பத்மா சேஷாத்ரி பாலியல் விவகாரம்..: விஷால் & காயத்ரி கருத்து மோதல்.; எந்த நடிகை ஓடினார்? என நந்தா கேள்வி

பத்மா சேஷாத்ரி பாலியல் விவகாரம்..: விஷால் & காயத்ரி கருத்து மோதல்.; எந்த நடிகை ஓடினார்? என நந்தா கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal gayathri raguramதமிழகத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் 3 மாணவிகள் அதே ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.

இதனிடையில் இது குறித்து சமீபத்தில் நடிகர் விஷால் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதில் … “இத்தகைய கொடூரங்களை செய்யும் ஆசிரியர்களை தூக்கில் போடவேண்டும் என்றார்.

விஷாலின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தன் சமூக வலைத்தளத்தில்…

’சினிமாவில் நுழையும் பல நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன, குறிப்பாக நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியுள்ளீர்கள், உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார். பல நடிகைகள் உங்களிடம் இருந்து ஓடி இருக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

காயத்ரியின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஷாலின் நண்பரும் நடிகருமான நந்தா அவரின் கருத்தை தெரிவித்துள்ளார்.

விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அரசியலுக்காக முட்டாள்தனமான கருத்து கூற வேண்டாம் என தெரிவித்துள்ளார் நந்தா.

’முடிந்தது முடிந்ததுதான், அந்த பிரச்சனையிலிருந்து மீண்டுள்ள அவர்களின் எதிர்காலத்தை நான் கெடுக்க விரும்ப மாட்டேன்’ என காயத்ரி இதற்கு பதிலளித்துள்ளார்

Actor nandha reply to Actress Gayathri Raghuram

சூர்யா – கார்த்தி பட நடிகை பிரணிதா ரகசிய திருமணம்.; ஓ இதான் காரணமா.?!

சூர்யா – கார்த்தி பட நடிகை பிரணிதா ரகசிய திருமணம்.; ஓ இதான் காரணமா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pranithaபத்து வருடங்களுக்கு முன் ரிலீசான ‘உதயன்’ என்ற பட மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் பிரணிதா சுபாஷ்.

இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

அதன் பின்னர் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரணிதாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையான திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபலங்கள் எவருக்குமே திருமண அழைப்பிதழ் கொடுக்கலையாம்.

ஒரு நண்பர் மூலமாக பிரணிதாவின் திருமணப் புகைப்படங்கள் வெளிவந்த பிறகுதான் நடிகைக்கு திருமணம் நடைபெற்ற விஷயமே வெளியில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் யாருக்கும் சொல்லாமல் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

காதல் மற்றும் பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம் இது என கூறப்படுகிறது.

பெரும்பாலும் தன் பெர்சனல் விஷயங்களை வெளியே சொல்வது பிரணிதாவுக்கு பிடிக்காதாம்.

இவருக்கு வசதியாக கொரோனா ஊரடங்கும் இணைந்து விட்டதால் இந்த ரகசிய ஏற்பாடாம்.

வாழ்த்துக்கள் பிரணிதா…

Actress #PranithaSubhash ties the knot with businessmen #NithinRaju in a private wedding ceremony yesterday.

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு சமக தலைவர் சரத்குமார் பாராட்டு

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு சமக தலைவர் சரத்குமார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarath kumar mk stalinகோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார் முதல்வர் முக. ஸ்டாலின்

சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் கேட்டு கொண்டார்.

அப்போது ’PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா சிகிச்சை பிரிவில் நேரடியாக முதல்வரே ஆய்வு மேற்கொண்டது மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் அவரது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது…

“கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தது மட்டுமன்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டதை வரவேற்கிறேன்.

கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக தலா 5 லட்சம் வங்கியில் வைப்புத்தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான பணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Sarath Kumar praises CM MK Stalin

‘மரகத நாணயம் 2’ படத்திற்கு ரெடியான டைரக்டர் ஏஆர்கே சரவணன்

‘மரகத நாணயம் 2’ படத்திற்கு ரெடியான டைரக்டர் ஏஆர்கே சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maragatha naanayamஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், முனிஷ்காந்த், கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘மரகத நாணயம்’.

