொற்று நோயின் இரண்டாம் அலைவரிசை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ‘கோகுலம்’ கோபாலன் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை இன்று (10-6-2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ‘கோகுலம்’ கோபாலன் வழங்கினார்.

அப்போது அவருடன் ‘கோகுலம் சிட் பண்ட்’ நிறுவனத்தின் எக்சிக்யூட்டீவ் டைரக்டர் பைஜு கோபாலன், ‘Director Operations’ பிரவீன் ஆகியோரும் இருந்தனர்.

Gokulam gopalan of Sri Gokulam studios donated Rs 1 crore to corona relief fund

gokulam gopalan

‘ஜகமே தந்திரம்’ பற்றி என்ன சொல்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.?

‘ஜகமே தந்திரம்’ பற்றி என்ன சொல்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Joju georgeஇந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் ட்ரெய்லரை Netflix கடந்த வாரம் வெளியிட்டது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, அமெரிக்க பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் மிரட்டும் கேங்ஸ்டர் சிவதாஸ், பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ், “ஜகமே தந்திரம்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியாவதில் அவர் பெரும் உற்சாகத்தில் உள்ளார்.

ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ன் தீவிர விசிறி இப்படத்தில் அவருடனும் உலகளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடனும் பணிபுரிந்ததில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

இது குறித்து ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது…

நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ன் மிகப்பெரிய விசிறி. “பீட்சா” படம் பார்த்து விட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை.

மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின.

இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை சந்தித்தேன்.

இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக். இந்த படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்து காட்ட சொன்னார்.

எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ குறித்து கூறும்போது…

படத்தில் என் எதிர் பாத்திரமாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பது எனக்கு தெரியும்.

நான் நேரில் சந்தித்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் ஆச்சர்யங்கள் பெரும் சந்தோஷமாக இருக்கிறது.

நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடன் நடிப்பது மிகப்பெரும் பெருமை என்றார்.

பீட்டர் ( ஜேம்ஸ் காஸ்மோ ) மற்றும் சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்) இருவருக்குமான சுவாரஸ்யமான போரை காணத்தவறாதீர்கள் Netflix தளத்தில் 18 ஜூன் அன்று உலகம் முழுதும் வெளியாகிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம்.

Malayalam actor Joju George talks about Jagame Thanthiram film

விஜய் பிறந்தநாளுடன் கனெக்ட்டாகும் சிம்புவின் ‘மாநாடு’ பர்ஸ்ட் சிங்கிள்

விஜய் பிறந்தநாளுடன் கனெக்ட்டாகும் சிம்புவின் ‘மாநாடு’ பர்ஸ்ட் சிங்கிள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இதில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரேம்ஜி, எஸ்ஏசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் ரம்ஜான் விருந்தாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்தார்.

எனவே அப்பாடல் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

ஆனாலும் சிம்பு ரசிகர்கள் மாநாடு பட அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில், மாநாடு பட பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டு இருந்தார்.

மிக விரைவில் ஒரு பாடல் வெளியிடப்படும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வருகிற ஜூன் 21ஆம் தேதி அந்த பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாநாடு இசை உரிமையை இப்பட இசையமைப்பாளர் யுவனே வாங்கியுள்ளார்.

இதற்கு அடுத்த நாள் ஜூன் 22 நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu first single will be released on Jun 21st

More Articles
Follows