தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் டாக்டரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர் மக்கள்.
அந்த ஓட்டுனரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நடிகர் ராஜ்கிரண் தன் கண்டத்தை தெரிவித்துள்ளார்.
எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது, மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது… தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், யாரைப்பற்றியும் கவலைப்படாமல், “தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே” என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான், என்றால், இஸ்லாமியனாகப்பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.
இதைப் போன்ற கொடுமைகளுக்கு, கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்..” என தெரிவித்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.
Actor Rajkiran condemns disruption of Chennai Dr Simons funeral