தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் 3 மாணவிகள் அதே ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.
இதனிடையில் இது குறித்து சமீபத்தில் நடிகர் விஷால் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதில் … “இத்தகைய கொடூரங்களை செய்யும் ஆசிரியர்களை தூக்கில் போடவேண்டும் என்றார்.
விஷாலின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தன் சமூக வலைத்தளத்தில்…
’சினிமாவில் நுழையும் பல நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன, குறிப்பாக நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியுள்ளீர்கள், உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார். பல நடிகைகள் உங்களிடம் இருந்து ஓடி இருக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
காயத்ரியின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஷாலின் நண்பரும் நடிகருமான நந்தா அவரின் கருத்தை தெரிவித்துள்ளார்.
விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அரசியலுக்காக முட்டாள்தனமான கருத்து கூற வேண்டாம் என தெரிவித்துள்ளார் நந்தா.
’முடிந்தது முடிந்ததுதான், அந்த பிரச்சனையிலிருந்து மீண்டுள்ள அவர்களின் எதிர்காலத்தை நான் கெடுக்க விரும்ப மாட்டேன்’ என காயத்ரி இதற்கு பதிலளித்துள்ளார்
Actor nandha reply to Actress Gayathri Raghuram