தலைக்கனம் இல்லாத ரஜினி; நேர்மையானவர் விஜய்சேதுபதி… – ரமேஷ்திலக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு சினிமாவிலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்று வருபவர் ரமேஷ்திலக்.

விஜய்சேதுபதியுடன் பல படங்களிலும், ரஜினியும் கபாலி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

ரஜினி சார் எதையும் ஞாபகம் வைத்திருக்கிறார். கபாலி சூட்டிங்கில் நான் நடித்தபோது ‘காக்கா முட்டை’ பட பற்றி கேட்டார்.

அதுபோல் காலா சூட்டிங்கில் கபாலி படத்தில் நான் நடித்த சின்ன ரோலை ஞாபகம் வைத்திருந்தார்.

இந்த உயரத்திலும் அவர் தன்னடக்கமாக உள்ளார். கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாதவர் தலைவர். நான் அவரின் ரசிகன் என்றார்.

அதன்பின்னர் விஜய்சேதுபதி குறித்து கூறியதாவது…

‘சூது கவ்வும்’ படத்தில் அவருடன் நடித்தேன். அன்றிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. மிகவும் நேர்மையான மனிதர் அவர்.

எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றாலும் எப்போதும் போல்தான் பேசுவார். பழகுவார். ” என்றார் ரமேஷ் திலக்.

Actor Ramesh Thilak talks about Rajinikanth and Vijay Sethupathi

கிருஷ்ணா-ஐஸ்வர்யாமேனன் நடித்துள்ள வீரா செப்டம்பரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீஸாவதிற்கு 18க்கும் மேற்பட்ட படங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ‘வீரா’ படமும் களமிறங்கியுள்ளது.

கிருஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா மேனன், தம்பி ராமையா, மொட்ட ராஜேந்திரன்,யோகி பாபு,ராதாரவி மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராஜா ராமன் இயக்கியுள்ள இப்படத்தை, ‘R S இன்போடைன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

லியோன் ஜேம்ஸ் பாடலுக்கு இசையமைக்க, பின்னனி இசையை எஸ்.என். பிரசாத் அமைத்துள்ளார்

இப்படத்தில் பாக்கியம் ஷங்கர் எழுத்து பணியாற்றியுள்ளார்.

சலீம்’, ‘ஜிகர்தண்டா’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘சேதுபதி’ போன்ற வெற்றி படங்களை வெளியிட்டதின் மூலம் தங்களின் பெயரையும் திறமையையும் நிலைநாட்டிவரும் ‘ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’ தற்பொழுது ‘வீரா’ படத்தை ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனத்தோடு இணைந்து வெளியிடவுள்ளது.

இதன் ட்ரைலர் செப்டம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Krishna starring Veera will be septermber release

சுசீந்திரனின் ஏஞ்சலினா படம் சிகப்பு ரோஜாக்கள் பட சாயல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து புதுமுகங்களுடன் சூரி நடித்த மற்றுமொரு படத்தையும் இயக்கி வந்தார் சுசீந்திரன்.

அந்த படத்திற்கு ‘ஏஞ்சலினா’ என பெயர் சூட்டியுள்ளார்.

இதன் டைட்டில் போஸ்டரை சுசீந்திரனின் தாய், தந்தை இணைந்து வெளியிட்டுள்ளனர்.

ஏஞ்சலினா படத்தலைப்பின் கீழ் ரெட் ரோஸ் (சிகப்பு ரோஜா) என சப்டைட்டிலில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இது கமலின் சிகப்பு ரோஜாக்கள் பட சாயல் இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Suseenthirans next movie titled Angelina

மெர்சல் படத்தில் வடிவேலு-கோவை சரளா கேரக்டர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சச்சின், பகவதி, வசீகரா, வில்லு உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் நடித்தவர் வடிவேலு.

இந்த படங்களில் இவர்களது காமெடி அதிகளவில் பாராட்டப்பட்டது.

தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் மெர்சல் படத்தில் இணைந்துள்ளனர்.

இதில் வடிவேலுவின் நடிப்பு மிக அற்புதமாக வந்துள்ளதை தெரிவித்திருந்தார் இயக்குனர் அட்லி.

இந்நிலையில் வடிவேலு மற்றும் கோவை சரளா கேரக்டர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய்யின் வளர்ப்பு தந்தையாக வடிவேலுவும் தாயாக கோவை சரளாவும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Vadivelu and Kovai Sarala character updates in Mersal movie

பாலாவை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை ஜோதிகா சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.

12 ஆண்டுகளுக்கு பின்னர் 36 வயதினியே படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இதனையடுத்து பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் மற்றும் பாலா இயக்கத்தில் நாச்சியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் மகளிர் மட்டும் படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

After Bala diretion Jyothika teams up with Maniratnam

குரங்கு பொம்மை பட நன்றி கூறும் விழாவில் குமுறிய விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், டெல்னாடேவிஸ், குமரவேல், பி.எல்.தேனப்பன், கல்கி உள்ளிட்டோர் நடித்த படம் குரங்கு பொம்மை.

கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இதற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகி தவிர மற்றவர்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது பட நாயகன் விதார்த் பேசியதாவது…

படத்தின் வெற்றி எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இதற்கு முன் வெளியான என்னுடைய குற்றமே தண்டனை படம் நன்றாக இருந்தாலும், அதற்கு விளம்பரங்கள் என்னால் செய்ய முடியவில்லை.

ஆனால் இந்த குரங்கு பொம்மை படத்திற்கு நல்ல ப்ரோமோசன் இருந்தது.

படம் நன்றாக உள்ளது என பாராட்டுக்கள் தொடர்ந்தாலும் நாளை நிறைய படங்கள் வெளியாகவுள்ளதால் இந்தப்படம் தியேட்டரில் ஓடாது. அதான் வருத்தமாக உள்ளது.

நல்ல படங்களுக்கு தியேட்டர்காரர்களும் ஆதரவு தர வேண்டும். அதை பத்திரிகையாளர்கள் நீங்களும் வலியுறுத்த வேண்டும்” என்று பேசினார்.

Actor Vidharth emotional speech at Kurangu Bommai Thanks Giving meet

More Articles
Follows