காமெடி பேண்டஸி திரைப்படமாக உருவான இப்படத்தை இயக்குனர் ஏஆர்கே சரவணன் உருவாக்கியிருந்தார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஆக்செஸ் ஃபிலிம்ஸ் டில்லி பாபுவிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

தயாரிப்பாளரும் இரண்டாம் பாகத்தை தயாரிக்க அவர் ஓகே சொல்லியுள்ளார்.

சமூக வலைதளத்தில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார் சரவணன்.

மரகத நாணயம் 2 படத்திற்கு முன்பாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்கவிருக்கிறாராம் சரவணன்.

maragatha naanayam 2 is on cards ?

ஹிட் கொடுத்த இயக்குனர்களுக்கு டிக் போடும் நடிகர் தனுஷ்

ஹிட் கொடுத்த இயக்குனர்களுக்கு டிக் போடும் நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushநடிகர் விவேக் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு “எப்போவாச்சும் ஹிட் கொடுத்தா ஓகே.. எப்போதுமே ஹிட் கொடுத்தா எப்படி..?” என தனுஷிடம் கேட்டு இருந்தார்.

அண்மைக்காலமாக தனுஷின் படங்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இணைந்து வருவதால் இப்படி கேட்டு இருந்தார் விவேக்.

தனுஷின் கதை தேர்வும் இயக்குனர்களும் தேர்வும் அதற்கு மிகப்பெரிய காரணம் எனலாம். மேலும் ஓரிரு ஹிட் பட தரும் அறிமுக டைரக்டர்களை தேடி பிடித்து அவர்களை டிக் செய்கிறாராம் தனுஷ்.

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த பாலாஜி மோகனுக்கு மாரி பட வாய்ப்பை கொடுத்தார் தனுஷ்.

ஹரி ஓம் என்கிற ஒரு குறும்பட இயக்குனர் பரத்பாலாவுக்கு ‘மரியான்’ பட வாய்ப்பை கொடுத்தார்.

எதிர்நீச்சல் & காக்கிச் சட்டை பட இயக்குனர்
துரைசெந்தில் குமாருக்கு கொடி, பட்டாஸ் என 2 பட வாய்ப்பை கொடுத்தார் தனுஷ்.

வெற்றிமாறனை பற்றி சொல்ல வேண்டாம். அவர் கதை சொன்னால் உடனே ஓகே சொல்லிடுவார் தனுஷ்.

பரியேறும் பெருமாள் படம் வெளியான சமயத்தில் மாரி செல்வராஜை பாராட்டி தனக்கான ஒரு கதை ரெடி செய்ய சொன்னார் தனுஷ்.

அதன்படியே தாணு தயாரிப்பில் ‘கர்ணன்’ படம் உருவானது.

தனுஷின் அடுத்த டிக் யாருக்கோ..?? நீங்களே யூகித்து கொள்ளுங்கள்..

Updates on actor Dhanush next film director

தனது மகனுக்கு GUCCI என பெயர் வைத்த திருமணமாகாத நடிகை வரலட்சுமி

தனது மகனுக்கு GUCCI என பெயர் வைத்த திருமணமாகாத நடிகை வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பலரது வீட்டில் செல்லப்பிராணி என்றால் அது நாய்தான்.

பலரது வீட்டில் நாய்கள் வளர்ப்பதை பார்த்திருப்போம்.

அதுவும் நடிகர் – நடிகைகளுக்கும் நாய்க்கும் உள்ள பாசம் உறவு நாடறிந்த ஒன்றாகும்.

தெரு நாய்களுக்காக நடிகை த்ரிஷா நடிகர் விஷால் என பலரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி, எனது மகன் என்று தனது வளர்ப்பு நாயை அறிமுகப்படுத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தனது நாய்க்கு Gucci என்று பெயர் வைத்துள்ளார்.

அந்த நாயை பின்தொடர Guccivaralaxmi என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அக்கௌண்ட்டும் தொடங்கியுள்ளார் வரலட்சுமி.

Actress Varalaxmi revealed her son name

Varalaxmi

More Articles
Follows