தனுஷ் சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள்.

நடிகர்கள் தனுஷ், விஷால், விஷ்ணு, சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பலரும் படங்களை தயாரித்து வருகின்றனர்.

இதில் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்காத நடிக்காத படத்தையும் தயாரித்து வருகின்றனர்.

அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ மை கடவுளே’ படத்தை அப்பட நாயகன் அசோக் செல்வன் அவரின் அக்காவுடன் இணைந்து தயாரித்திருந்தார்.

விரைவில் நடிகர் பிரசன்னாவும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இதை ரசிகர்களுடன் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.

அந்த படம் ‘கண்ட நாள் முதல் 2’ படமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

100 ரூபா கொடுங்க பாடுறேன்.. ரசிகர்களிடம் SPB கேட்க என்ன காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நம் அரசு.

இதற்கு கோடிகணக்கில் பணம் தேவைப்படுவதால் மக்களும் நிவாரண நிதியை அளிக்கலாம் என மத்திய மாநில அரசுகள் கேட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியை திரட்டுவதற்கு புதிய பாடல் முயற்சியை துவக்கியுள்ளார் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம்.

ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை கேட்க விரும்பினால் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தர வேண்டும்.

அதை தன் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்கிறாராம்.

இதுவரை சுமார் 5 லட்சம் வரை அவர் நிதி திரட்டியுள்ளாராம்.

100 ரூபாய் மிகவும் குறைவான தொகை என்பதால் பலரும் கேட்பார்கள். இதனால் நிறைய நிதி திரளும் என்பதே எஸ்பி.பியின் திட்டமாகும்.

100 ரூபாய்க்கு அதிகமாக கொடுப்பவர்கள் தாராளமாகக் கொடுக்கலாம் எனவும் எஸ்பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கொரோனா போர்: ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு லைட்டை ஆஃப் செய்ய மோடி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் மோடி,

இந்த உத்தரவு அமலுக்கு வந்து இன்று மார்ச் 3ஆம் தேதியோடு 10 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வீடியோ வாயிலாக மோடி நாடு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், ‘ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.

முன்னெப்போதும் இல்லாத கட்டுப்பாடு ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ளது.

நாம், எடுக்கும் நடவடிக்கைகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும்.

வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் உருவம்.

வருகிற ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் உங்கள் வீட்டு விளக்கை அணையுங்கள்.

அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும்.

யாரும் தெருவுக்கு வந்து இதனை செய்ய வேண்டாம். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

PM Modi asks people to light lamps on 5th April at 9 pm this Sunday

மேரேஜ் இப்போ இல்ல.. ஒன்லி டேட்டிங்.. விஷ்ணு லவ்வர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை காதலித்து 2018ல் திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணுவிஷால்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் கருத்து வேறுபாட்டினால் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இவர்களை நிறைய படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை..

இந்த நிலையில் ஜுவாலா கட்டா தன் சமீபத்திய பேட்டியில்…

நாங்கள் டேட்டிங் செய்து வருவது உண்மைதான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம். ஆனால் இப்போது இல்லை.” என தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது பிரபுதேவா நடிக்கும் பகீரா என்ற படத்தை இயக்குகிறார்.

கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

பகீரா படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

ஒருவர் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர். தற்போது மற்றொரு நாயகியாக காயத்ரி நடிக்கிறாராம்.

விஜய் சேதுபதி நடித்த நடுவுல சொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

3வது ஹீரோயின் யார்? என்ற விவரம் விரைவில் தெரிய வரும்.

பால் & காய்கறிகளை இலவசமாக வழங்கும் தளபதி விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 9 நாட்களாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களை வீட்டிலேயே அடங்கி கிடக்க அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல கூட மக்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை வழங்கியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து வடசென்னை விஜய் ரசிகர்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பால் பாக்கெட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.

பால் இல்லாமல் கஷ்டப்பட்ட குழந்தைகளுக்கு விஜய் ரசிகர்கள் உதவி பேருதவியாக உள்ளது என அங்குள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Vijay fans helping poor those who suffer in Corona lock down

More Articles
Follows